Sunday, March 31, 2013

அன்றொரு நாள்




அன்றொரு நாள்
25 messages

Innamburan Innamburan Fri, Oct 1, 2010 at 7:47 PM
To: mintamil , indic-roots@googlegroups.com

அன்றொரு நாள்

     இன்று மஹாத்மா காந்தியின் ஜன்மதினம். உலகெங்கும் அவரது நினைவாக விழாக்கள் எடுக்கப்படும். அவரது சிலைகளுக்கு  மாலை மரியாதை நடக்கும். சொற்பொழிவுகள் நிகழும். இந்தியாவில் விடுமுறையல்லவா! சிறார்கள் விளையாடுவார்கள். வயது வந்தோர் ஓய்வு எடுப்பார்கள். இந்த இடுகையை பற்றி சிந்தனை எழுந்தபோது, தொலைக்காட்சிகள், அயோத்யை பிரச்னை, கோர்ட்டார் தீர்வு, நிலவ வேண்டிய சாந்தி என அலசிக்கொண்டிருந்தன, ஸெப்டம்பர் 30, 2010 அன்றைய சாயுங்காலையில். காந்திஜிக்கு ராமன் இஷ்டதெய்வம். இந்து-முஸ்லிம் ஒற்றுமை அவருக்கு இஷ்ட மந்திரம். ‘ரஹம்’ என்ற இஸ்லாமியத்தின் நங்கூரசொல்லின் பொருள் கருணை. அதையும் இணைத்தல்லவோ, அவருடைய பஜனை அமைந்தது. அண்ணலின் விருப்பம் இனியாவது நிறைவேற வேண்டும். அறிகுறிகள் நன்கு அமைந்துள்ளன. கடந்த 36 மணி நேரத்தில், உலகளவில், 2073 கட்டுரைகள் இந்தியாவில் சாந்தி நிலவுவதை, மக்களின் சாதனையாக, புகழ்ந்தன.

     ஒரு தனிமனிதன், தன்னுடைய மனசாட்சியை மட்டுமே, பாற்கடலை கடையும் மத்தாக, வாய்மை என்ற கயிறை, கடைவதற்கான சாதனமாக வைத்துக்கொண்டு, அஹிம்சை என்ற பிரணவ உச்சாடனத்துடன், ஸ்வதேச அபிமானம் என்ற அமிர்தத்தை எடுத்து அளித்ததும், அடிமைமோஹத்திலிருந்து விடுபட்டு, இந்திய மக்கள், இந்த நோன்பில், ஒரே திரளாக திரண்டு வந்து வடம் பிடித்ததும், அமிர்தம் பருகியதும் வரலாறு. அத்தருணம், இந்த உலகமே ஆட்டம் கண்டதும் வரலாறு. 

     அந்த தனிமனிதன்: அண்ணல் காந்தி. நோன்பு தினம்: ஏப்ரல் 6, 1919. நாமகரணம்: ஸத்யாக்கிரஹ தினம். தனித்தழில் சொன்னால், ‘உண்மை மேலாண்மை ஏற்றுக்கொண்டது’. இடம்: இந்தியா முழுதும். குறிப்பாக இங்கு சென்னை நிகழ்வுகளின் அணி. அதற்கு முன் ஒரு பின்னணி. அரசு, நீதி மன்றத்தை புறக்கணித்து, மக்களில் சிலரை சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், மார்க்கம் ஒன்று வேண்டாமோ? 

     காந்திஜி மீது குறை காண்பது தற்கால நாகரீகம். அவர் மறைந்து அறுபது வருடங்கள் ஆயின. இரண்டு/மூன்று தலைமுறைகளுக்கு அவர் ஐநூறு ரூபாய் நோட்டின் சித்திரம் மட்டும்! எனினும், ஒரு வகையிலாவது அவரை போற்றவேண்டும். கறார் மேனேஜர், அவர். சட்டம் அமலுக்கு வரும் தினம் முன்பே யாவருக்கும் தெரியும் என்பதால், முன்கூட்டியே, ஏபரல் 6 தான் சத்யாக்ரஹ தினம் என்று அறிவித்து, நாடு முழுதும் பயணித்து, யாவரிடமும், ஒரு பிரதிஞ்ஞை பெற்றுக்கொண்டார் - ‘சட்டத்தை மீறவும் வேண்டும். நன்னடத்தையையும் வெளிப்படையாக காட்டவும் வேண்டும்.’ இந்த மந்திரம் காட்டுத்தீ போல் பரவியது என்கிறார், திரு.வி.க.

     சென்னையில் பலத்த ஏற்பாடு. ராஜாஜியின் தலைமையில், ஒரு கண்காணிப்புக்குழு. அக்காலம் ஃப்லெக்ஸ்போர்ட் கலாச்சாரம் கிடையாது. போஸ்டர்களும், துண்டறிக்கைகளும் மட்டும் தான். ராயப்பேட்டையும், [உறுதுணை: காமத்] தொழிலாளர்கள் பேட்டைகளும், [உறுதுணை: தண்டபாணி பிள்ளை] திரு.வி.க. அவர்களின் பொறுப்பு. ராஜாஜிக்குழுவில், திரு.வி.க.வும், கே.வி. ரங்கசாமி ஐய்யங்காரும்.  பெரம்பூரில் ஒரே கலவரம், முதல் நாளே. வ.உ.சி. யாலேயே தொழிலாளர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. ‘தமிழ் காந்தி’ திரு.வி.க. அவர்கள் மேடை ஏறி பேசினார் -வசிஷ்டர், பிரஹ்லாதன், ஏசு கிறிஸ்து,, அப்பர்! ‘வீட்டுக்கு போய், நாளை வருக.’ என்றார். கட்டுப்பட்டார்கள். கல்கி சொல்லுவார். திரு.வி.க. வுக்கு அடி பணிய, அவர் சொன்னதெல்லாம் புரிந்துகொள்ள தேவையில்லை என்று. 

     நண்பர்காள்! இது சென்னை. வைகறையில் பஜனை, நோன்பு தினத்தன்று. தவம், விழா எடுப்பது, தியாகம் ஆகியவை தான், முக்கிய அம்சங்கள். அலை அலையாக, மக்கள் வேப்பமரத்தடியில் (அங்கு தான் தி.வி.க. அவர்களின் ‘தேசபக்தனின்’ சாது அச்சுக்கூடம்.) தேசீய பாடல்களை பஜனை செய்து கொண்டு, ஒரு பெருங்கூட்டம், அங்கிருந்து குஹானந்த நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றது. பொழுது புலர்கிறது.  மாபெரும் தொழிளாலர் படை ஒன்று, பல் மைல்கற்களை கடந்து, பேரலையாகவே வந்தடைந்தது. தற்செயலாக, மஹாகவி பாரதியார் (அவர் வீட்டிலிருந்து நடை தூரம்.) குஹானந்த நிலையத்திற்கு வந்து சேர, திரு.வி.க. அவரை ஒரு பாட்டு பாட சொல்கிறார். ‘முருகா! முருகா!’ என்று நெக்குருக பாடுகிறார்.  அன்றும், இன்றும், நாளையும், இந்த நிகழ்வு கார்மேகம் போல் கண்களில் நீரை பெருக்கி, தேக்கிவிடும் ஆற்றல் கொண்டது. இது நான் கண்டுகொண்ட அனுபவம். 

