Monday, March 4, 2013

அன்றொரு நாள்: நவம்பர் 11: 11~11~11~11




அன்றொரு நாள்: நவம்பர் 11: 11~11~11~11
7 messages

Innamburan Innamburan Fri, Nov 11, 2011 at 5:06 PM
To: mintamil
Cc: Innamburan Innamburan

  • அன்றொரு நாள்: நவம்பர் 11
11~11~11~11
இன்று லக்ஷக்கணக்கான பிரிட்டானியர்கள், நவம்பர் 11, 1918 அன்று காலை 11 மணிக்கு முதல் உலக யுத்தம் முடிவடைந்ததின் நினைவாகவும், அந்த யுத்தத்திலும், இரண்டாவது உலக யுத்தத்திலும், 385 வீரர்களை பலி வாங்கிய ஆஃப்கனிஸ்தான் சண்டைகள் உள்பட, பல போர்களில் மாண்ட  பிரிட்டீஷ் துருப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று காலை 11 மணிக்கு இரண்டு நிமிடங்கள் மெளனம் காத்தனர். லண்டனில்  வீரர்களின் ட் ரஃபால்கர் நினைவு மண்டபத்தில் வீரவணக்க நிகழ்வு நடந்தது. அந்த கட்டிட அமைப்புப்படி காலை 11 மணிக்கு சூரிய வெளிச்சம், அன்று மட்டும், ஞாபாகர்த்த சிலையில் மீது படியும். ராணுவ தளபதிகளுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நெதர்லாந்தை சேர்ந்த அட் ரியன் கீஸ் (85 வயது: 1944~49 கடற்படையில் பணி புரிந்தவர்), ‘எங்கள் நாட்டை உய்விக்க வந்த பிரிட்டீஷ் ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்க வந்தேன்’ என்றார். ஆஃப்கனிஸ்தானில் பாஸ்டியன் முகாம் என்ற இடத்தில் நடந்த நிகழ்வில் ராணுவ அமைச்சர் கலந்து கொண்டு, வீர வணக்கம் செலுத்தினார். நாடெங்கும் இந்த நிகழ்வு நடந்தது. இங்கு ‘பாப்பி அப்பீல்’ என்று ஒரு வழக்கம் உண்டு. எல்லாரும் ‘பாப்பி’ மலர் போன்ற காகிதப்பூவை, மாஜி ராணுவர் நிதிக்கு நன்கொடை கொடுத்து, வாங்கி அணிந்து கொள்வர்.  அவற்றை நினைவு மண்டபத்தில் சமர்பிப்பர். சிறுவர்கள் பங்கேற்கும் படம் ஒன்று மட்டும் இங்கே.
Picture Attached
Children placed poppies in one of the fountains at Trafalgar Square after the two minute silence

ஒரு வரலாற்று பதிவு. முதல் வருட நிகழ்வு நவம்பர் 11, 1919 அன்று. மான்செஸ்டர் கார்டியன் 12 11 1919 இதழில், “...11 மணி அடித்ததும், மாயாஜாலம் போல. ட் ராம் வண்டிகள், மோட்டர் வண்டிகள், குதிரை வண்டிகள் எல்லாம் இருந்த இடத்தில் உறைந்த வண்ணம். ஒருவர் குல்லாயை எடுக்க, யாவரும் தலை குனிந்து வீரவணக்கம் செய்தார்கள். ஒரு மூலையில் ஒரு கிழவர், மாஜி ராணுவ வீரர், அட்டென்ஷனில் நின்றார். ஒரு கிழவி அழுதாள். மயான அமைதி...........”
ஏதோ ஆங்கில மோகத்தில் நான் இதை எழுதவில்லை. இன்றைய நிகழ்வு. வரலாறு பேசுகிறது. மேலும், தேசாபிமான விழிப்புணர்ச்சி ஏற்பட, இத்தகைய நிகழ்வுகள் உதவும். ஜனவரி 30ம் தேதி இது போன்ற இந்திய நிகழ்வை பெரும்பாலோர் கண்டு கொள்வதில்லை. அந்த ஆதங்கத்தில் எழுதினேன்.
இன்னம்பூரான்
11 11 11 
பி.கு.
இன்று தேசபக்தர் மெளலானா அப்துல் கலாம் ஆஸாத் அவர்களின் பிறந்த நாள். அவரை பற்றி எழுத தொடங்கும் போது, ‘Resisting Colonialism & Communal Politics: Maulana Azad and the Making of the Indian Nation’ என்ற சமீப காலத்து நூல் ஒன்றை பற்றி படித்தேன். இது வரை கூறப்பட்ட வரலாற்றின் சில பகுதிகள் மீள்பார்வைக்கு உட்படவேண்டியிருக்கும். எனவே ஆய்வு காலம் எடுக்கும், அதனால், பிறகு தான் அவரை பற்றி எழுதவேண்டும்.
உசாத்துணை:

11 11 11 11.pages
72K

Geetha Sambasivam Fri, Nov 11, 2011 at 7:16 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஜனவரி 30ம் தேதி இது போன்ற இந்திய நிகழ்வை பெரும்பாலோர் கண்டு கொள்வதில்லை. அந்த ஆதங்கத்தில் எழுதினேன்.//

உங்கள் மனம் இந்தியாவில் தான் இருக்கிறது என்பது தெரியும்.  ஆகவே தவறாய் நினைக்க மாட்டோம்.  மேலும் நற்பழக்கம் யாரிடமிருந்தாலும் ஏற்றுக்கொள்வதே முறை. நன்றி பகிர்வுக்கு.  ஆஸாத் பற்றி எழுதுங்கள்.  அவரை இரட்டை வேடம் போடுபவர், மறைமுகமாகப் பாகிஸ்தானின் ஆதரவாளர் என்றே கேள்விப் பட்டேன்.  அது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியாது.

