Friday, March 1, 2013

Inna.com> அன்றொருநாள்: ஃபெப்ரவரி 23 ‘...வெய்ய கதிரோன் விளக்காக...’ 29 messages Innamburan Innamburan Wed, Feb 22, 2012 at 6:29 PM To: mintamil , thamizhvaasal Cc: Innamburan Innamburan Bcc: innamburan88 , coral shree , anantha narayanan nagarajan , Soumya Srinivasan , Manimekalai kalai அன்றொருநாள்: ஃபெப்ரவரி 23 ‘...வெய்ய கதிரோன் விளக்காக...’ (பொய்கையாழ்வார்) ‘உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.’ (சங்கீதம்: 119:120 விவிலியம்) ‘பொய்யிலிருந்து தடுத்தாட்கொண்டு, என்னை மெய்ஞானம் நோக்கி அழைத்துச் செல்க என்று தினந்தோறும் இறைவனை பிரார்த்திக்கிறேன். ‘Lead, kindly Light...‘என்று கார்டினல் ந்யூமென் அதைத்தான் சொல்கிறார் அல்லவா!’ ~அண்ணல் காந்தி வினோபா பாவேக்கு மார்ச் 10, 1947ல் எழுதிய மடல். வணக்கத்துக்குரிய கார்டினல் ஜான் ஹென்றி ந்யூமென் அவர்களின் ஜன்ம தினம் ஃபெப்ரவரி 21,1801. பரலோகம் அடைந்த தினம், ஆகஸ்ட் 11, 1890. இரு நாட்கள் முன்னால் எழுதாமல், ஆகஸ்ட் வரை காத்திராமல், பொய்கையாழ்வாரின் துணை நாடி, கார்டினல் ஜான் ஹென்றி ந்யூமென் அவர்களை பற்றி இன்று ஏன் எழுதவேண்டும்? இது என்னுள் எழுந்த வினா. நேற்றைய நன்நிமித்தம்: ‘... ஒரு அகல் விளக்கை (மெழுகுவர்த்தி) தீப ஒளியாக, இன்றைய தினம் சாயும் வேளையில் வைக்கும் சாரண இயக்கத்தின் குறிப்பு, போற்றத்தக்கது => ‘Lead, Kindly Light.’...’ என்று எழுத நேரிட்டது. ந்யூமென், ஃபெப்ரவரி 23, 1843 அன்று,ரோமன் கத்தோலிக்க மதம் பற்றி தான் அது வரை கூறிய கடுமையான விமர்சனங்களை நிராகரித்து ஒரு அறிக்கை விட்டார். இரண்டு வருடங்கள் கழிந்த பின் அக்டோபர் 5, 1845 அன்று கத்தோலிக்க மதம் அவரை ஏற்றுக்கொண்டது. விரைவில் கார்டினல் என்ற மிக உயர்ந்த பதவி அவரை தேடி வந்தது. இவருக்கு பால்யத்தில் சமய ஆர்வம் இருக்கவில்லை. சீர்திருத்த வாதிகளின் தாக்கம் இருந்தது. 15 வயதில் சமய ஆர்வம் இவரை ஆட்கொண்டது. கால்வினிஸ்ட் மரபு இவரை ஆகர்ஷித்தது. காலப்போக்கில், சம்பிராயதமான ஆங்க்ளிகன் எனப்படும் சமயப்பிரிவில் மத போதகராகி விட்ட ந்யூமென், 23 வயதிலேயே முதல் போதனை பிரசங்கம் செய்து பிரபலமானார். 20 வருடங்களில் அவர் மதம் மாறியதை ஒரு அபூர்வமான ஆன்மீக பயணம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சராசரி கிருத்துவ மத போதகரின் கரடுமுரடான பாதை இது அன்று. இது காரணம் இரண்டு. அதனால் தான் சங்கீதம்: 119:120 விவிலியம் பாடப்பட்டது. இவருடைய பணிகள் யாவும் உன்னதமானவை. ஆனால், இன்று டப்ளின் பல்கலைக் கழகமாக விளங்கும் அயர்லாந்தின் கத்தோலிக்க பல்கலைக்கழக ஸ்தாபனம், கல்வியை பற்றி அவர் அளித்த அருமையான அறிவுரைகள், 'Lead, Kindly Light' என்ற அமரகாவியம் ஆகிய மூன்றையும் உலகம் என்றும் மறக்காது. மேலும் ஒரு தனிச்சிறப்பு. 'Lead, Kindly Light' மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது. இது மூன்றாவது காரணம். அந்த சமரச சன்மார்க்கத்தை பற்றி கூற விருப்பம். அண்ணல் காந்தியின் கடிதமே ஒரு சான்று. ஜூன் 16, 1833ல் எழுதப்பட்ட இந்த தோத்திரம், மத எல்லைகளை கடந்து, பயணித்தது. ஏழே வருடங்களில், கிட்டத்தட்ட எல்லா தோத்திரத்தொகுப்புகளிலும் இது இடம் பெற்றது. கிருத்துவ மரபுகளில், யுனிடேரியன், பாப்டிஸ்ட், மெதடிஸ்ட் எல்லா மரபுகளும் இதை ஸ்வீகரித்துக்கொண்டன. ஆங்கில மொழியில் உள்ள தோத்திரங்களில் இது முதன்மை இடத்தைப் பிடித்து விட்டது என்றால் மிகையாகாது. நிதானமாக படித்துப்பார்த்தால், எளிய நடையில், இறைவனுடன் தனிமனிதனின் ஆன்மீக உரையாடலாக புலப்படும். அண்ணல் காந்திக்கு இந்த தோத்திரத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாடு பற்றி பல கடிதங்களும், ஆவணங்களும் உளன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக: ஃபெப்ரவரி 10, 1908 அன்று ஜோஹனஸ்பர்கில் அவருக்கு பலமான அடி. ஸ்மட்ஸுடன் கூடி ஏமாற்றிவிட்டார் என்று தவறாக கருதிய இந்தியன் முஸ்லீம்கள் அவரை தாக்கினர். அடைக்கலம் கொடுத்தது ஜோஸஃப் டோக் என்ற பாதிரி. காந்த்ஜியால் பேசமுடியவில்லை. உதடு வீக்கம். அவர் மூன்று வேண்டுகோள்களை எழுதினார். ஸ்மட்ஸுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வசதி செய்யவேண்டும்; தன்னை அடித்தவர்களை விடுவிக்க வேண்டும் விண்ணப்பத்தை அரசு வக்கீலிடம் அனுப்ப வேண்டும். டோக் அவர்களின் பெண் ஆலிவ் Lead, Kindly Light' பாடவேண்டும். ‘Lead, Kindly Light' "Lead, Kindly Light, amidst th'encircling gloom, Lead Thou me on! The night is dark, and I am far from home, Lead Thou me on! Keep Thou my feet; I do not ask to see The distant scene; one step enough for me. I was not ever thus, nor prayed that Thou Shouldst lead me on; I loved to choose and see my path; but now Lead Thou me on! I loved the garish day, and, spite of fears, Pride ruled my will. Remember not past years! So long Thy power hath blest me, sure it still Will lead me on. O’er moor and fen, o’er crag and torrent, till The night is gone, And with the morn those angel faces smile, Which I have loved long since, and lost awhile! Meantime, along the narrow rugged path, Thyself hast trod, Lead, Saviour, lead me home in childlike faith, Home to my God. To rest forever after earthly strife In the calm light of everlasting life." இதை தமிழில் மொழியாக்கம் செய்யப்போவது யார்? இன்னம்பூரான் 23 02 2012 http://www.newmanu.edu/sites/default/files/images/generic-400w/Newman_Ouless_400w.jpg உசாத்துணை http://escholarship.usyd.edu.au/journals/index.php/SSR/article/viewFile/668/648 பி.