     படிச்சாப்போல இருக்கே என்று சிலர் சொல்றது காதில் விழறது! அதுக்காக விட்றதாவது? இது பற்றி நான் சொன்னதை ஸுபாஷிணி ஒலிபதிவு செய்த பிறகு தானே, மின் தமிழுக்கே வந்தேன்! இண்டிக் ரூட்லெ வேற போட்றுக்கேன். ஸோ வாட்? பேராசிரியர் நாகராஜன், பவள சங்கரி, சந்தானம், முனைவர் ராஜம் அவர்கள் எல்லாம் அப்றம் தானே வந்தாஹ. படிக்கட்டுமே, பிடிச்சா.

     இந்த கூட்டம், களிறு போல், கடற்க்கரை நோக்கி நடந்ததாம். வழியெல்லாம், மூடிய கடைகள் திறந்து, இராம நவமி போல், எல்லாருக்கும்  அண்டா அண்டாவாக பானகம் வினியோகம் செய்கிறார்கள். திலகர் திடம். புனித பூமி. தற்காலம் 'அழகு' படுத்தப்பட்டு உரம் இழந்தது. தலைவர் தன் உரத்தக்குரலை மெச்சிக்கிறார். மைக் இல்லாமே ஆவேசமாக பேசி தீத்துட்டார், திரு.வி.க.வை கைது செய்வாஹ என்று பேச்சு அடிபட்டாலும், அவரை அரசு கைது செய்யவில்லை. கதை முடிஞ்சது என்று போய்டாதீங்க. கத்திரிக்காய் காய்க்கவில்லை. சம்பந்தமில்லாமல், ஒரு பேய்ப்பழம் பழுத்தது, பஞ்சாப்பில், ஒரே வாரத்தில். ஏப்ரல் 13, 1919 ஜாலியன்வாலா படுகொலை! இந்த ஒரு வாரத்தில், இந்தியாவின் வரலாறு எப்படி மாறிவிட்டது பாருங்கள். 

     மஹாத்மா காந்தியை நினையுங்கள். இன்று நீங்களும் நானும் தின்னும், '...மக்கள் அத்தனைபேரு நிகராம்...' என்னும் வெற்றிலை,'...அம்மை உயிர் என்னும் முலையினில் உணர்வு எனும் பால் வண்னமுற வைத்தெனக்கே...' எனப்படும் உண்ணும் சோறும், '...உங்கள் அரசு ஒருவன் ஆள, நீர் ஓடிப் போந்து இங்கண் இறைதல் இழுக்கன்றோ...' என பருகும் நீரும், அண்ணல் அளித்த பிச்சை. எல்லாரிடம் போய் சொல்லுங்கள். குழவிக்கு, அன்பு எனும் தேனிழைத்தே புகட்டுங்கள். 

நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
02 10 2010

ஆராதி Sat, Oct 2, 2010 at 1:26 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil
திரு இன்னம்பூராரே

உணர்ச்சிப் பெருக்கோடு உண்மையை எடுத்துச் சொல்கிறது உங்கள் கட்டுரை. இது எல்லோருக்கும் இன்று கிடைத்த இனிப்புப் பொங்கல்.

அன்புடன்
ஆராதி


coral shree Sat, Oct 2, 2010 at 1:37 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அய்யா, காந்தி மகானை குறை கூறுபவர்களுக்கும் மனச்சாட்சி இருந்தாலும், சில பேர் தான் பெரிய ஆள் ஆக வேண்டும் என்பதற்காக யாரை வேண்டுமானாலும் குறை சொல்லுவார்கள்.அவர்கள் கிடக்கட்டும். தாங்கள் கூறுவது போல, இன்று உண்ணும் சோறும், நீரும், நன்கு செரிக்க வேண்டுமானால், ஐயன் அண்ணல் காந்தி மகானை , சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்த, உத்தமனை, நினைவு கூற வேண்டியது தானே மனிதம் ஐயா? ஒலிப்பதிவு முடித்து விட்டீர்களா? கேட்டுவிட்டு வருகிறேன் ஐயா, தங்கள் திருவாய் மொழி காது குளிர கேட்க பேராவல் கொண்டுள்ளேனே!


[Quoted text hidden]

Nagarajan Vadivel Sat, Oct 2, 2010 at 3:31 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
aபேரன்புடைய இன்னம்பூரானார் அவர்களே,
தங்களின் அன்றொரு நாள் மடல் கண்டேன்.  உண்மையும் உணர்வும் கலந்து அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே என்று அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்.  இருபது ஆண்டுகளுக்கு முன்னர் டர்பன் நகருக்குப் பயனம். முதலில் சந்திக்க வேண்டியவர் டர்பன் அருகில் குளு நட்டாலில் வாழும் 95 வயது தமிழரை.  குளு நட்டாலில் காந்தி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.  அங்கு வாழ்ந்த தமிழர்கள் குறிப்பாக திலையாடி வள்ளியம்மை போன்ற பலரை நினைவு கூர்ந்தார்.  எல்லாரிடமும் பேசிக் கொண்டிருந்த போது அவர் எங்களை மாலைக்குள் விரைவாக டர்பன் சென்றுவிடுமாறு அவசரப்படுத்திக் கொண்டிருந்தார்.  மாலை கடந்தவுடன் அவரே அவரின் உறவினர் இருவரைத் துப்பாக்கியுடன் உடன் சென்று டர்பனில் விட்டு வருமாறு செய்தார்.  காந்தி வாழ்ந்த ஒரு நாட்டின் இன்றைய அவல நிலை. டர்பனில் மாலை 5 மனீக்க்கு கடைகள் மூட்ப்படும் கொடுமை சாந்தி நிலவ வேண்டும் என்று வாழ்ந்த நாட்டில் வன்முறையே கலாச்சாரம்
இந்தியாவில் காந்தியம் கடைச் சங்கத்தில்.  நீங்கள் முதல் சங்கம். நான் இடைச் சங்கம். இன்றைய இளைஞர்கள் கடைச் சங்கம்.  இன்றைய உலகில் காந்தியம் உலக மயமாக்கலில் ஒரு பிராண்ட். அவ்வளவே.  இதயத்தில் இருந்த காந்தியின் படம் கால் செருப்புக்கு வந்துவிட்டது.  எளிமையின் நாயக்ர் பேரில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஒரு பேனா என் உலக வர்த்தகம்
காந்தி திரைப்படம் அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய மனத்தாக்கங்கள் இங்கு நிகழவில்லை.  இந்தியாவில் காந்தியார் போல் இன்னொருவர் வழும் சாத்தியக்கூறு குறைவு.  இந்திய தர்மமும் வாய்மையும் மனித வடிவில் தோன்றமுடியும் எனபதை நிலை நிறுத்த்வே காந்தியார் தோன்றி வாழ்ந்து மறைந்தார்.
இன்றைய உலகில் நீங்கள் கூறியபடி காந்தியம் தாய்ப்பாலோடு கலந்தூட்டவேண்டிய ஒன்று.  பி.பி.சி ஒளி பரப்பில் நிருபர் தென்ஆப்ரிக்க இளைஞர்களிடம் சிறையில் இருக்கும் நெல்சன் மண்டேலா பற்றிக் கேட்கிறார் உணர்ச்சி மிக்க பதில் வருகிறது.  அவர் மண்டேலாவின் புகைப் படத்தைக் காட்டி இவர் யார் என்று தெரியுமா என்று கேதட்கிறார்.  அவர்களுக்கு அந்த புகைப்படம் மண்டேலா என்று தெரியவில்லை.  இன்றைய இந்தியத் தலைமுறைக்கு காந்தியின் உருவம் 500 ருபாய் நோட்டில் தினம் தினம் தெடிகிறது.  புற அளவில் காந்தியார் இங்கு வாழ்கிறார்.  இன்னும் ஒருபடி மேலே போய் அழகிப் போட்டியிலோ ஆடை அலங்காரப் போட்டியிலோ அல்லது கோலிவுட்டின் குத்தாட்டத்திலோ காந்தியாரின் ஆடை அறிமுகப் படுத்தப் படலாம்.  ஆனால் காந்தியின் அகம் இன்றய இளைஞர்களுக்கு வசப்பட நீங்கள் இறுதிப் பத்தியில் கூறியபடி ஒரு வேள்வியில் ஈடுபட வேண்டும் என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை
தங்களின் கட்டுரை காந்தியாரின் வாழ்வின் திருப்புமனைச் சம்பவங்களில் எல்லாம் தமிழரின் தமிழகத்தின் பங்கு பற்றிய் ஆய்வுக்குத் தூண்டுகோல்.
நாகராசன்