2011/11/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>
இன்று தேசபக்தர் மெளலானா அப்துல் கலாம் ஆஸாத் அவர்களின் பிறந்த நாள். அவரை பற்றி எழுத தொடங்கும் போது, ‘Resisting Colonialism & Communal Politics: Maulana Azad and the Making of the Indian Nation’ என்ற சமீப காலத்து நூல் ஒன்றை பற்றி படித்தேன். இது வரை கூறப்பட்ட வரலாற்றின் சில பகுதிகள் மீள்பார்வைக்கு உட்படவேண்டியிருக்கும். எனவே ஆய்வு காலம் எடுக்கும், அதனால், பிறகு தான் அவரை பற்றி எழுதவேண்டும்.
உசாத்துணை:

Innamburan Innamburan Fri, Nov 11, 2011 at 8:38 PM
To: mintamil@googlegroups.com
நன்றி. ஒரு நிகழ்வு நினைவலையில். 1984 ஜனவரி 30ம் தேதி காலை 11 மணி நிகழ்வு அலுவலகத்தில். அவரவர் இடத்தில் என்பதால், நான் நாலு சுவர்களுக்குள் நிற்காவிட்டால், யாருக்கு தெரியும்?  நானோ முன்னாலேயே வெளியில் வந்து எல்லாரையும் கூட்டி பொதுமன்றத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த இரண்டு நிமிடங்களுக்குள் பேசிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை, இரண்டு அசடுகளுக்கு. நான் அவர்களை விளாசி விட்டேன், கடுஞ்சொற்களால். அந்த காலத்தில் ட் ரேட் யூனியன் பிரச்னை அதிகம். யூனியன் தலைவர் நான் மன்னிப்பு கேட்காவிட்டால், ஹர்த்தால் செய்யப்போவதாக பயமுறுத்தினார். ஸ்தலத்தில் என்னை விட மூத்த அதிகாரி ஒருவர் இருந்ததால், அதிகப்படி பிரச்னை. தரதரவென்று அந்த யூனியனாரை காரியாலய மையத்துக்கு இழுத்து வந்து, காந்திஜியின் படத்தின் கீழ் நின்று பயமுறுத்த சொன்னேன். உடனடி பதில் கொடுப்பதாக வாக்கு அளித்தேன், பெரிய கூட்டத்தின் முன். அவர் வாபஸ்ஸ்ட். எனக்கு போனஸ் அன்றிலிருந்து யூனியன் பிரச்னை இல்லை.
2. மெளலானா ஆஸாத் இஸ்லாமிய கோட்பாடுகளை முற்றிலும் அறிந்தவர். உண்மையான தேசபக்தர். புதிதாகப் பேசப்படுவது கூட அவருடைய தேசபக்தியை சந்தேஹிக்கவில்லை. ஜின்னா வெறுத்த இஸ்லாமியர் யார் என்றால், அது இவர் தான்.
[Quoted text hidden]

கி.காளைராசன் Sat, Nov 12, 2011 at 7:15 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2011/11/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
 நான் அவர்களை விளாசி விட்டேன், கடுஞ்சொற்களால். அந்த காலத்தில் ட் ரேட் யூனியன் பிரச்னை அதிகம். யூனியன் தலைவர் நான் மன்னிப்பு கேட்காவிட்டால், ஹர்த்தால் செய்யப்போவதாக பயமுறுத்தினார். ஸ்தலத்தில் என்னை விட மூத்த அதிகாரி ஒருவர் இருந்ததால், அதிகப்படி பிரச்னை. தரதரவென்று அந்த யூனியனாரை காரியாலய மையத்துக்கு இழுத்து வந்து, காந்திஜியின் படத்தின் கீழ் நின்று பயமுறுத்த சொன்னேன். உடனடி பதில் கொடுப்பதாக வாக்கு அளித்தேன், பெரிய கூட்டத்தின் முன். அவர் வாபஸ்ஸ்ட். எனக்கு போனஸ் அன்றிலிருந்து யூனியன் பிரச்னை இல்லை.
கள்ளர் பள்ளியில் மாணவர் தலைவர் அல்லவா?

அன்பன்
கி.காளைராசன்
[Quoted text hidden]

coral shree Sat, Nov 12, 2011 at 4:37 PM
To: Innamburan Innamburan
அன்பின் ஐயா,

இதில் படங்கள் வரவில்லையே? தொடுப்பும் கொடுக்கவில்லயே. மரபு விக்கியில் போடுவதற்காக படத்தின் தொடுப்பு கொடுத்தால் நலம் ஐயா. அருமையான பதிவு. நன்றி.


Innamburan Innamburan Sun, Nov 13, 2011 at 10:11 AM
To: coral shree
அட்டேச்ட்
[Quoted text hidden]

11 11 11 11.pages
72K

coral shree Sun, Nov 13, 2011 at 10:31 AM
To: Innamburan Innamburan
Sorry sir, its not opening to me. Some probs it seems.
[Quoted text hidden]

No comments:

Post a Comment