Wednesday, March 20, 2013

அன்றொருநாள்: மார்ச் 20 கதை சொல்லு...




அன்றொருநாள்: மார்ச் 20 கதை சொல்லு...
11 messages

Innamburan Innamburan Mon, Mar 19, 2012 at 6:33 PM
To: mintamil , thamizhvaasal



அன்றொருநாள்: மார்ச் 20
கதை சொல்லு...
இந்த இழை அட்லாண்டாவில் இருக்கும் ஒரு சிறுமிக்காக ஸ்பெஷல் பிரசுரம்.
கதை கேட்பதில் ஆர்வமும், கதை சொல்லியே மயக்கும் வசீகரமும் பற்றி இன்று எழுதுவதாக, உத்தேசம். சுருக்கமாக. அறிமுகம் மட்டுமே. ஏனெனில், இந்த இழையில் பல மின் தமிழர்கள், தமிழ்வாசல் காப்போர்கள், தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்பலாம். கதை சொல்ல விரும்பலாம். இரு கை தட்டினால் தானே ஒலி எழும். கேட்பவர்கள் இல்லையெனில் சொல்வதின் சுரத்து ‘விர்ரென்று’ இறங்கி விடும். காந்தம் போல் பிடித்து இழுக்கவேண்டும், கதை சொல்லி. இல்லையெனின், கேட்பவர்கள் சாய்க்கமாட்டார்கள், செவியை. கதையின் ஆதார சுருதி என்ன? குழந்தைகள்.
நிலா காய, செல்வங்கள் சூழ, கிண்ணிகளுடன் நடுவில் அமர்ந்து கொண்டு, உருண்டை சாதம் வினியோகம் செய்தபடி, பாட்டி சொன்ன கதை: வலையை கலைத்த எலி. அது ஒரு சுண்டெலி. உயிர் மீண்டது, சிங்கத்திற்கு. என்றோ காட்டிய இரக்கத்திற்கு நன்றி. இரண்டு நீதிகள்; ‘எளியவர்க்கு இரங்கு’; ‘நன்றி மறவாதே’. பாயிண்ட் மேட். கதையும் முடிந்தது; கத்திரிக்காயும் காய்த்தது. கிண்ணியும் காலி. அங்கேயே தூங்கி வழிந்த சிறுசுகளை பாயில் படுக்கவிட்டால், ஏதோ முனகுகிறதுகள். கனவிலும் கதை. 
விழுந்து, விழுந்து, சிரிக்கறதுகள், அந்த உத்திராக்ஷப்பூனை கதை கேட்டு. நகைச்சுவை மனித லக்ஷணம். தந்திரம் பல செய்யும் குள்ளநரியின் சாகசம் கேட்டு உள்ளூர மகிழ்வு. ஆனால், ஜாடிக்குள் கற்களைப் போட்டு, பாயச மட்டம் உயர, உயர, உறிஞ்சி குடிக்கும்  விஞ்ஞானி-காக்காயின் சமயோசிதம் பாசிடிவ் திங்கிங்க்! ‘புலி வரது! புலி வரது! புலி வரது!’ கதை கேட்டு சிரித்தாலும், அதில் ஒரு படிப்பினை. உரலில் தலை விட்ட மாப்பிள்ளை கதை சரியான எள்ளல்.