venkatachalam Dotthathri Sat, Oct 2, 2010 at 3:40 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
------------------------------
ஓம்
’கைமாறு செய்வருண்டோ?’
சேய்க்கு வரும் நோய்க்கு தாய் மருந்துண்வது போல்
தாய் நாட்டுத் தொல்லைகட்கு தாமும் உண்ணாதிருப்போர்க்கு
கைமாறு செய்வருண்டோ’
என நாமக்கல் கவிஞர் பாடினார்.

’உடுக்கும் உடை ஏழைக்கும் சிறக்கும் வரை சட்டை அணிவதில்லை’ என்று வாழ்ந்து காட்டிய வள்ளல்.
வாரி வழங்கிய பொருள்களில் ஒரு காதணியின் திருகு தவறிக் கீழே விழுந்து கண்டுபிடிக்காத போது, தொண்டர்களைக் கடிந்து, மணல் தரையைச் சலித்துத் தேடி கொண்டுவந்தபின்னரே அமைதியானார். அந்த ஏழையின் கொடை அலட்சியமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்படவேண்டும் என கண்டிப்புடன் இருந்தார்.
பேத்தி மனுபன் காந்தி, அவர் குளிக்கும் பொது சோப்புக்குப் பதில் உபயோகிக்கும் கூழாங்கல்லை தங்கியிருந்த இடத்தில் விட்டு வந்திருந்தமையால், அதற்குப் பரிகாரமாக அந்திப் பொழுதென்றும் கொள்ளாமல் தன்னந்தனியே திரும்பவும் விடுதிக்குச் சென்று அந்தக் கூழாங்கல்லை சிறுமி மனுபன்காந்தியே எடுத்துவரவேண்டும் என்று பணித்தார்.
சொல்வதை நடைமுறையில் செய்துகாட்டிய பெருமகனார்.
கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்றை நடத்தி  வஞ்சகர்களிடமிருந்து நாட்டின் விடுதலை வாங்கித் தந்தார். விடுதலை நோக்கம் நிறைவேறியவுடன் காங்கிரஸைக் கலைத்துவிட்டு புதிய தொரு கொள்கைப் பிடிப்புடன் கட்சிதுவங்க விரும்பினார்/பணித்தார். ஏனோ  தொண்டர்கள் செவிசாய்க்கவில்லை.
வேதத்தின் சாரமாக, பிரார்த்தனை நமது புழக்கடையில் ஓடும் நதி என்று அனைவரையும் ஒழுங்கின் அமைதியில் மூலத்தை உணர்ந்து அனுபவிக்கவைத்தார்.
ஆசாரிய வினோபா பாவே அவர்கள் உலகின் முக்கிய மதங்களின் தெய்வத்திருவுருவங்களை மலராகக் கொண்டு 36 நாமங்களைத் தொடுத்து நாமமாலை ஒன்றை உருவாக்கினார். அந்த நாமமாலை பாடி மகானையும் மக்களையும் வாழ்த்தி ஸமஸ்த லோகா சுகினோபவந்து என்று இறைவனை வணங்குகிறேன்.

ஓம் தத்ஸத் ஸ்ரீ நாராயணதூ புருஷோத்தம குரு தூ
சித்த புத்த தூ ஸ்கந்த விநாயக ஸவிதா பாவக தூ
பிரம்ம மஷ்ட தூ , யஷ்வ ஸக்தி தூ, யேசு பிதா பிரபுதூ
துர்க விஷ்ணு ஹோ ராமகிருஷ்ணதூ ரகீமதவோ தூ
வாஸுதேவ தகோ விஸ்வரூபதூ சிதானந்த ஹரி தூ

-=-=-=-= ஆசார்ய வினோபா பாவே.
வெ.சுப்பிரமணியன்
ஓம்
--------------------------------------------------------------------------------------------------------------
[Quoted text hidden]

venkatachalam Dotthathri Sat, Oct 2, 2010 at 3:44 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அடடா! இறுதி வரி அழிந்துபோய்விட்டதால் மீண்டும் தந்தேன். பொருத்தருள்க.
ஓம் தத்ஸத் ஸ்ரீ நாராயணதூ புருஷோத்தம குரு தூ
சித்த புத்த தூ ஸ்கந்த விநாயக ஸவிதா பாவக தூ
பிரம்ம மஷ்ட தூ , யஷ்வ ஸக்தி தூ, யேசு பிதா பிரபுதூ
துர்க விஷ்ணு ஹோ ராமகிருஷ்ணதூ ரகீமதவோ தூ
வாஸுதேவ தகோ விஸ்வரூபதூ சிதானந்த ஹரி தூ
அஸ்விதீயதூ அகால் நிர்பய ஆத்மலிங்க சிவது! ஆத்மலிங்க சிவதூ
[Quoted text hidden]

செல்வன் Sat, Oct 2, 2010 at 5:59 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங்கின் குரு காந்தி.மூன்று நாடுகளின் உரிமை போராட்டங்களின் தந்தை.அண்னாதுரை போல் வாரிசை அரியணையில் அமர்த்த தெரியாதவர்.அவர் பேரன் சிகாகோவில் பல்கலைகழக பேராசிரியராக உள்ளார்.கொஞ்ச நாளுக்கு முன் யூதர்களை திட்டி சர்ச்சைக்கு உள்ளாகி மன்னிப்பு கேட்டார்.


Subashini Tremmel Sat, Oct 2, 2010 at 6:16 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: minTamil@googlegroups.com

மனதைத் தொடும் வரிகளோடு இந்த நாளை தொடக்கி வைத்திருக்கின்றீர்கள் திரு.இன்னம்புரான். இந்த தினத்தை இளம் வயதிலேயே ஒவ்வொரு ஆண்டும் எனது தாயார் நினைவூட்டுவார். உலகம் போற்றும் ஒரு மகானாக அவர் இன்று திகழ்கின்றார். காந்தி நினைவுகளோடு திரு.வி.க நினைவுகளையும் கொண்டு வந்து விட்டீர்கள். நாம் முன்னர் தயாரித்த பட்டியலை மீண்டும் பார்க்க வேண்டும் திரு.இன்னம்புரான்.
 
