Wednesday, November 4, 2009

அம்மா சொல்படி ராஜூ: அட்டை:18: ...

அம்மா சொல்படி ராஜூ: (‘...’) பகுதி 18: 3 11 2009

(‘எழுத முடியல்லையே ...’)

(அப்போது என் புருஷன் க்யாம்பு போயிருந்தார் ...) என்ன செய்வது என்று கவலைப்பட்டேன். மறுநாள் வந்து விட்டார். அவர் உடனே டாக்டரை அழைத்து வந்தார். டாக்டர் பார்த்து இது டைபாயிட் மாதிரி இருக்கிறது. ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்வது நல்லது என்று சொன்னார். என் புருஷனுக்கு அந்த ஊர் புதுசு. நாம எப்படி ஆஸ்பத்திரியில் சேர்ப்பது என்று கவலைப்பட்டார். ஆனால், அங்கு ஒரு முதலியார் ஸ்டாம்பு வாங்கி எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருப்பார். அவரிடம் நாங்களும் கவர், கார்ட் எல்லாம் வாங்குவோம். அதனால் அவர் தான் கொஞ்சம் தெரிந்தவர். அவர் எதிர்பாராதபடி பெரிய பையனுக்கு ஜுரம் என்று கேழ்விப்பட்டேன். பார்க்கலாம் என்று வந்தேன் (என்று) எங்கள் வீட்டு மாடிக்கு வந்தார். அவர் பெயர் தெய்வநாயகம் பிள்ளை. அவர் வந்தவுடன் நான் தெய்வநாயகமே84 வந்தாச்சு; கவலையில்லை என்று சொன்னேன். அவர் பார்க்கும்போது மூன்று பேருக்கும் ஜுரம். அதனால் அவர் தான் போய் பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில் பெட் இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன் என்ரு சொன்னார். தவிற, எனக்கு தெரிந்த டாக்டர் பரமசிவம் இருக்கிறார். அவரைப் பார்த்து வந்து சொல்கிறேன் என்ரு சொல்லிவிட்டு அவர் ஆஸ்பத்திரிக்கு போய் பார்த்து வந்து சொன்னார். பெட் மூன்று பேருக்கும் இல்லை. ஆனால் போய் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனார். மறுநாள் தான் போவதாக அவர் சொன்னார். அதற்குள் மூன்றாவது பிள்ளைக்கு ஜாஸ்தியாகி மூளையில் செப்டிக் ஆகி உளருகிறான். எனக்குப் பயமாக இருக்கிறது. கவலையாகவும் இருக்கிறது. என் புருஷன் என்ன செய்வார். மறு நாள் தெய்வநாயகம் பிள்ளை வந்து ஆஸ்பத்திரி போகலாமா என்று கேட்டார். உடனே புறப்பட ஏற்பாடு. அவரே போய் இரண்டு மாட்டு வண்டி அழைத்து வந்தார். ஒரு வண்டியில் பெரியவனையும், இரண்டாவது பிள்ளையையும் சேர்த்து கொண்டு போகிறோம். மற்ற ஒரு வண்டி மூன்றாவது, பார்த்தசாரதியைக் கொண்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய்ச் சேர்த்தோம். ஏதோ பெருமாளோட அருளால் பெட் கிடைத்தது. மூன்று பேரையும் சேர்த்துத் துணைக்கு என் புருஷன் தான் இருந்தார். நான் போகமுடியாது. ஆனால் குழந்தைகளைப் பார்க்கப் போவேன். அப்போது பெரிய பையனுக்கு தலையில் ஐஸ் வைத்திருந்தார்கள். அடுத்தவன் நினைவு இல்லாமல் தூங்கிக் கொண்டு இருந்தான். மூன்றாவது பையனுக்குத்தான் ரொம்பவும் ஸீரியஸ்ஸாக இருந்தது. அபோது85 நான்

அவனைப் பார்த்துக்கொள்கிறேன் என்று என் புருஷனை வீட்டுக்கு அனுப்பி சாப்பாடு சாப்பிட்டு விட்டு எனக்குக் காப்பி மாத்திரம் (கொண்டு) வாருங்கள் என்று அனுப்பி விட்டு நான் மூன்றாவது பையனை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் பையன் பிழைப்பான் என்று எனக்குத் தோன்றவில்லை. இருந்தாலும் பாலை வாயில் ஸ்பூனால் ஊத்திக்கொண்டிருந்தேன் . வீட்டில் சமையல் காப்பி இதெல்லாம் செய்வதற்கு பெரிய பெண் இருந்தாள் அவளுக்கு 13 வயது இருக்கும். அவள் தான் எல்லாம் செய்து கொடுத்து அனுப்புவாள். ஆஸ்பத்திரிக்கு அதே போல் காலை 6 மணி சுமாருக்கு என் புருஷனிடம் காப்பி கொடுத்து இருந்தாள். நான் சாப்பிட்டுட்டு பிள்ளையிடம் உட்கார்ந்திருந்தேன். ஆனால் பையன் கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை. அதற்கு 7 மணி சுமாருக்கு என்னை என் புருஷன் நீ சாப்பிட்டு வா என்று வீட்டுக்குப் போகச் சொன்னார். நான் வேண்டாம் என்று சொன்னேன். அவர் கேழ்க்கவில்லை. பிறகு நான் வீட்டிற்குள் போவதுற்குள் என் புருஷன் வந்து அவன் இறந்து விடுவான் போலிருக்கிறது என்று சொல்லிவிட்டு காரைக்குடிக்கும், இன்னம்பூருக்கும் தந்தி கொடுத்தார். ஆனால் நான் போய் பார்ப்பதற்குள் பையன் இறந்து விட்டான், அவனை அவர்கள் வெளியில் கொண்டு விட்டு திரை போட்டு விட்டார்கள் ...

(‘...’)

No comments:

Post a Comment