பஞ்சதந்திரகதைகள் விஷ்ணு சர்மா என்பவரால் 2200 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டவையாம். ஒவ்வொரு கதையும் மணி. எல்லாம் பிராணிகளை கதாபாத்திரங்களாகக் கொண்டவை. ஜாதகக்கதைகள் சாக்யமுனியுடன் தொடர்பு கொண்டவையாயினும், அவையும் பிராணிகளை முன்வைத்து நீதி போதனை செய்கின்றன. இவற்றிகெல்லாம் தாத்தா,சோமதேவபட்டர் எழுதிய கதாசரித் சாகரம். அதனுடைய தாத்தா, பிருஹத் கதா மஞ்சரி. அதனுடைய தாத்தா, குணாட்யர், பைசாசி என்னும் மொழியில் எழுதிய 'பிருஹத் கதா'. அதில் ஏழு லட்சம் சுலோகங்கள் இருந்தனவாம். ஒரு சுவையான செய்தி. ஒரிசா பாலுவுக்கு, சிவகாசி புகழ் நா. கண்ணனுக்கும் ( நேரம் கிடைத்தால்) ஆர்வமூட்டக்கூடிய செய்தி: “...பிருஹத்கதையில் வரும் பல கதைகளில் ஸ்வர்ணத்வீபம் என்னும் இடத்துக்கு இந்திய வர்த்தகர்கள் கப்பல்களில் சென்று வாணிபம் பண்ணுவதாய் வரும். ஸ்வர்ணத்வீபம் என்பது இன்றைய மலாயா தீபகற்பம். இந்த இடம் அவர்களுக்கு அக்காலத்தில் நன்கு பரிச்சயமானதாக இருந்திருக்கிறது...” (டாக்டர் எஸ். ஜெயபாரதி: உசாத்துணை)  
தாத்தா-பாட்டி கதை சொல்றதுக்குத் தடா அமுலில் இருக்கிறது! பின்ன என்ன? ஹோம் ஒர்க் பண்ணாமெ, கதை கேப்போம் என்று அழிச்சாட்டியம் பண்றதுகள். அதுக்கு என்னமோ, மின் தமிழில், பாமரகீர்த்தி என்று நாமகரணம் செய்துள்ளார்களாம்! பேசிக்கிறா! என்னமோ வ.வெ.சு. அய்யர் தான் முதல் சிறுகதை எழுதினார். புதுமைபித்தன் தான் சிறுகதை பிதாமகன் என்கிறார்கள். தற்கால இலக்கிய வரலாறு அவ்வாறு அமைந்தாலும், இராமாயண, மகாபாரத, பாகவத உபகதைகள் ஒவ்வொன்றுக்கும் சிறுகதை லக்ஷணங்கள் இருக்கின்றன என்பது தான் உண்மை. சங்க இலக்கியங்கள் செய்யுளில் அமைந்தாலும், தலைவனும், தலைவியும், பாங்கியும், பாங்கனும், நற்றன்னையும், செவிலியும் கதை மாந்தர்களே. பதிற்றுப்பத்து அரசவரலாறுகளும் கதைகளே. உபகதைகளில் கூட, மணிமேகலை அவற்றை கோர்த்து, மலர் கொத்துக்களாக அல்லவோ அளிக்கிறது.
மற்ற மொழிகளில் பார்க்கப்போனால், Grimm’s Fairy Tales, Norse Tales, Alice on the Wonderland, Narnia, Harry Potter என்று அடுக்கிக்கொண்டே போகலாம். குழந்தைகளுக்கு என்று எழுதினால், தொன்மை (mythical), புராணம், பிராணி, அதீத கற்பனை, ‘திடுக்‘ ‘திடுக்கும்’. ‘பளிச்‘ ‘பளிச்சும்‘ ஒளி வீசவேண்டும். ஒவ்வொரு படியாக ஏறி மொட்டைமாடிக்கு வந்து ஞானோதயம் வந்துவிட்டால், லா.ச.ரா. மாதிரி ‘புத்ர‘ ஜனனம்.
இன்று அழ. வள்ளியப்பா போன்ற கதை சொல்லிகளை உலக அளவில் பாராட்டும் தினம். நீங்களும், ஆளுக்கொரு பங்குக்கு, ஒரு கதை சொல்லுங்களேன். ரேன்ஜ்: ‘ஆமை-முயல் பந்தயம் ~ ஆனை.சு.குஞ்சிதபாதம் கதைகள் ~ ‘புத்ர’ . 