அன்புடன்
சுபா


Nagarajan VadivelSat, Oct 2, 2010 at 7:23 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
aசெல்வன் அவர்களே
கடவுள் நடந்து முடிந்த சம்பவங்களைத் திருத்த முடியாது என்ற இயலாமையால்தான் சரித்திர ஆசிரியர்களைப் படைத்ததாக எங்கோ படித்ததுண்டு
அறிஞர் அண்ணா வாரிசை உருவாக்கவில்லை என்பதே உண்மை. அவர் யாரையும் வாரிசை அமர்த்தவில்லை.  பொழுது புலரும் முன் பேரம் படிந்து திரு. எம்.ஜி.ஆரின் உதவியுடன் நாவலரை உதறித்தள்ளிவிட்டு கலைஞர் முதல்வரானார் என்பதே வரலாறு
மூன்று வளர்ப்பு மகன்கள் இருந்தும் யாரையும் அரசியல் பக்கம் அனுக விடாமல் பார்த்துக் கொண்டவர் அண்ணா.  அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் இதை உங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்
நாகராசன்
[Quoted text hidden]
--
[Quoted text hidden]

செல்வன் Sat, Oct 2, 2010 at 8:24 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
உண்மைதான் ஐயா.அண்ணா, காந்தி இறந்தபிறகு கட்சியில் அடுத்த நிலையில் இருந்த நேரு/கருணாநிதி ஆகியோர் பதவிக்கு வந்தது இயல்பானதே.எம்.ஜி.ஆர் தான் வலுவான நம்பர் டுவை உருவாக்காமல் கட்சியை நட்டாற்றில் விட்டு சென்றுவிட்டார்.அது ஜெ. கையில் வந்தது விந்தையான நிகழ்வே.
 
இங்கே குடியரசு கட்சிக்கு மைக்கேல் ஸ்டீல் என்ற தலைவர் இருக்கிறார்.சரியான ஜோக்கர்.டெமாக்ரடிக் கட்சிக்கு டிம் கெயின் தலைவர்.பராக் ஒபாமா ஜனாதிபதி.கட்சி தலைவர்கள் நிதி திரட்டுவார்கள்.அதை தவிர பெரிய அதிகாரம் அவர்கள் கையில் இல்லை.கட்சியை விட்டு நீக்கும் பேச்சே கிடையாது.தொகுதியில் தேர்தல் வந்தால் சொந்தமா போட்டி போட்டு ஜெயிச்சுக்க வேண்டியதுதான்.அது ஜனாதிபதி பதவியானாலும், கவின்சிலர் பதவியானாலும்.
[Quoted text hidden]

Nagarajan Vadivel Sat, Oct 2, 2010 at 8:30 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
sசெல்வன்
அண்ணாவுக்கு அடுத்த இரண்டாவது நிலையில் இருந்தவர் நாவலர்.  அவர் இருந்த எல்லாக் கட்சிகளிலும் அவர் நிரந்தரமாக இரண்டாம் இடத்திலேயே நிலைத்துவிட்டார்
[Quoted text hidden]

செல்வன் Sat, Oct 2, 2010 at 8:35 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஆம் ஐயா.நாவலர் மயிலையில் தனித்து போட்டியிட்டபோது சுயேச்சையாக போட்டியிட்ட எஸ்.வி.சேகரை விட குறைந்த ஓட்டு வாங்கியது வரலாறு.ஆந்திராவில் ரோசையாவுக்கு அடித்த லக் இவருக்கு அடிக்கலை
[Quoted text hidden]

Tthamizth Tthenee <Sat, Oct 2, 2010 at 10:05 AM
Reply-To: indic-roots@googlegroups.com
To: indic-roots@googlegroups.com
குழவிக்கு, அன்பு எனும் தேனிழைத்தே புகட்டுங்கள்.
 
நிச்சயமாக  கடைப்பிடிக்க வேண்டிய  பெரும் மந்திரச் சொல்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ




rajam Sat, Oct 2, 2010 at 7:25 PM
To: mintamil@googlegroups.com
Cc: indic-roots@googlegroups.com, Innamburan Innamburan
இன்னம்பூரார் ஐயா,
பேராசிரியர் நாகராஜன், பவள சங்கரி, சந்தானம், முனைவர் ராஜம் அவர்கள் எல்லாம் அப்றம் தானே வந்தாஹ. படிக்கட்டுமே, பிடிச்சா.
எப்போ வந்தா என்ன? முன்னேயே எத்தனை தடவை படிச்சிருந்தாலும் பின்னாலே  எத்தனை தடவை படிச்சாலும் சில வாசகங்களின் உண்மையும் தரமும் குறைந்துவிடுமா என்ன?!  எத்தனெ தடவென்னாலும் படிப்பேன்.
நான் பழைய இலக்கியம் (10-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை) படிப்பதிலிருந்து இன்னும் "மேற்படிப்புக்கு"ப் போகவே இல்லையே!
என் வாழ்வில் காந்தியடிகளுக்கு நிறைய இடம்!
அம்மாவழித் தாத்தா சேர்மாதேவியில் "ஆலயப் பிரவேசத்தை" முன் நின்று நடத்தியவர். வினோதமான கைராட்டினம் ("சர்க்கா") உருவாக்கினவர். அந்தக்காலக் கல்கி இதழில் படமும் வந்திருந்தது.
அப்பாவழித் தாத்தவோ இன்னும் தீவிரம். அம்மாவின் "மடிசார்" கதர்ப் புடவைக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டது
(உறவினர் ஏளனத்துக்கும் மீறி). வீட்டில் எல்லார்க்கும் கதராடை. பள்ளிக்கூடத்தில் நான் ஒருத்திதான்
கதர்ப்பாவாடை, கதர்ச்சட்டை போட்ட சிறுமி. தக்ளி, சர்க்கா என்று வீட்டில் ஏகப்பட்ட "கைராட்டை ஆயுதம்."
மிகவும் மெல்லிய இழையை நூற்பதில் வீட்டில் போட்டி. நாங்கள் நூற்ற நூலைக் "காதி வஸ்திராலயாவில்" கொடுத்துத்
தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் வேட்டி, மேல் துண்டு. ஆட்டுப்பால், வேர்க்கடலை எல்லாம் அன்றாட உணவு
(உறவினர் ஏளனத்துக்கும் மீறி). ஏற்கனவே திருவள்ளுவர் குறளில் ஊன்றியிருந்த தாத்தாவுக்குக் காந்தியமும் சேர்ந்துகொண்டது.
தாத்தாவும் அப்பாவும் காந்தி, நேரு, ராஜாஜி இவர்கள் பற்றிப் பேசும்போது வீட்டில் வேறு ஒரு சத்தமும் இருக்காது.
அம்மா மட்டும் எப்பவாவது -- "ஆமாம், அவர் [அதாவது "காந்தி"] கஸ்தூர்பாவைப் படுத்தினாராமே, அது நெஜமா'ன்னு"
அப்பாவைக் கேப்பா. அப்பா அதுக்குப் பதில் சொல்லமாட்டார். எனக்கும் கோவம் வர ஆரம்பித்தது -- "இந்த காந்தித்தாத்தா
தனக்கு தோட்டிவேலை செய்யணும்-னு இருந்தா தான் மட்டும் செஞ்சுக்றதுதானே. எதுக்குக் கஸ்தூர்பாவையும் செய்யின்னு சொல்லிக்
கட்டாயப்படுத்தணும்?" அப்பவே நான் வாயாடி. அதுக்கப்புறம் அவர் அந்த ப்ரசவவேதனைப்பட்ட பசுவைச் சுட்டுக்கொன்னது.
அம்மா கேப்பா. அந்தமாதிரிக் கேள்விக்கெல்லாம் அங்கே இடமே இல்லை.
காந்தி, நேரு. இந்திரா காந்தி -- இவர்கள்தான் எங்களுக்கு மானசீகச் சொந்தம். 
ஜனவரி 30, 1948. வீட்டில் ரேடியோ கிடையாது. பக்கத்துலெ ஒரு ஓட்டல் (hotel; restaurant). 
அங்கெ ஒரு சின்ன ரேடியோ. எங்க தெரு முழுக்க அங்கெ கூடி அந்தத் துயரச்செய்தி கேட்டு அழுது துடித்தது. 
என் தாத்தா மனசு கலங்கி நான் பார்த்தது அதுதான் முதல் முறை. அடுத்துக் கடைசியாக 36 வயது அப்பா இறந்தபோது.
எல்லாரும் தாத்தாவுக்கு (தசரதர் மாதிரிப்) புத்திரசோகம் என்று சொல்லிக்கொண்டார்கள்.
காந்தியடிகள் வாழ்ந்து காட்டின முறைகள் இன்றும் வாழ்கின்றன. நமக்குத்தான் கண்டுகொள்ளத் தெரியவில்லை.
வணக்கத்துடன்,
--ராஜம்