கு. நாளைய ‘அன்றொரு தினம்’ இழையை, அன்றைய செய்தி ஒன்றை பிரமேயமாக வைத்து, சுய அனுபவம்/புராணம் ஒன்றை ஓதி விடலாமா? இ கி.காளைராசன் Wed, Feb 22, 2012 at 8:23 PM To: mintamil@googlegroups.com Cc: thamizhvaasal , Innamburan Innamburan ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம். 2012/2/22 Innamburan Innamburan இந்தியன் முஸ்லீம்கள் அவரை தாக்கினர். அடைக்கலம் கொடுத்தது ஜோஸஃப் டோக் என்ற பாதிரி. காந்த்ஜியால் பேசமுடியவில்லை. உதடு வீக்கம். I am not ever thus, nor prayed that Thou Shouldst lead me on; I loved to choose and see my path; but now Lead Thou me on! Lead, Kindly Light' -- அன்பன் கி.காளைராசன் Innamburan Innamburan Wed, Feb 22, 2012 at 9:02 PM To: mintamil அன்பின் காளை ராஜன், *திருமந்திரம் 297 வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன் கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும் வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே * இன்னம்பூரான் 2012/2/22 கி.காளைராசன் [Quoted text hidden] DEV RAJ Thu, Feb 23, 2012 at 5:18 AM Reply-To: mintamil@googlegroups.com To: மின்தமிழ் Lead, Kindly Light, amidst th'encircling gloom, Lead Thou me on! The night is dark, and I am far from home, Lead Thou me on! Keep Thou my feet; I do not ask to see The distant scene; one step enough for me http://www.youtube.com/watch?v=o_fwdfFnQm8&feature=related தமஸோ மா ஜ்யோதிர்க³மய On Feb 22, 11:29 pm, Innamburan Innamburan wrote: [Quoted text hidden] > *‘**Lead, **Kindly **Light'* > > *"Lead, Kindly Light, amidst th'encircling gloom, > Lead Thou me on! > The night is dark, and I am far from home, > Lead Thou me on! > Keep Thou my feet; I do not ask to see > The distant scene; one step enough for me.* > > *I was not ever thus, nor prayed that Thou > Shouldst lead me on; > I loved to choose and see my path; but now > Lead Thou me on! > I loved the garish day, and, spite of fears, > Pride ruled my will. Remember not past years!* > > *So long Thy power hath blest me, sure it still > Will lead me on. > O’er moor and fen, o’er crag and torrent, till > The night is gone, > And with the morn those angel faces smile, > Which I have loved long since, and lost awhile!* > > *Meantime, along the narrow rugged path, > Thyself hast trod, > Lead, Saviour, lead me home in childlike faith, > Home to my God. > To rest forever after earthly strife > In the calm light of everlasting life."* > > இதை தமிழில் மொழியாக்கம் செய்யப்போவது யார்? > > இன்னம்பூரான் > > 23 02 2012 > > http://www.newmanu.edu/sites/default/files/images/generic-400w/Newman... > > [image: Inline image 1] > > உசாத்துணை > > http://escholarship.usyd.edu.au/journals/index.php/SSR/article/viewFi... > > பி.கு. நாளைய ‘அன்றொரு தினம்’ இழையை, அன்றைய செய்தி ஒன்றை பிரமேயமாக வைத்து, > சுய அனுபவம்/புராணம் ... > > read more » -- "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com For more options, visit this group at http://groups.google.com/group/minTamil Hari Krishnan Thu, Feb 23, 2012 at 7:40 AM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com 2012/2/23 DEV RAJ Lead, Kindly Light, amidst th'encircling gloom, Lead Thou me on! The night is dark, and I am far from home, Lead Thou me on! Keep Thou my feet; I do not ask to see The distant scene; one step enough for me ஒளியை ஏற்று; வழிகாட்டு ஓங்கிச் சூழும் இருளிடையே ஒருவழி எனக்கு நீகாட்டு. இரவோ இருளில் கிடக்கிறது இதம்தரும் வீடோ வெகுதூரம் எனக்கு நீயே வழிகாட்டு. என்கா லசைவில் நீயேநில்; எட்டாத் தொலைவில் இருக்கின்ற எதுவும் தேவை யிலையெனக்கு. ஓரடி... ஓரடி... நகருவதே உன்னதக் காட்சி எனக்காகும். இதுபோல் என்றும் இருந்ததிலை; இதுவரை எனக்கு வழிகாட்ட இறைஞ்சி உன்னைக் கேட்டதிலை. என்றன் பாதையை நானெனக்கே இதுவரை வகுத்தேன்; ஆனாலின்(று) எனக்கு நீயே வழிகாட்டு. மேலொளி தன்னை நான்ரசித்தேன். மேனாள் பயமே அற்றிருந்தேன். வினையில் அகந்தை மிக்கிருந்தேன்..... இறந்து விட்ட அன்னாளை இன்று நினைவில் கொள்ளாதே.... உன்றன் கருணை எனைவாழ்த்தல் உறுதி யானால் அதுவென்னை உதவா நிலத்தும் சேற்றினிலும் ஓங்கும் இரவு ஓயும்வரை ஓயா தென்றும் நடத்திடுதல் உறுதி உறுதி மிகவுறுதி. காலை வந்ததும் ஒளிமயமாய்க் காண்பேன் இதுவரைக் காண்பதற்குக் காத்தி ருந்த நானிழந்த-- தேவர்கள் புன்சிரிப் போடென்னைத் தேடிடும் காட்சி யதுவொன்றை. 