இன்னம்பூரான்
20 03 2012
Inline image 1

உசாத்துணை:

renuka rajasekaran Mon, Mar 19, 2012 at 6:49 PM
To: Innamburan Innamburan
சிறப்பு 
விரிப்பில் - சுறுசுறுப்பு 
சுருக்கலில் - குறுகுறுப்பு  

இங்கு மழலைகள் 
- சிரிப்பு - 
விழி விரிப்பு - மனப்பூரிப்பு 

உமது எழுத்துச் செறிவு அபூர்வமானது 
குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வேன் 
அவர்கள்  சொல்வதை உம்மிடம் மீண்டும் பகிர்ந்து கொள்வேன் 

வாழ்க பல்லாண்டு 
வணக்கம் ஐயா 
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Innamburan Innamburan Mon, Mar 19, 2012 at 6:54 PM
To: renuka rajasekaran
மிக்க நன்றி. அதை நாடித்தான், உங்களுக்கும் ஒரு நகல் அனுப்பினேன். குழந்தைகள் சொல்வது தான் எனக்கு வேண்டும். இந்த .அன்றொரு நால்' இதழ் தினன்தோறும் வருகிறது. திருமதி பவளசங்கரி தான் கருவூலம். இது வரை கிட்டத்தட்ட 300 கட்டுரைகள் வந்துளன.
நன்றி, வணக்கம்,இன்னம்பூரான்.
[Quoted text hidden]

திவாஜி Tue, Mar 20, 2012 at 12:26 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
நீங்க வேற!
பேத்திக்கு க்ருஷ்ணன் கதை சொல்லி நல்லா வாங்கிக்கட்டுக்கொண்டேன். எவ்வளவு தரம் தாத்தா நீ அப்படியே படுத்துக்கோ, நான் உன் மேல ஏறி வெண்ணை எடுக்கறேன்... தாத்தா நான் மண்ணை தின்பேன், நீ கூப்டு வாயை காட்டுன்னு சொல்லணும்...... ஊருக்கு போய் ஒரு வாரம் ஆறது, வெறீச்சுன்னு இருக்கு இப்ப!
[Quoted text hidden]
--

coral shree Tue, Mar 20, 2012 at 1:04 AM
To: Innamburan Innamburan
அன்பின் ஐயா,

பஞ்சதந்திரக் கதைகள் முளையைக் கூராக்கும் திறன் கொண்டது. தெனாலிராமன் கதைகளை இன்னும் எத்துனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நம் பரம்பரையில் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்... எத்துனை அறிவார்ந்த தத்துவங்கள்....  தன்னிலை விளக்கங்கள். குழந்தைகளுக்கு அறிவுரை சொன்னால் பிடிப்பதில்லை. இது போன்று கதைகள் மூலம் எளிதாக அவர்கள் மூளையில் ஒரு சில விசயங்களையாவது பதியச் செய்ய முடிகிறது... வழிவழியாக தொடர்ந்து வருவதும் இந்த புரிதலின் பலன் தான் அல்லவா..  அருமையான இழை. நன்றி ஐயா.

அன்புடன்

பவளா.


Tthamizth Tthenee Tue, Mar 20, 2012 at 4:54 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
கதை சொல்லிகள்  நவீன காலத்து  உத்திகளைக் கையாண்டு பழைய நீதிகளைச்  சொல்லவேண்டும்
அப்போதுதான்  இப்போது இருக்கும்  நவீனப் பேரன்மார்களும் ,பேத்திமார்களும் காது கொடுத்துக் கேட்பார்கள்.
 
மழலைகள் என்னும் இணைய தள  பத்திரிகையில்  குழந்தைகளுக்காகவே  நான் தேனி மாமா  என்ற பெயரில்  எழுதிக்கொண்டிருக்கிறேன்
 
அதில் குழந்தைகளுக்கு வேண்டிய நீதிகளை அவர்களுடன் ஒத்துப்போய் கூறிக்கொண்டு வருகிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
[Quoted text hidden]

vishalam raman Tue, Mar 20, 2012 at 8:54 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
மிக நல்ல ஐடியா . கரும்பு தின்ன கூலியா ?  நானும் மழலைகளில்  பல கதைகள்
எழுதி நூறுக்கு மேல் ஆகியிருக்கும் இன்னும் தொடருகிறேன் ..குழந்தைகளுடன்
என் 16 வயதில் ஆரம்பித்த பள்ளிப்பயணம்  ஓய்வுக்குப்பின்னும் மழலைகள்
பத்திரிக்கை ருபத்தில் அன்பு சகோதரர் ஆகிரா மூலம்  {மனதுக்குப்பிடித்த
சேவை} தொடருகிறது .அங்கு என் பெயர் இணையப்பாட்டி.............