N. Kannan Sun, Oct 3, 2010 at 12:03 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
2010/10/3 rajam <rajam@earthlink.net>
-- "ஆமாம், அவர் [அதாவது "காந்தி"] கஸ்தூர்பாவைப் படுத்தினாராமே, அது நெஜமா'ன்னு"
> அப்பாவைக் கேப்பா. அப்பா அதுக்குப் பதில் சொல்லமாட்டார். எனக்கும் கோவம் வர ஆரம்பித்தது -- "இந்த
> காந்தித்தாத்தா தனக்கு தோட்டிவேலை செய்யணும்-னு இருந்தா தான் மட்டும் செஞ்சுக்றதுதானே. எதுக்குக்
> கஸ்தூர்பாவையும் செய்யின்னு சொல்லிக் கட்டாயப்படுத்தணும்?"

காந்தி ஒரு காலத்தின் சாட்சி.

காலம் என்பதே மனதின் நீட்சியாக இருக்கும் போது, யுகங்கள் எப்படித்தப்பும்?

காந்தி ஒரு சத்ய யுக புருஷர் (கிருதயுகம்). கலியில் வாழ்ந்து கொண்டு சத்ய
யுகத்திற்கு பாலம் கட்ட முயன்றார்.

கலி வென்றது என்பதுதான் இந்தியாவின் கதை என்றாலும், மீண்டும் திரேதா
யுகம் தோன்றும். துவாபர கிருஷ்ணன் வருவான்.

கலியும் கெடும்!

நா.கண்ணன்


Innamburan Innamburan Sun, Oct 3, 2010 at 2:39 PM
To: mintamil@googlegroups.com

ஒரு சமூகத்தின் வரலாறு, அதன் மக்களின் தனிப்பட்ட வரலாறுகளே; அவற்றின் தொகுப்பே. இதற்கு சான்று: முனைவர் ராஜத்தின் முன்னோர்களின் தீவிர காந்தீயமும், பேரா.நாகராஜனின் செய்திகளும், ஆராதி, பவளசங்கரி, செல்வன், தமிழ்த்தேனி, கண்ணன் ஆகியோரின் 'மனம் தொட்ட' கருத்துக்களும். 'மனதைத் தொடும் வரிகளோடு இந்த நாளை தொடக்கி வைத்திருக்கின்றீர்கள்' என்றார் ஸுபாஷிணி. இடுகை தொடராக மலரட்டும், மற்றோரும் இயைந்து. நாகராஜன் சொன்னமாதிரி, கடைச்சங்கத்துக்கு இவை வரவாகட்டும். புதிய இலக்கியம் ஒன்று படைப்போம்.
மற்றொரு இழையில் எழுதியதை, அதற்காக, இங்கும் பதிவு செய்து, பிறகு மற்றொரு விஷயமும் பதிவு செய்ய அவா. என் போக்கு, ஒரு விதத்தில் அலை பாயும் (meandering).
பொருத்தாள்க.
--------------
மறு பதிவு:
"     சில சமயம், சொல்வதும், எழுதுவதும், தானாகவே இயங்கும். அங்கு, இலக்கியம், இலக்கணம், மரபு, மட்டுறுத்தல் போன்றவைக்கு இடமில்லை. இனி, தங்கு, தடையில்லாமல், நுங்கும், நுரையுமாக, விசித்துக்கொண்டிருக்கும் என் மனசு, காட்டாறாக துள்ளி ஓடும். சுற்றி நில்லாதே! பகையே! அடித்துக்கொண்டு போய்விடுவேன்!

     ஆகஸ்ட் 12, 2006 அன்று திரு.வெங்கட் சுவாமிநாதன் எழுதியதை இன்று படிக்கும்போது, அவர் பக்கத்து வீட்டுக்காரர் போல் தோன்றுகிறார், ஸுபாஷிணி. அவர் நிலக்கோட்டை; நான் உசிலம்பட்டி; அவ்வளவு தான், நூலிழையில் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ள தவறிவிட்டோமோ? அல்லது கண்டும் அறியாமல் இருந்து விட்டோமா? இருவரும் முத்துராமலிங்கத்தேவரையும், அருணா ஆஸஃப் அலியையும், ஒரே சூழ்நிலையில் தரிசித்திருக்கிறோம். ‘...எங்கள் கண்களுக்கு அவர் மறு பிறப்பெடுத்த ஒரு ஜான்ஸி ராணியாகத் தோற்றமளித்தார்...’. ஆமாம்! ஆமாம்! ‘...முத்துராமலிங்கத் தேவரும் வருப்போகிறார் என்று சொன்னார்கள். காத்திருந்தோம் ஆவலோடு...’ ஆமாம்! ஆமாம்! ஆனால், அவர்கள் வீடு தேடி வந்தார்களாக்கும், உசிலம்பட்டிக்கே. நான் தமுக்கம் மைதானம் போகவில்லை. மறக்கமுடியமா? அக்காலம் எனக்கு தடையுத்தரவுகளும், காவல் தெய்வங்களும் உண்டு. இரவு இரண்டு மணி. எங்கோ ஒரு இடத்தில் மீட்டிங். ஊரே சின்ன ஊர் தானே. எப்படியோ, எல்லார் கண்களில் மண் தூவி விட்டு ஓடி விட்டேன். மீட்டிங்க் முடிஞ்சு திரும்பினா, ‘திக்’ என்று இருந்தது. அப்பா & ரவணப்பன். ரவணப்பன் தான் பாடிகார்ட்/போலீஸ் வால். ‘வீட்டுக்கு வா! ஒண்ணு போட்றேன்’ என்று அவர் தான் முணுமுணுத்தார். அப்பா பேசவே இல்லை. முப்பது வருடங்களுக்கு பிறகு, பேச்சுவாக்கில் ஒரு நாள் சொன்னார், ‘நானும் பார்க்க ஆசைப்பட்டிருக்கமாட்டேனா?’ அடுத்து விளக்கம். ‘உன்னை தள்ளிக்கொண்டு போயிருப்பான், நான் அங்கு இல்லை என்றால்”. அப்பாவே போலீஸ்லே. சின்ன வேலை. இன்ஸ்பெக்டர்க்கெல்லாம், அரசு பயமும் உண்டு, அப்பாவிடமும் பயம் உண்டு. ஆனால், இந்த பின்னணி தான், இன்று என் மனம் விசித்து, விசித்து அழக்காரணம். மஹாத்மா காந்தி மதுரை வந்த போது, அவரை தரிசிக்க நான் போக முடியவில்லை. போவது கடினமே இல்லை. ஜனப்பிரவாகத்துடன் கலந்தால் போதும். அடித்துசெல்லும்; திரும்பி வந்து தள்ளிவிட்டுப்போகும், ஹானியில்லாம. அப்பாவும் தான் லக்ஷம் தடவையாவது ‘போகலாம்’, ‘போகலாம்’ என்று சொல்லிருப்பார். எதித்தாப்லே பஸ் ஸ்டாண்ட். ஒரு மதுரை பஸ்லே ஏறினா போறும். ஆனா, ஒரு சின்ன செய்தி: ‘Keep your son indoors. Thank You’. வெள்ளைக்கார துரை கிட்டக்கெ இருந்து வந்த தபாலில் வந்த தஸ்தாவேஜுக்கள், நடுவில்; அவர் கையெழுத்தில். No signature.