12.5.1976 அன்று மொழிபெயர்த்தது. (பழைய நோட்டைத் தேடி எடுக்க வைத்த தேவுக்கு நன்றி.) -- அன்புடன், ஹரிகி. [Quoted text hidden] DEV RAJ Thu, Feb 23, 2012 at 8:49 AM Reply-To: mintamil@googlegroups.com To: மின்தமிழ் மகிழ்ச்சி ஐயா ”The night is dark, and I am far from home, Lead Thou me on!” இரவோ இருளில் கிடக்கிறது இதம்தரும் வீடோ வெகுதூரம் எனக்கு நீயே வழிகாட்டு. மனத்தைத் தைக்கும் வரிகள் இவை. சாதகனுக்குத் தேவையான நிர்வேதம் பொதிந்த கவிதை ! உயர்ந்த சிந்தனையை விதைத்த பெரியவர் இன்னம்பூரருக்கு நன்றி தெரிவிப்போம் தேவ் On Feb 23, 12:40 pm, Hari Krishnan wrote: > 2012/2/23 DEV RAJ [Quoted text hidden] Geetha Sambasivam Thu, Feb 23, 2012 at 1:16 PM To: thamizhvaasal@googlegroups.com Cc: mintamil , Innamburan Innamburan வழக்கம்போல் அருமையான தகவல்கள். தாமதமாய் வந்ததின் பலன் கூடவே ஹரிகியின் மொழியாக்கத்தையும் படிக்க முடிந்தது. 24-ம் தேதிக்கான சுயபுராணத்துக்குக் காத்திருக்கேன். இங்கே இப்போத்தான் 23-ம் தேதி விடிஞ்சிருக்கு! வெய்ய கதிரோன் விளக்காக நின்று காட்சி தருகிறான். மனதில் பல நற்சிந்தனைகளைத் தூண்டும் பதிவுக்கு நன்றி. On Wed, Feb 22, 2012 at 12:29 PM, Innamburan Innamburan wrote: அன்றொருநாள்: ஃபெப்ரவரி 23 ‘...வெய்ய கதிரோன் விளக்காக...’ (பொய்கையாழ்வார்) ‘உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.’ (சங்கீதம்: 119:120 விவிலியம்) ‘பொய்யிலிருந்து தடுத்தாட்கொண்டு, என்னை மெய்ஞானம் நோக்கி அழைத்துச் செல்க என்று தினந்தோறும் இறைவனை பிரார்த்திக்கிறேன். ‘Lead, kindly Light...‘என்று கார்டினல் ந்யூமென் அதைத்தான் சொல்கிறார் அல்லவா!’ ~அண்ணல் காந்தி வினோபா பாவேக்கு மார்ச் 10, 1947ல் எழுதிய மடல். இதை தமிழில் மொழியாக்கம் செய்யப்போவது யார்? இன்னம்பூரான் 23 02 2012 http://www.newmanu.edu/sites/default/files/images/generic-400w/Newman_Ouless_400w.jpg உசாத்துணை http://escholarship.usyd.edu.au/journals/index.php/SSR/article/viewFile/668/648 பி.கு. நாளைய ‘அன்றொரு தினம்’ இழையை, அன்றைய செய்தி ஒன்றை பிரமேயமாக வைத்து, சுய அனுபவம்/புராணம் ஒன்றை ஓதி விடலாமா? இ -- You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group. To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com. To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com. For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en. Innamburan Innamburan Thu, Feb 23, 2012 at 2:52 PM To: Geetha Sambasivam கருத்தளித்த வாசகர்களுக்கு நன்றி. இந்த இழையை எழுதும்போதே, பல சிந்தனைகள் நடை பயின்றன, மனத்துள். தொன்மை (mythology), முதலில் அஞ்சினாலும், ஒளியை தொழுதது. வைகறையில் சூரியோதயம் ஆதிமனிதனை ஆகர்ஷித்தது => ‘கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்/கனையிருள் அகன்றது காலையம் பொழுதாய்...’ .சூரிய அஸ்தமனம் மன நிம்மதியை குலைத்தது. முதல் வேதமாகிய ரிக்வேதத்தின் முதல் தோத்திரத்தின் முதல் வரியில் அக்னியின் புகழாக அமைந்தது ஆச்சரியமன்று. अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥ கதிரோன் ஒளி வீசினால், இருள் அகலும். அவன் திசை திரும்பினால், இருளை விலக்க, அக்னி வருகை புரியவேண்டும். வள்ளலாரின் ஜோதி வழிபாடு புரிகிறது. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி ‘சுட்டும் விழி சுடர் தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோ...’ என்று பாடிய ஒளி படைத்தக் கண்ணினான் வில்லியம் ப்ளேக் என்ற தொன்மை கவிஞனின் Tyger! Tyger! burning bright In the forests of the night, What immortal hand or eye Dare frame thy fearful symmetry? என்ற கவிதையை நினைவூட்டுகிறார். எழுதிக்கொண்டே போகலாம்! இதற்கென்றே ஒரு தனி இழை துவக்கலாம். ‘...இதம்தரும் வீடோ வெகுதூரம்...’ என்ற மொழியாக்கம் என்னை கவர்ந்தது. நன்றி, வணக்கம், இன்னம்பூரான் [Quoted text hidden] Innamburan Innamburan Thu, Feb 23, 2012 at 2:53 PM To: innamburan88 [Quoted text hidden] Hari Krishnan Thu, Feb 23, 2012 at 3:15 PM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com 2012/2/23 Geetha Sambasivam 24-ம் தேதிக்கான சுயபுராணத்துக்குக் காத்திருக்கேன். இங்கே இப்போத்தான் 23-ம் தேதி விடிஞ்சிருக்கு! அம்மாடியோவ்! எடம் தெரியாம தலய நீட்டிட்டேனா! சாரி சாரி மன்னாப்பு மன்னாப்பு... இனிமேல் எச்சரிக்கையாக இருந்து கொள்கிறேன். சம்பந்தப்பட்டவர் மன்னித்துக் கொள்ளவும். -- அன்புடன், ஹரிகி. -- "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com For more options, visit this group at http://groups.google.com/group/minTamil Geetha Sambasivam Thu, Feb 23, 2012 at 3:51 PM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com பி.