2012/3/20 Tthamizth Tthenee <rkc1947@gmail.com>:
[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Mar 20, 2012 at 9:24 AM
To: thamizhvaasal@googlegroups.com
தமிழ்த்தேனிக்கும், இணையபாட்டிக்கும், கட்டியம் கூறி, வரவேற்கிறேன். நான் அடிக்கடி 'மழலை' பார்வையிடுவது உண்டு. அருமையான பணி. நீங்கள் இருவரும், இங்கு ஒரு கதை சொன்னால் என்ன? ரேஞ்ச் என்னவோ விஸ்தாரமாக உந்தி.
இன்னம்பூரான்
[Quoted text hidden]

vishalam raman Tue, Mar 20, 2012 at 9:29 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
கா ..கா கா...  என்று குரல் கொடுத்தபடி  படுசுட்டி  சுந்தர் தன்
கையிலிருந்த வடையை ஒரு மேடையின் மேல்வைத்தான் .இதைப்பார்த்த அம்மா காகம்
தன் பையனைப்பார்த்து  .

'இதோ பார் அந்தச்சமத்து பையன்  உனக்குன்னு ஒரு வடை வச்சிருக்கான் பார்
போய்ட்டு கொத்திண்டு வா "
என்றது .

சரியென்று சொன்னபடி காக்காயும் கீழே வந்து அதைக்கவ்விச்சென்றது ,உடனேயே
சுந்தர் திரும்ப வந்து இன்னொரு வடையை வைத்தான்.அதைப்பார்த்து திரும்ப
வந்த காக்கா  ஆச்சரியத்துடன் அவனைப்பார்த்தது

"என்ன இப்படி பாக்கறே! நீ ஒரு தடவை நரியோட புகழிலே ஏமாந்து அழகாக
வாயதிறந்து பாடினயாமே அப்படி
கா கா ன்னு பாட உன் வாயில இருந்த  வடை கீழே விழுந்துட்டதாமே என் பாட்டி
கதை சொன்னா . அதான் இந்த தடவை ஏமாறாம இருக்க ரெண்டு வடை கொடுத்திருக்கேன்
சரியா '

"ரொம்ப தாங்க்ஸ் சுந்தர்  நீ ரொம்ப நல்ல பையன் ...இந்த தடவை நான் நரிட்டே
ஏமாறமாட்டேன் '


காக்காவும் பறந்து  போய் ஒரு மரத்தில் அமர்ந்தது கழுக்குக்குக்மூக்கில்
வியர்த்தாற்போல்  நரியும்  வடை வாசனையில்  அங்கு வந்தது.
"காக்கா நீ ரொம்ப அழகாக பாடுவயாமே  ஒரு பாட்டு பாடேன் .நான் கேக்க ஆசைப்படறேன்
காகமும்  முதலிலேயே தன் காலுக்கு இடையில் வைத்திருந்த வடையைக்கீழே தள்ளிவிட்டது  .
பின் தன் வாயிலிலிருந்த வடையைக்கவனமாக தன் காலில் பிடித்துவைத்துக்கொண்டு
"கா கா கா கா என்று
பாடியது நரிக்கு ஒரே அவமானம் .காகத்தை ஏமாற்றி வடையைப்பிடுங்கும் சுகம்
....ஒரு தனி சுகம் தான்
அது நடக்காமல் பிச்சைக்குப்போடுவது போல் வடை தனக்குக்கிடைத்ததை எண்ணி வருந்தியது

"எப்படியிருக்கு என் பாட்டு ?  என்று கேட்கும் முன் நரி
வடையைக்கவ்வியபடியே ஓட்டம் எடுத்தது ''

எந்த வேலை செய்தாலும்  மூளையை உபயோகித்து  ஒரு தடவைக்கு இரண்டுதடவையாக
சிந்தித்து செயல்பட்டால் நஷ்டமில்லாமல்  நல்ல பலன் கிடைக்கும் .



2012/3/20 vishalam raman <rvishalam@gmail.com>:
[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Mar 20, 2012 at 10:48 AM
To: thamizhvaasal@googlegroups.com
வெலி குட்! அடுத்தபட்இ...
[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, Mar 21, 2012 at 10:28 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
ஆஹா, எல்லாரும் கதை சொல்லுங்க, நான் கேட்கிறேன். 

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி, தான் எங்க அப்புவுக்குப் பிடித்த பாட்டு.  கதை அவளுக்குப் புரியலை; நான் தமிழில் சொல்ல, அவள் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்க, கடைசியில் ரெண்டு பேரும் இந்தப் பாட்டை மட்டும் ஒத்துக்கொண்டோம்.

On Tue, Mar 20, 2012 at 12:03 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:


20 03 2012
Inline image 1

உசாத்துணை:

No comments:

Post a Comment