     பல வருஷம் கழித்து, அவரும் நானும், ஆவடி காங்கிரஸ்ஸில், நேரு-படேல்- ராஜாஜி தரிசனம் செய்யும் போது அப்பா சொன்னது. அப்பா கூட்டுறவு பணி, போலீஸ் துறை மேற்பார்வையில். கொடுத்த அரசுக்கடன் திரும்பாவிட்டால், அவருக்கு தூக்கம் வராது. முரடர் வேறு. பிரமலை கள்ளர்களில் சிலர் மீது  அரெஸ்ட் வாரண்ட் இருக்கும். அவர்கள் கூட கடனை திருப்பாவிட்டால், ரூலர் தடியால் அடிப்பார், அந்த மறவர்களை. அதற்கு நடுங்கி, நள்ளிரவில் வந்து கொடுப்பார்கள்.பார்த்திருக்கிறேன். வரவு வைப்பார். ஆனால், வாரண்ட் கொடுத்த அதிகாரிகளிடம், கெஞ்சிக்கேட்டாலும், காட்டிக்கொடுக்கமாட்டார். ‘ஶ்ரீனிவாசன் ரூல்’ என்று துரையே கேலி செய்வார். அத்துடன் சரி. இதனால், உள் பகையோ? புகையோ? என்ன தான் மக்கள் வெள்ளம் இருந்தாலும், என் மேல் போலீஸ் கண் இருந்திருக்கும்.  அதை தான், 65 வருடங்கள் கழித்து, ‘தள்ளி நில்’ என்றேன், வியர்த்தமாக. காந்திஜியை தரிசிக்க வில்லையே என்று மனம் விசித்துக்கொண்டு தான் இருக்கிறது, இந்த க்ஷணம். ஆமாம்! காந்திஜி பொன்னிறம் தான். சொல்லித்தெரியும்.

இன்னம்பூரான்
பி.கு. உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனின், ‘அன்றைய தினம்’ இழையில் இதையும் பதிவு செய்துவிடுகிறேன், ஸுபாஷிணி. இதுவும் ஒரு ‘அன்றைய தினம்’ தான். 

நன்றி, வணக்கம்
இன்னம்பூரான்
03 10 2010
2010/10/3 N. Kannan <navannakana@gmail.com>

Innamburan Innamburan Thu, Oct 14, 2010 at 5:52 AM
To: mintamil@googlegroups.com

மஹாத்மா காந்தியை இந்தியா பின்பற்றுவதில்லை, அவருடைய கோட்பாடுகள் நடைமுறைக்கு உதவாதவை, அவர் செய்த தவறுகளை பட்டியலிடுவோம் என்றெல்லாம் பேசப்படினும், அவருடைய உன்னதம் மறையும் பொருள் அல்ல. அது நிரந்தரமாக வானில் ஜொலிக்கும். ஏதோ 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததில், அவருக்கு ஒரு பங்கு உண்டு என்போர், அந்த மஹானை பற்றி தெரிந்து கொள்ள விருப்பமற்றவர் என்று தெளிவாகச் சொல்லி விடலாம்.

லண்டனிலிருந்து டர்பான் பயணம்,நவம்பர் 1909ல் பத்து நாட்கள். ஐயா, நூறாண்டுகளுக்கு மேல் என்பதை குறித்துக்கொள்ளும். அந்த பத்து நாட்களுக்குள் குஜராத்தியில் எழுதி, காந்தி மஹானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்: “ஹிந்த் ஸ்வராஜ்.’அது 1910ல் வெளிவந்தது. பிரிட்டீஷார் அந்த நூலை தடை செய்தனர்; இந்திய தேசீயவாதிகள் அதை கண்டித்தனர். இந்தியாவின் பொருளாதார, ஐரோப்பிய இயந்திரமயமான பொருளாதாரவரவு, எப்படியாவது நாடு விடுதலை பெறவேண்டும் என்பதையெல்லாம், இந்த சிறிய நூல் மதிக்கவில்லையே என்று அவர்களுக்கு வருத்தம். சொல்லபோனால், இந்த அளவுக்கு புரிந்து கொள்ளப்படாமலும், தவறாக புரிந்து கொள்ளப்பட்ட, தவறாக படித்துக்கொள்ளப்பட்ட நூல்களில், முதலிடம் இந்த நூலுக்கே எனலாம். இது ஒரு வெடிகுண்டு பாடம் என்றார் ஒருவர். 

இந்த நூல் மஹாத்மாவின் கொள்கைகளின் அடித்தளம். ஒரு அரசியல் கொள்கையாளர் என்ற வகையில், அவருடைய பாலபாடம். தனிமனிதரின் சுதந்திரம், பொறுப்புணர்ச்சி, ஒரு நாட்டின் விடுதலை உரிமை, இவ்வுலகில் மனித இனம் வாழவேண்டிய நெறி என, ‘தனிமனிதனும் உலகும்’ என்றளவில் சூழ்நிலை ஆய்வு, இந்த நூலின் வெளிப்பாடு என்க. சான்றோர்கள் பலர் இந்த நூலை படித்தனர் - ரஷ்யாவின் லியோ டால்ஸ்டாய், ஃபிரான்ஸின் ரொமாய்ன் ரோலா, இந்தியாவின் நேரு (மோதிலால்). மேலும், உலகெங்கிலும் உள்ள பிரிட்டீஷ் ஆதரவாளர்கள். ஆங்கிலமொழியின் உலகளாவிய ஆளுமையின் மூலமாக, ஆங்கிலேய மக்களின் மத/ நியாய வழிமுறையின் உதவியுடன், ஆங்கிலேயர்களையே அஹிம்சையின் கொள்கையை பரப்பவேண்டும் என்று தான் காந்திஜியே இந்த நூலை மொழிபெயர்த்ததாக தோன்றுகிறது. தன்னை நேசித்த ஆங்கில மக்களுக்கும், இந்திய சாம்ராஜ்யவாதிகளுக்க்கும் உள்ள வித்தியாசம் அறியாதவரா என்ன, காந்திஜி? 

கார்ல் மார்க்ஸின் ‘கம்யீனிஸ்ட் கோட்பாடு’  150 வருடங்களுக்கு முன் வந்த நூல். அவரும் சரி; காந்தியும் சரி; இருவரும் புரட்சி மனப்பான்மை கொண்டவர்கள் எனினும், இருவருக்கும் காத தூரம்! மேல்நாட்டு நவீனமும், நவீன சமுதாயமும், கார்ல் மார்க்ஸ் அவர்களின் கூர்மையான பார்வைக்கு இலக்கு ஆயின. பிற்காலம், நடந்த சமுதாய பின்னடைவுகளை நாம் நன்கு அறிவோம்; அவற்றில் கம்யூனிசம் என்ற போர்வையில் நிகழ்ந்த அவலங்களையும் அறிவோம்.  இதற்கெல்லாம் விடையாக, மேல்நாட்டு சமுதாயத்திற்கு மாற்று நவீனம் அமைத்த பெருமை, “ஹிந்த் ஸ்வராஜ்.‘க்கு.  1989ல் மார்க்ஸீய கொள்கைகள் அடிபட்டு போயின. இந்த நூற்றாண்டோ மஹாத்மா காந்தியின் தீர்க்கதரிசனத்தை நம்பி இருக்கிறது.