கு. நாளைய ‘அன்றொரு தினம்’ இழையை, அன்றைய செய்தி ஒன்றை பிரமேயமாக வைத்து, சுய அனுபவம்/புராணம் ஒன்றை ஓதி விடலாமா? இ// 24-ம் தேதிக்கான சுயபுராணத்துக்குக் காத்திருக்கேன். இங்கே இப்போத்தான் 23-ம் தேதி விடிஞ்சிருக்கு! // என்னோட கருத்து இன்னம்புராருக்குச் சொன்னது. அதையும் எடுத்துப் போட்டிருக்கணுமோ?? [Quoted text hidden] Hari Krishnan Thu, Feb 23, 2012 at 3:56 PM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com 2012/2/23 Geetha Sambasivam என்னோட கருத்து இன்னம்புராருக்குச் சொன்னது. அதையும் எடுத்துப் போட்டிருக்கணுமோ?? ஐஏஎஸ் அலுவலர்களிடம் பேப்பரை நீட்டினால், இரண்டு கையாலும் முதுகை வளைத்துக் கொண்டு, குனிந்து தரவேண்டும். இல்லாவிட்டால் கொடுத்த பேப்பரை முகத்தில் விட்டெறிவார்கள். இரண்டாண்டுகள் டெபுடேஷனில் வந்த ஐஏஎஸ் அலுவலகருக்கு எக்ஸிக்யுடிவ் செகரடரியாக இருந்து நிறையவே அனுபவப் பட்டிருக்கிறேன். ஆகவே, பெரியவர்கள் இழையென்றால் எட்டு முழம் எட்டி நிற்கக் கற்றுக் கொண்டுவிட்டேன். பெரியவர்கள் இழை என்பது பின்னால்தான் தெரிந்தது. அதைத்தான் சொன்னேன். -- அன்புடன், ஹரிகி. [Quoted text hidden] rajam Thu, Feb 23, 2012 at 7:19 PM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com ஓ ஓ , என்ன செய்ய?! ஒரு தனி மடல் அனுப்பினேன். அது ஆழ்கிடங்கில் போய்விடுமென்று இங்கே அதைத் திருப்புகிறேன் ... +++++++++++++++++++++++++++++++ சரி, அன்புள்ள தம்பிமாரே ... ஆஆ! ரெண்டு "திருட்டு"த் தம்பிகளும் எங்க பாத்திமாக் கல்லூரி மாட்டொ (motto) பாட்டெ எடுத்துப் போட்டு ... மொழியாக்கம் செஞ்சுட்டாங்க'ப்பா! நல்லாதான் இருக்கு! :-) எங்க கல்லூரிலெ அது அமைதி தந்த / தரும் பாடல். ஒவ்வோர் ஆண்டும் "மெழுகுதிரித் திருநாள்" (candle light ceremony) என்று பட்டப் படிப்பின் இறுதியாண்டை முடிக்கும் வகையில் கொண்டாடும் மாலை/இரவு நேரம். ஒவ்வொரு மாணவியும் ஒவ்வொரு ஆசிரியையிடமிருந்தும் மெழுகுதிரியின் விளக்கைப் பெற்றுக் கொள்ளும் அந்த நிகழ்ச்சி ... அப்படியே நெஞ்சை உருக்கிவிடும். பிறகு எல்லாரும் வரிசையாகப் போய் மேரி மாதாவின் "grotto" பக்கம் அந்த மெழுகுவர்த்திகளை நட்டுவைப்போம். +++++++++++++++++++++++++++++++ இளைய தலைமுறைக்கு "அறிவு" எப்படிப் பரவுகிறது என்பதற்கு இந்தச் சடங்கு மிகவும் உதவும் (கார்த்திகைத் தீபம் போல). இதெல்லாம் என் வாழ்க்கைப் பதிவுகளில் வரும், என்றைக்கு என்று தெரியாது! :-) இந்த வயசான அக்கா அந்தப் பாட்டைப் பாடிவைத்திருக்கிறாள். என்றைக்காவது ஒருநாள், பிறர் கேலி செய்யமாட்டார்கள் என்ற உறுதியிருந்தால் ... பகிர்ந்துகொள்வாள். ஒரு முறை "வானாகி மண்ணகி ... " பாட்டை ஒலிப்பதிவாக வேளியிட்டு ... கிடைத்தது வெறும் சாணிதான். ஆனால் ... இப்போதைக்கு ... புத்தக வேலை, உடல் நலம் இரண்டும் மிக முக்கியம். அதனால் என் பாட்டு பின்னணிக்குப் போய்விடும். மீண்டும் என் புத்தகப் புதையலுக்குள் போகிறேன். முடிந்தபோது மீண்டும் வருகிறேன். எல்லாரும் உடல் நலம் பேணவும். அன்புடன், ராஜம் [Quoted text hidden] [Quoted text hidden] Subashini Tremmel Thu, Feb 23, 2012 at 7:27 PM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com Cc: Subashini Kanagasundaram முடிந்த போது வந்து போங்க.. சுபா [Quoted text hidden] -- Suba Tremmel http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..! http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..! http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..! http://ksuba.blogspot.com - Suba's Musings [Quoted text hidden] Geetha Sambasivam Fri, Feb 24, 2012 at 12:02 AM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com ரொம்ப நாட்கள் கழித்துப் பார்த்ததில் சந்தோஷம் அம்மா. நேரம் இருக்கையில் வாருங்கள். On Thu, Feb 23, 2012 at 1:19 PM, rajam wrote: ஓ ஓ , என்ன செய்ய?! ஒரு தனி மடல் அனுப்பினேன். அது ஆழ்கிடங்கில் போய்விடுமென்று இங்கே அதைத் திருப்புகிறேன் ... ஆனால் ... இப்போதைக்கு ... புத்தக வேலை, உடல் நலம் இரண்டும் மிக முக்கியம். அதனால் என் பாட்டு பின்னணிக்குப் போய்விடும். மீண்டும் என் புத்தகப் புதையலுக்குள் போகிறேன். முடிந்தபோது மீண்டும் வருகிறேன். எல்லாரும் உடல் நலம் பேணவும். அன்புடன், ராஜம் On Feb 22, 2012, at 11:40 PM, Hari Krishnan wrote: "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com For more options, visit this group at http://groups.google.com/group/minTamil [Quoted text hidden] செல்வன் Fri, Feb 24, 2012 at 12:28 AM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com லீவ் அப்ரூவ்ட். ஆனால் புஸ்தகத்தில் எங்களுக்கு எல்லாம் ராயல்டி வந்துடணும்:-). [Quoted text hidden] -- செல்வன் "ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன் www.holyox.blogspot.com http://gplus.is/selvan http://twitter.com/#holyox [Quoted text hidden] rajam Fri, Feb 24, 2012 at 2:48 AM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com Cc: செல்வன் ஒரு புத்தகத்துக்கும் எனக்கு ராயல்டி கிடைத்ததில்லை'ப்பா! என் dissertation-க்கு ரெண்டு தடவை ஏதோ பணம் அனுப்பினாங்க. இப்பொ அதெல்லாம் பிடிஃப் கோப்புலெ போகும்போது ... எனக்கு என்ன ராயல்டி கிடைக்கும்? ஒங்க மாதிரி இளைய சமுதாயம் ஆர்வம் கொண்டால் ... என்னெ மாதிரிப் பழமையாட்களுக்கு ஏதாவது கிடைக்கும். கிடைத்தால் ... ஆஆ ... எல்லாருடனும் பகிர்ந்துகொள்வேனே! :-) [Quoted text hidden] [Quoted text hidden] செல்வன் Fri, Feb 24, 2012 at 3:07 AM Reply-To: mintamil@googlegroups.com To: rajam Cc: mintamil@googlegroups.com ஆகா....?