(தொடரும்)
இன்னம்பூரான்
14 10 2010
பி.கு. காந்திஜி இந்தியாவுக்கு மட்டும் சொந்தமல்ல. ‘கரும்புத்தோட்டத்தினிலே’ என்று அன்றொறு நாள் ஃபிஜித்தீவில் அடிமைதமிழ்ப்பெண்கள் படும்பாடு பற்றி, நீர் மல்க, பாடினான் ஒரு புலவன். அந்த நாட்டிலிருந்து வந்த செய்தியின் ஒரு பாகமிது. மொழிப்பெயர்ப்பு/தழுவல் தவறுகளுக்கும், என் கருத்துக்களுக்கும் பொறுப்பு, நான். அடுத்த பகுதியுடன், இணைப்பும் தரப்படும்.




Tthamizth Tthenee Thu, Oct 14, 2010 at 6:13 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
” என்னிடம் முதல்வகுப்புச் சீட்டு இருக்கிறது” என்றேன்,
அதனாலென்ன? எனினும் நீ மூன்றாம் வகுப்புக்குத்தான் போய் உட்காரவேண்டும்
என்று கடுமையாகக் கூறுகிறேன்” என்றார் அவர்,
டர்பனிலிருந்து இதே வண்டியில்தான் வருகிறேன்,இதிலேயேதான் போவேன் இது உறுதி என்றேன் நான்
நீ போக முடியது,இந்த வண்டிஅயி விட்டு இறங்கி விடவேண்டும்,இல்லையானால் போலீசை அழைத்து  வெளியேற்ற வேண்டியிருக்கும் என்றார் அந்த ரயில் அலுவலர்
ம் போலீசை அழைக்கலாம் நா்் இந்த இடத்தை விட்டு அசையமாட்டேன் என்றேன்
மஹாத்மா காந்தி
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/10/14 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
[


[Quoted text hidden]

coral shree Thu, Oct 14, 2010 at 6:52 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நன்றாகச் சொன்னீர்கள் அய்யா.காந்தியடிகளின் பல கோட்பாடுகள் இன்றும் விவாதத்திற்குரியதாகவே இருப்பதும் அதனுடைய வெற்றிக்கு ஒரு காரணமாகிறது என்பது அடியேனின் தாழ்மையான அபிப்ராயம் அய்யா.நன்றி.

2010/10/14 Innamburan Innamburan <innamburan@googlemail.com>


செல்வன் Thu, Oct 14, 2010 at 7:04 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
மார்க்ஸும் காந்தியும்
marxஇருக்கும் உலகை வைத்து இந்த இரு ஞானிகளும் திருப்தி அடையவில்லை.புதியதொரு பொன்னுலகம் படைக்க விரும்பினார்கள். மார்க்ஸ் காட்டிய பொன்னுலகம் இறைநம்பிக்கையை அழித்த, வர்க்க பேதமற்ற உலகம். காந்தி காட்டிய பொன்னுலகம் இறைநம்பிக்கை கொண்ட அவரவர் மதத்தின் நல்ல கொள்கைகளை அடிப்படையாக கொண்ட ராமராஜ்ஜியம்.
பொருளாதார கொள்கைகளில் இருவருக்கும் பெரிதாக வித்யாசமில்லை. பணக்காரனை இருவரும் வேறு வேறு காரணங்களுக்காக விரும்பவில்லை. "பணக்காரன் சுரண்டுகிறான்" என்பது மார்க்ஸின் வாதம். பணக்காரனை திருத்தி ஏழைகளுக்க்காக அவனை செலவு செய்ய வைக்கலாம் என்பது காந்தியின் எண்ணம். பணக்காரன் மேன்மேலும் பணக்காரன் ஆவதை இருவரும் விரும்பவில்லை.
பெரும் ஆலைகளை விட குடிசைத்தொழிலை மேம்படுத்தலாம் என்பது காந்திய சோஷலிசத்தின் வாதம். கைராட்டையை அவர் விரும்பி தேர்ந்தெடுத்தது இந்த காரணத்தால் தான். பணக்காரன் தானாக விரும்பி சோஷலிசத்தை ஏற்க வேண்டும் என்பது காந்தியின் எண்ணமாக இருந்தது. அவனாக திருந்தி ஏழைக்கு உதவ வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். மார்க்ஸுக்கு இந்த மென்மையான வழிமுறையில் எல்லாம் நம்பிக்கை இல்லை."பணக்காரன் தரமாட்டான். அவனிடம் எதையும் கேட்காதே. நீயாக எடுத்துக்கொள்" என்றார்.
"எதிரி அடித்தால் வாங்கிக்கொள், நீ அடிவாங்குவதை பார்த்து அவன் திருந்துவான்" என்றார் காந்தி. எதிரியின் மனதில் இருக்கும் அவன் மதநம்பிக்கை அவனை திருத்தும் என்பது காந்தியின் எண்ணம். அடுத்தவனை அடிமைப்படுத்தும் எவனும் தன் மதத்துக்கு விரோதமாக தானே செயல்படுகிறான் ?அதை அவனுக்கு எடுத்துச்சொல்ல நம்மை நாமே மெழுகுவர்த்தியாகிக் கொள்வோம் என்பது காந்தியின் எண்ணம்.
காந்தியை அடித்த பிரிடிஷார் அவர் திருப்பி அடிக்காததால் அதிசயமடைந்தனர். அடிக்க அடிக்க இன்னும் அடி என அவர் சொன்னது அவர்கள் குற்ற உணர்ச்சியை அதிகப்படுத்தியது. இதே போல் சொன்ன இன்னொரு நபர் ஏசு என்பது குறிபிடத்தக்கது. ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு என ஏசு சொன்னார். அதை காந்தி 2000 வருடம் கழித்து செய்து காட்டியதும் புராட்டஸ்டண்டு பிரிட்டன் மக்களுக்கு என்ன செய்வது என தெரியவில்லை.
ஏசுவை அடித்த ரோமானியர்களின் இடத்தில் தாங்கள் இருப்பது போல் பிரிடிஷார் உணர்ந்தனர். கிறிஸ்தவத்தின் அடிப்படையே guilt எனப்படும் குற்ற உணர்ச்சிதான். "அயலானை நேசி" என்ற கிறிஸ்தவ கொள்கையை மிக அழகாக அவர்களுக்கு பாடமாக எடுத்து சொல்லி வெற்றி அடைந்தார் காந்தி.
மார்க்ஸுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. வலிமையே வெல்லும் என்பதை அவர் அழகாக உணர்ந்திருந்தார். வலியோனை திருத்த முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு சுத்தமாக இல்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வலியோன் செலுத்தும் ஆதிக்கம் ஒழிய மெலியோன் வலியோனாக மாறூவதே சரி என அவர் நினைத்தார். "உரிமை என்பது பிச்சை அல்ல. கேட்டுப்பெறாதே. எடுத்துக்கொள்" என்றார் அவர்.
Gandhiஇந்த இருவரும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் அளவிடற்கரியது. இவர்கள் இருவரின் சீடர்களும் மிகப்பெரும் நாடுகளின் தலைவர்களானார்கள். மிகப்பெரும் இரு கட்சிகள் இவர்களின் கொள்கைகளை தாங்கி உருவெடுத்தன. இவர்களுக்கு பின் வந்தவர்களின் குளருபடியால் இந்த இரு கட்சிகளும் இன்று தமது குருநாதர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக சென்று மக்களால் புறக்கணிக்கப்பட்டு நிற்கின்றன.
சொல்லி வைத்தாற்போல் இந்த இருவர் சொன்ன பொருளாதார கொள்கைகளும் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டன. இருவர் சொன்ன போராட்ட வழிமுறைகளும் தோல்வியடைந்தன. அடையாள உண்ணாவிரதம், சிறைவாசம் போன்றவை இன்று ஜோக்காக மாறிவிட்டன. பஸ் எரிப்பு, கடைமறியல் என காந்தியின் சத்தியாக்கிரகம் வன்முறையாக மாறிவிட்டது. மார்க்ஸ் சொன்னபடி துப்பாக்கி தூக்கியவர்கள் அதை கீழே போடும் வழி தெரியாமல் திகைக்கிறார்கள்.
இந்த இருவரின் உண்மையான சீடகோடிகள் இன்று அருகிவிட்டார்கள். பொன்னுலகம் வரும், உலகெங்கும் தமது பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இன்னும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை திருத்த முடியும் என்ற நம்பிக்கையை இன்னும் சில தியாகிகள் வைத்திருக்கின்றனர். ரஷிய கம்யூனிஸ்ட் கட்சியை திருத்தி மார்க்ஸின் பொன்னுலகை அடைய முடியும் என்ற நம்பிக்கையை இன்னும் பல காம்ரேடுகள் வைத்திருக்கின்றனர்.
எனக்கு தோன்றுவது என்னவென்றால் குறைபாடுகள் உள்ள உலகை சகித்துக்கொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும் என்பதுதான். ஏற்றத்தாழ்வுகள்,வர்க்க பேதங்கள், போலித்தனங்கள் அனைத்தும் நிரம்பிய உலகில் நாம் வாழ்கிறோம். விஞ்ஞான, பொருளாதார முன்னேற்றத்தால் பசியை, வறுமையை ஒழிக்க முடியும் என நான் நம்புகிறேன். அதை செய்ய நாம் முன்னேற வேண்டும்.கல்வி பயில வேண்டும்.
அப்துல்கலாம் சொன்ன வழி தான் எனக்கு சரியென படுகிறது. காந்தியும் மார்க்ஸும் சாதிக்க முடியாததை அப்துல்கலாமின் வழி சாதிக்குமோ இல்லையோ இருக்கும் உலகை மேம்படுத்த அது உதவும் என நான் நம்புகிறேன். பொன்னுலகமும், ராமராஜ்ஜியமும் எப்போதுமே சாத்தியமில்லை என்ற முடிவுக்கும் நான் வந்துவிட்டேன். அவை இரு மனிதர்களின் கனவுலகங்கள். உடோபியாக்கள்.