கீதாம்மா வேற உங்க புஸ்தகம் ரிலிசானவுடன் ஆயிரம் காப்பி வாங்கி மிந்தமிழர் அனைவருக்கும் அனுப்புவதா சொல்லிருக்காங்க.அப்புறம் ராயல்டிக்கு என்ன குறை?:-) சரிம்மா....நாங்க இப்படிதான் உங்க நேரத்தை வீணடிச்சுகிட்டு இருப்போம். நீங்களாச்சும் தமிழுக்கு உருப்படியா எதையாவது செய்ய விடுறோம்.வெற்றிகரமா புஸ்தகத்தை எழுதிமுடிச்சுட்டு வாங்க.நல்வாழ்த்துக்கள். அமெசான்ல முதல் பிரதியை வாங்க ஆவலா இருக்கேன் [Quoted text hidden] rajam Fri, Feb 24, 2012 at 3:37 AM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com Cc: செல்வன் On Feb 23, 2012, at 7:07 PM, செல்வன் wrote: ஆகா....?கீதாம்மா வேற உங்க புஸ்தகம் ரிலிசானவுடன் ஆயிரம் காப்பி வாங்கி மிந்தமிழர் அனைவருக்கும் அனுப்புவதா சொல்லிருக்காங்க.அப்புறம் ராயல்டிக்கு என்ன குறை?:-) அது மட்டுமா, செல்வன்? "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்று பாடித் திரிகிறவர் எல்லாரும் என் அந்த "அன்றீக்கு அடிகளார் தமிழ்" புத்தகத்தை வாங்காவிட்டால் ... சரி, நான் "சாபம்" போடக் கூடாதென்று நம் மறைமூர்த்தி கண்ணனார் சொல்லியிருக்கார். 60-வயதுக்கு மேற்பட்டவர்கள் "சிறுபிள்ளைத்தனமாக" இருக்கப்படாதாம்! அது என்ன கணக்கோ, தெரியலெ. சின்ன வயசுக்காரங்க "சிறுபிள்ளைத்தனமாக" நடந்துக்கலாமோ? புரியலெ. :-) அது கிடக்க. ராயல்டி கிடைக்கட்டும், பாப்பம். அதுக்கு முன்னாலெ ... புத்தகத்தெச் சரியா முடிக்க ... பணம் இல்லெ, கணினி இல்லெ, கணினியில் உள்ள மென்பொருள் எதுவும் சரியா வேலெ பாக்கலெ. என்னென்ன சிக்கல்'ப்பா. ஆராய்ச்சியும் வேணாம், ஒண்ணும் வேணாம்-னு நிம்மதியா இருந்தா-ப் போதும்-னு இருக்கு. பணக்கஷ்டத்தோடெ போகும். பாப்பம். "எங்களுக்கும் காலம் வரும்; காலம் வந்தால் வாழ்வு வரும்; வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே...." இதுவே என் தாரக மந்திரம். :-) சரிம்மா....நாங்க இப்படிதான் உங்க நேரத்தை வீணடிச்சுகிட்டு இருப்போம். நீங்களாச்சும் தமிழுக்கு உருப்படியா எதையாவது செய்ய விடுறோம்.வெற்றிகரமா புஸ்தகத்தை எழுதிமுடிச்சுட்டு வாங்க.நல்வாழ்த்துக்கள். அமெசான்ல முதல் பிரதியை வாங்க ஆவலா இருக்கேன் வாழ்த்துக்கு நன்றி'ப்பா! [Quoted text hidden] [Quoted text hidden] Nagarajan Vadivel Fri, Feb 24, 2012 at 3:58 AM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com அட காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம் கையும் காலுந்தானே மிச்சம் அட காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம் கையும் காலுந்தானே மிச்சம் http://www.youtube.com/watch?v=UIlCFbDtyFg&feature=related சும்ம கிடந்த நிலத்தை கொத்தி சொம்பலில்லாம ஏர் நடத்தி கம்மா கரையை ஒசத்தி கட்டி கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி சம்பா பயிரை பறிச்சு நட்டு தகுந்த முறையில் தண்ணீர் விட்டு நெல்லு விளைஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறைஞ்சிருக்கு - நாகராசன் [Quoted text hidden] rajam Fri, Feb 24, 2012 at 4:23 AM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com Cc: Nagarajan Vadivel பேராசிரியர் ஐயா, அமோகமான பழைய பாட்டு, எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! நன்றி! ஆனாலும் ... இந்த இழையைத் தொடங்கிய "இ" ஐயா வந்து அம்ம அல்லாரெயும் ஒரு செமெத்து செமத்துமுன்னெ ... நான் ஓடிடுறேன்! :-) இங்கெ இன்னும் ஃபெப்ரவரி 23. அதனால் எனக்கு-னு ஒரு மன்னிப்புக் கிடைத்தாலும் கிடைக்கலாம்! இன்னும் சில நாள் ... என் கணினியும் என் புத்தகமுமே என் அன்பர்கள் என்ற நிலையில் ... பிற பின்னர். அன்புடன், ராஜம் [Quoted text hidden] [Quoted text hidden] coral shree Fri, Feb 24, 2012 at 4:37 AM To: Innamburan Innamburan [Quoted text hidden] அன்பின் ஐயா , முயன்று பார்க்கிறேன். தாங்கள் சென்ற முறை வழிகாட்டிய முறையில்... உங்களிடம் பாராட்டு பெற முடியுமா பார்க்கிறேன் ஐயா. நன்றி. வணக்கம். அன்புடன் பவளா. http://www.newmanu.edu/sites/default/files/images/generic-400w/Newman_Ouless_400w.jpg உசாத்துணை http://escholarship.usyd.edu.au/journals/index.php/SSR/article/viewFile/668/648 பி.கு. நாளைய ‘அன்றொரு தினம்’ இழையை, அன்றைய செய்தி ஒன்றை பிரமேயமாக வைத்து, சுய அனுபவம்/புராணம் ஒன்றை ஓதி விடலாமா? சொல்லுங்கள் ஐயா..