-

N. Kannan Thu, Oct 14, 2010 at 4:15 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
2010/10/14 செல்வன் <holyape@gmail.com>
>
> அப்துல்கலாம் சொன்ன வழி தான் எனக்கு சரியென படுகிறது. காந்தியும் மார்க்ஸும் சாதிக்க முடியாததை அப்துல்கலாமின் வழி சாதிக்குமோ இல்லையோ இருக்கும் உலகை மேம்படுத்த அது உதவும் என நான் நம்புகிறேன். பொன்னுலகமும், ராமராஜ்ஜியமும் எப்போதுமே சாத்தியமில்லை என்ற முடிவுக்கும் நான் வந்துவிட்டேன். அவை இரு மனிதர்களின் கனவுலகங்கள். உடோபியாக்கள்.
>
>
நான் காந்தியைப் பார்த்ததில்லை. ஆனால் கலாமுடன் செலவழித்த பல மணி
நேரங்களில் காந்தியோடு இருப்பது போலவே உணர்ந்தேன். கலாமிற்கு காந்தியே
ஆதர்சம்.

க.>
[Quoted text hidden]

Mohanarangan V Srirangam Thu, Oct 14, 2010 at 4:32 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2010/10/14 N. Kannan <navannakana@gmail.com>
2010/10/14 செல்வன் <holyape@gmail.com>
>
> அப்துல்கலாம் சொன்ன வழி தான் எனக்கு சரியென படுகிறது. காந்தியும் மார்க்ஸும் சாதிக்க முடியாததை அப்துல்கலாமின் வழி சாதிக்குமோ இல்லையோ இருக்கும் உலகை மேம்படுத்த அது உதவும் என நான் நம்புகிறேன். பொன்னுலகமும், ராமராஜ்ஜியமும் எப்போதுமே சாத்தியமில்லை என்ற முடிவுக்கும் நான் வந்துவிட்டேன். அவை இரு மனிதர்களின் கனவுலகங்கள். உடோபியாக்கள்.
>
>

நான் காந்தியைப் பார்த்ததில்லை. ஆனால் கலாமுடன் செலவழித்த பல மணி
நேரங்களில் காந்தியோடு இருப்பது போலவே உணர்ந்தேன். கலாமிற்கு காந்தியே
ஆதர்சம்.



காந்தி எனக்கு ஒரு புதிராய் இருக்கிறார் :--))) 


செல்வன் Fri, Oct 15, 2010 at 5:56 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2010/10/14 N. Kannan 
நான் காந்தியைப் பார்த்ததில்லை. ஆனால் கலாமுடன் செலவழித்த பல மணி
நேரங்களில் காந்தியோடு இருப்பது போலவே உணர்ந்தேன். கலாமிற்கு காந்தியே
ஆதர்சம்.


கலாம் பிராக்டிகலான காந்தி.வலுவான மனிதன் பேசும் அகிம்சையே உலகில் எடுபடும் என்பதை உணர்ந்த காந்தி.
-- 
-----------
செல்வன்


Innamburan Innamburan Fri, Oct 15, 2010 at 5:19 PM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
இந்த இழையில் காந்தீயம் சார்ந்த கருத்துக்களும் உலவவேண்டும் என்று ஒரு லின்க் கொடுக்கிறேன்: https://mail.google.com/mail/?shva=1#mbox/12bafa21f9cb9362: பவளசங்கரியின் 

[MinTamil] இந்தியத் திருநாட்டின் மறுமலர்ச்சியில் பெண்கள் - பாகம் - 6

இன்னம்பூரான்
[Quoted text hidden]

Innamburan Innamburan Sat, Oct 16, 2010 at 10:10 AM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan

இங்கும் பொருந்தும் வருகை தானே இது.

இன்று ஸ்வாமி விவேகானந்தரின் ஜன்ம தினம் ( 6 ஃபெப்ரவரி, 1921). அவரின் நினைவுக்கு மரியாதையும் வணக்கமும் செய்வதற்காக, பேலூர் மடத்துக்கு வந்துள்ளேன். அவருடைய படைப்புகளை கரைத்து குடித்தேனா! அதன் அரும்பயன் யாதெனில், என்னுடைய நாட்டுப்பற்று, ஆயிரம் பங்கு அதிகரித்து விட்டது. இளைஞர்களே! ஸ்வாமி விவேகானந்தர் வாழ்ந்து, மறைந்த இந்த இடத்திலிருந்து, ஆத்மபலன் பெறாமல், வெறுங்கையுடன் திரும்பி விடாதீர்கள்.
- மஹாத்மா காந்தி 
  • இப்படிக்க்கு, 
இன்னம்பூரான்
16 10 2010


I have come here [Belur Math] to pay my homage and respect to the revered memory of Swami Vivekananda, whose birtday is beng celebrated today [6 February 1921]. I have gone through his works very thoroughly, and after having gone thorugh them, the love that I had for my country became a thousandfold. I ask you, young men, not to go away empty-handed without imbibing something of the spirit of the place where Swami Vivekananda lived and died.
- Mahatma  Gandhi
- Prabuddha Bhārata, May 1963. p.170 cited in Great Thinkers on Ramakrishna Vivekananda; p.113
[Quoted text hidden]

No comments:

Post a Comment