காத்திருக்கிறோம் அறிந்து கொள்ள..... இ -- மின் செய்தி மாலை படியுங்கள். Take life as it comes. All in the game na !! Pavala Sankari coralsri.blogspot.com Erode. Tamil Nadu. Innamburan Innamburan Fri, Feb 24, 2012 at 7:21 AM To: mintamil Bcc: innamburan88 ஒகடி: '...60-வயதுக்கு மேற்பட்டவர்கள் "சிறுபிள்ளைத்தனமாக" இருக்கப்படாதாம்! அது என்ன கணக்கோ, தெரியலெ. சின்ன வயசுக்காரங்க "சிறுபிள்ளைத்தனமாக" நடந்துக்கலாமோ? புரியலெ. :-) அது கிடக்க. => அதானே! நான் துடிதுடிச்சுப் போய்ட்டேன். கண்ணண்ட்டெயும் பயம். 'பெரியவர்' என்று சொல்லி மொத்தறவர்களிடம் பயம். ஆக மொத்தம் டென்ஷன். இரண்டு: பாடலாசிரியர் பேராசிரியர்க்கு, மெருகு சேர்த்ததற்கு நன்றி. மூடு: '... இந்த இழையைத் தொடங்கிய "இ" ஐயா வந்து அம்ம அல்லாரெயும் ஒரு செமெத்து செமத்துமுன்னெ ... நான் ஓடிடுறேன்! :-) இங்கெ இன்னும் ஃபெப்ரவரி 23. அதனால் எனக்கு-னு ஒரு மன்னிப்புக் கிடைத்தாலும் கிடைக்கலாம்! ...' => தன்யனானேன். வசிஷ்டி வாயால் பிரம்மரிஷி! முடிந்தவரை சென்னையில் அந்தந்த தினம் ஜனித்தவுடன் எழுதுகிறேன். இனி தாமதம் மிக ஆகலாம். வயசாச்சோல்லியோ இன்னம்பூரான் [Quoted text hidden] Innamburan Innamburan Fri, Feb 24, 2012 at 7:22 AM To: coral shree => நிச்சயம் முயலவும். பாராட்டை விட அந்த முயற்சியே நலம் தரும். [Quoted text hidden] Geetha Sambasivam Fri, Feb 24, 2012 at 10:52 AM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com Cc: rajam ஆஹா, தூங்கப் போனதுக்கப்பறமா இந்தக் குழந்தையோட மண்டையை உருட்டி இருக்கீங்க??? அப்புறமா வரேன்! On Thu, Feb 23, 2012 at 9:07 PM, செல்வன் wrote: ஆகா....?கீதாம்மா வேற உங்க புஸ்தகம் ரிலிசானவுடன் ஆயிரம் காப்பி வாங்கி மிந்தமிழர் அனைவருக்கும் அனுப்புவதா சொல்லிருக்காங்க.அப்புறம் ராயல்டிக்கு என்ன குறை?:-) சரிம்மா....நாங்க இப்படிதான் உங்க நேரத்தை வீணடிச்சுகிட்டு இருப்போம். நீங்களாச்சும் தமிழுக்கு உருப்படியா எதையாவது செய்ய விடுறோம்.வெற்றிகரமா புஸ்தகத்தை எழுதிமுடிச்சுட்டு வாங்க.நல்வாழ்த்துக்கள். அமெசான்ல முதல் பிரதியை வாங்க ஆவலா இருக்கேன் "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com For more options, visit this group at http://groups.google.com/group/minTamil [Quoted text hidden] Subashini Tremmel Fri, Feb 24, 2012 at 10:43 PM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com Cc: Subashini Kanagasundaram 2012/2/24 rajam On Feb 23, 2012, at 7:07 PM, செல்வன் wrote: ஆகா....?கீதாம்மா வேற உங்க புஸ்தகம் ரிலிசானவுடன் ஆயிரம் காப்பி வாங்கி மிந்தமிழர் அனைவருக்கும் அனுப்புவதா சொல்லிருக்காங்க.அப்புறம் ராயல்டிக்கு என்ன குறை?:-) அது மட்டுமா, செல்வன்? "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்று பாடித் திரிகிறவர் எல்லாரும் என் அந்த "அன்றீக்கு அடிகளார் தமிழ்" புத்தகத்தை வாங்காவிட்டால் ... ராஜம் அம்மா.. நேரில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். இப்போது புத்தகம் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிலும் தமிழ் ஆய்வு நூல்கள் மேல் ஆர்வம் உள்ளவர்கள் அதிகரித்திருக்கின்றனர். நிச்சயமாக நூல் சிறப்பாக வரும். இல்லை சும்மா விட்டு விடுவோமா.. த.ம.அ வே விழா எடுத்து நூலை நன்கு அறிமுகப்படுத்தி உங்களுக்கு மன நிறைவு தரும் வகையில் விற்பனைக்கு உதவுவோம். கவலையின்றி தொடருங்கள். சுபா [Quoted text hidden] -- Suba Tremmel http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..! http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..! http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..! http://ksuba.blogspot.com - Suba's Musings [Quoted text hidden] செல்வன் Fri, Feb 24, 2012 at 11:10 PM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com 2012/2/24 Subashini Tremmel ராஜம் அம்மா.. நேரில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். இப்போது புத்தகம் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிலும் தமிழ் ஆய்வு நூல்கள் மேல் ஆர்வம் உள்ளவர்கள் அதிகரித்திருக்கின்றனர். நிச்சயமாக நூல் சிறப்பாக வரும். இல்லை சும்மா விட்டு விடுவோமா.. த.ம.அ வே விழா எடுத்து நூலை நன்கு அறிமுகப்படுத்தி உங்களுக்கு மன நிறைவு தரும் வகையில் விற்பனைக்கு உதவுவோம். கவலையின்றி தொடருங்கள். கரெக்ட். எல்லோரும் வாங்குவோம். தெரிந்தவரிடம் சொல்வோம். முக்கியமா நூலை வாங்கியதோடு விடாமல் படிக்கவும் செய்வோம் [Quoted text hidden] rajam Sat, Feb 25, 2012 at 2:02 AM Reply-To: mintamil@googlegroups.com To: mintamil@googlegroups.com பயமுறுத்திறீங்க'ப்பா! இங்கெ கணினி மென்பொருள் ஒத்துழைக்க மாட்டேங்குது. கணினி, மென்பொருள் ... எல்லாம் பத்தி என் இழையில் சொல்றேன். ஏன்னா .. இது 'இ' ஐயாவோட இழை! அவர் சத்தம் போட்டாலும் போடுவார். பயமாருக்கு. [Quoted text hidden] [Quoted text hidden] Innamburan Innamburan Sat, Feb 25, 2012 at 5:44 AM To: mintamil@googlegroups.com நிச்சியமா சத்தம் போடுவேன், புத்தகம் வாங்கதவர்களிடம். இன்னம்பூரான் [Quoted text hidden]

GmailInnamburan Innamburan


அன்றொருநாள்: ஃபெப்ரவரி 23 ‘...வெய்ய கதிரோன் விளக்காக...’
29 messages

Innamburan Innamburan Wed, Feb 22, 2012 at 6:29 PM

To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 23
‘...வெய்ய கதிரோன் விளக்காக...’ (பொய்கையாழ்வார்)
‘உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.’ (சங்கீதம்: 119:120 விவிலியம்)

‘பொய்யிலிருந்து தடுத்தாட்கொண்டு, என்னை மெய்ஞானம் நோக்கி அழைத்துச் செல்க என்று தினந்தோறும் இறைவனை பிரார்த்திக்கிறேன். ‘Lead, kindly Light...‘என்று கார்டினல் ந்யூமென் அதைத்தான் சொல்கிறார் அல்லவா!’ 
~அண்ணல் காந்தி வினோபா பாவேக்கு மார்ச் 10, 1947ல் எழுதிய மடல்.

வணக்கத்துக்குரிய கார்டினல் ஜான் ஹென்றி ந்யூமென் அவர்களின் ஜன்ம தினம் ஃபெப்ரவரி 21,1801. பரலோகம் அடைந்த தினம், ஆகஸ்ட் 11, 1890. இரு நாட்கள் முன்னால் எழுதாமல், ஆகஸ்ட் வரை காத்திராமல், பொய்கையாழ்வாரின் துணை நாடி, கார்டினல் ஜான் ஹென்றி ந்யூமென் அவர்களை பற்றி இன்று ஏன் எழுதவேண்டும்? இது என்னுள் எழுந்த வினா.
நேற்றைய நன்நிமித்தம்: ‘... ஒரு அகல் விளக்கை (மெழுகுவர்த்தி) தீப ஒளியாக, இன்றைய தினம் சாயும் வேளையில் வைக்கும் சாரண இயக்கத்தின் குறிப்பு, போற்றத்தக்கது => ‘Lead, Kindly Light.’...’ என்று எழுத நேரிட்டது. 

ந்யூமென், ஃபெப்ரவரி 23, 1843 அன்று,ரோமன் கத்தோலிக்க மதம் பற்றி தான் அது வரை கூறிய கடுமையான விமர்சனங்களை நிராகரித்து ஒரு அறிக்கை விட்டார். இரண்டு வருடங்கள் கழிந்த பின் அக்டோபர் 5, 1845 அன்று கத்தோலிக்க மதம் அவரை ஏற்றுக்கொண்டது. விரைவில் கார்டினல் என்ற மிக உயர்ந்த பதவி அவரை தேடி வந்தது. இவருக்கு பால்யத்தில் சமய ஆர்வம் இருக்கவில்லை. சீர்திருத்த வாதிகளின் தாக்கம் இருந்தது. 15 வயதில் சமய ஆர்வம் இவரை ஆட்கொண்டது. கால்வினிஸ்ட் மரபு இவரை ஆகர்ஷித்தது. காலப்போக்கில், சம்பிராயதமான ஆங்க்ளிகன் எனப்படும் சமயப்பிரிவில் மத போதகராகி விட்ட ந்யூமென், 23 வயதிலேயே முதல் போதனை பிரசங்கம் செய்து பிரபலமானார். 20 வருடங்களில் அவர் மதம் மாறியதை ஒரு அபூர்வமான ஆன்மீக பயணம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சராசரி கிருத்துவ மத போதகரின் கரடுமுரடான பாதை இது அன்று.  இது காரணம் இரண்டு. அதனால் தான் சங்கீதம்: 119:120 விவிலியம் பாடப்பட்டது. 

இவருடைய பணிகள் யாவும் உன்னதமானவை. ஆனால், இன்று டப்ளின் பல்கலைக் கழகமாக விளங்கும் அயர்லாந்தின் கத்தோலிக்க பல்கலைக்கழக ஸ்தாபனம், கல்வியை பற்றி அவர் அளித்த அருமையான அறிவுரைகள், 'Lead, Kindly Light' என்ற அமரகாவியம் ஆகிய மூன்றையும் உலகம் என்றும் மறக்காது. மேலும் ஒரு தனிச்சிறப்பு. 'Lead, Kindly Light' மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது. இது மூன்றாவது காரணம். அந்த சமரச சன்மார்க்கத்தை பற்றி கூற விருப்பம்.

அண்ணல் காந்தியின் கடிதமே ஒரு சான்று. ஜூன் 16, 1833ல் எழுதப்பட்ட இந்த தோத்திரம், மத எல்லைகளை கடந்து, பயணித்தது. ஏழே வருடங்களில், கிட்டத்தட்ட எல்லா தோத்திரத்தொகுப்புகளிலும் இது இடம் பெற்றது. கிருத்துவ மரபுகளில், யுனிடேரியன், பாப்டிஸ்ட், மெதடிஸ்ட் எல்லா மரபுகளும் இதை ஸ்வீகரித்துக்கொண்டன. ஆங்கில மொழியில் உள்ள தோத்திரங்களில் இது முதன்மை இடத்தைப் பிடித்து விட்டது என்றால் மிகையாகாது. நிதானமாக படித்துப்பார்த்தால், எளிய நடையில், இறைவனுடன் தனிமனிதனின் ஆன்மீக உரையாடலாக புலப்படும். அண்ணல் காந்திக்கு இந்த தோத்திரத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாடு பற்றி பல கடிதங்களும், ஆவணங்களும் உளன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக:

 ஃபெப்ரவரி 10, 1908 அன்று ஜோஹனஸ்பர்கில் அவருக்கு பலமான அடி. ஸ்மட்ஸுடன் கூடி ஏமாற்றிவிட்டார் என்று தவறாக கருதிய இந்தியன் முஸ்லீம்கள் அவரை தாக்கினர். அடைக்கலம் கொடுத்தது ஜோஸஃப் டோக் என்ற பாதிரி. காந்த்ஜியால் பேசமுடியவில்லை. உதடு வீக்கம். அவர் மூன்று வேண்டுகோள்களை எழுதினார். ஸ்மட்ஸுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வசதி செய்யவேண்டும்; தன்னை அடித்தவர்களை விடுவிக்க வேண்டும் விண்ணப்பத்தை அரசு வக்கீலிடம் அனுப்ப வேண்டும். டோக் அவர்களின் பெண் ஆலிவ் Lead, Kindly Light' பாடவேண்டும். 
Lead, Kindly Light'
"Lead, Kindly Light, amidst th'encircling gloom,
Lead Thou me on!
The night is dark, and I am far from home,
Lead Thou me on!
Keep Thou my feet; I do not ask to see
The distant scene; one step enough for me.
I was not ever thus, nor prayed that Thou
Shouldst lead me on;
I loved to choose and see my path; but now
Lead Thou me on!
I loved the garish day, and, spite of fears,
Pride ruled my will. Remember not past years!
So long Thy power hath blest me, sure it still
Will lead me on.
O’er moor and fen, o’er crag and torrent, till
The night is gone,
And with the morn those angel faces smile,
Which I have loved long since, and lost awhile!
Meantime, along the narrow rugged path,
Thyself hast trod,
Lead, Saviour, lead me home in childlike faith,
Home to my God.
To rest forever after earthly strife
In the calm light of everlasting life."
இதை தமிழில் மொழியாக்கம் செய்யப்போவது யார்?
இன்னம்பூரான்
23 02 2012
Inline image 1
உசாத்துணை
பி.கு. நாளைய ‘அன்றொரு தினம்’ இழையை, அன்றைய செய்தி ஒன்றை பிரமேயமாக வைத்து, சுய அனுபவம்/புராணம் ஒன்றை ஓதி விடலாமா?

கி.காளைராசன் Wed, Feb 22, 2012 at 8:23 PM

To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/2/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>
இந்தியன் முஸ்லீம்கள் அவரை தாக்கினர். அடைக்கலம் கொடுத்தது ஜோஸஃப் டோக் என்ற பாதிரி. காந்த்ஜியால் பேசமுடியவில்லை. உதடு வீக்கம்.
I am not ever thus, nor prayed that Thou
Shouldst lead me on;
I loved to choose and see my path; but now
Lead Thou me on!

Lead, Kindly Light'
--
அன்பன்
கி.காளைராசன்

Innamburan Innamburan Wed, Feb 22, 2012 at 9:02 PM
To: mintamil

அன்பின் காளை ராஜன்,

*திருமந்திரம்
297
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே
*
இன்னம்பூரான் 



2012/2/22
[Quoted text hidden]

DEV RAJ Thu, Feb 23, 2012 at 5:18 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
Lead, Kindly Light, amidst th'encircling gloom,
Lead Thou me on!
The night is dark, and I am far from home,
Lead Thou me on!
Keep Thou my feet; I do not ask to see
The distant scene; one step enough for me
http://www.youtube.com/watch?v=o_fwdfFnQm8&feature=related


தமஸோ மா ஜ்யோதிர்க³மய





On Feb 22, 11:29 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
[Quoted text hidden]
> *‘**Lead, **Kindly **Light'*
>
> *"Lead, Kindly Light, amidst th'encircling gloom,
> Lead Thou me on!
> The night is dark, and I am far from home,
> Lead Thou me on!
> Keep Thou my feet; I do not ask to see
> The distant scene; one step enough for me.*
>
> *I was not ever thus, nor prayed that Thou
> Shouldst lead me on;
> I loved to choose and see my path; but now
> Lead Thou me on!
> I loved the garish day, and, spite of fears,
> Pride ruled my will. Remember not past years!*
>
> *So long Thy power hath blest me, sure it still
> Will lead me on.
> O’er moor and fen, o’er crag and torrent, till
> The night is gone,
> And with the morn those angel faces smile,
> Which I have loved long since, and lost awhile!*
>
> *Meantime, along the narrow rugged path,
> Thyself hast trod,
> Lead, Saviour, lead me home in childlike faith,
> Home to my God.
> To rest forever after earthly strife
> In the calm light of everlasting life."*
>
> இதை தமிழில் மொழியாக்கம் செய்யப்போவது யார்?
>
> இன்னம்பூரான்
>
> 23 02 2012
>
http://www.newmanu.edu/sites/default/files/images/generic-400w/Newman...
>
> [image: Inline image 1]
>
> உசாத்துணை
>
http://escholarship.usyd.edu.au/journals/index.php/SSR/article/viewFi...
>
> பி.கு. நாளைய ‘அன்றொரு தினம்’ இழையை, அன்றைய செய்தி ஒன்றை பிரமேயமாக வைத்து,
> சுய அனுபவம்/புராணம் ...
>
> read more »


Hari Krishnan Thu, Feb 23, 2012 at 7:40 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/23 DEV RAJ
Lead, Kindly Light, amidst th'encircling gloom,
Lead Thou me on!
The night is dark, and I am far from home,
Lead Thou me on!
Keep Thou my feet; I do not ask to see
The distant scene; one step enough for me

ஒளியை ஏற்று; வழிகாட்டு
          ஓங்கிச் சூழும் இருளிடையே
                       ஒருவழி எனக்கு நீகாட்டு.

இரவோ இருளில் கிடக்கிறது
           இதம்தரும் வீடோ வெகுதூரம்
                       எனக்கு நீயே வழிகாட்டு.

என்கா லசைவில் நீயேநில்; 
           எட்டாத் தொலைவில் இருக்கின்ற
                       எதுவும் தேவை யிலையெனக்கு.
                                                                                               ஓரடி... ஓரடி... நகருவதே
                                                                                               உன்னதக் காட்சி எனக்காகும்.

இதுபோல் என்றும் இருந்ததிலை; 
           இதுவரை எனக்கு வழிகாட்ட
                       இறைஞ்சி உன்னைக் கேட்டதிலை.

என்றன் பாதையை நானெனக்கே
           இதுவரை வகுத்தேன்; ஆனாலின்(று)
                       எனக்கு நீயே வழிகாட்டு.

மேலொளி தன்னை நான்ரசித்தேன்.
          மேனாள் பயமே அற்றிருந்தேன்.
                    வினையில் அகந்தை மிக்கிருந்தேன்.....

                                                                                இறந்து விட்ட அன்னாளை
                                                                                இன்று நினைவில் கொள்ளாதே....

உன்றன் கருணை எனைவாழ்த்தல்
          உறுதி யானால் அதுவென்னை
                    உதவா நிலத்தும் சேற்றினிலும்

ஓங்கும் இரவு ஓயும்வரை
          ஓயா தென்றும் நடத்திடுதல்
                    உறுதி உறுதி மிகவுறுதி.

காலை வந்ததும் ஒளிமயமாய்க்
          காண்பேன் இதுவரைக் காண்பதற்குக்
                    காத்தி ருந்த நானிழந்த--

                                                                                தேவர்கள் புன்சிரிப் போடென்னைத்
                                                                                தேடிடும் காட்சி யதுவொன்றை.

12.5.1976 அன்று மொழிபெயர்த்தது.  

(பழைய நோட்டைத் தேடி எடுக்க வைத்த தேவுக்கு நன்றி.)



--
அன்புடன்,
ஹரிகி.
[Quoted text hidden]

DEV RAJ Thu, Feb 23, 2012 at 8:49 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
 மகிழ்ச்சி ஐயா

”The night is dark, and I am far from home,
     Lead Thou me on!”


இரவோ இருளில் கிடக்கிறது
           இதம்தரும் வீடோ வெகுதூரம்
                       எனக்கு நீயே வழிகாட்டு.
மனத்தைத் தைக்கும் வரிகள் இவை.
சாதகனுக்குத் தேவையான நிர்வேதம்
பொதிந்த கவிதை !


உயர்ந்த  சிந்தனையை விதைத்த
பெரியவர் இன்னம்பூரருக்கு
நன்றி தெரிவிப்போம்



தேவ்

On Feb 23, 12:40 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2012/2/23 DEV RAJ <rde...@gmail.com>
[Quoted text hidden]

Geetha Sambasivam Thu, Feb 23, 2012 at 1:16 PM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
வழக்கம்போல் அருமையான தகவல்கள்.  தாமதமாய் வந்ததின் பலன் கூடவே ஹரிகியின் மொழியாக்கத்தையும் படிக்க முடிந்தது.  24-ம் தேதிக்கான சுயபுராணத்துக்குக் காத்திருக்கேன்.  இங்கே இப்போத்தான் 23-ம் தேதி விடிஞ்சிருக்கு! 

வெய்ய கதிரோன் விளக்காக நின்று காட்சி தருகிறான். மனதில் பல நற்சிந்தனைகளைத் தூண்டும் பதிவுக்கு நன்றி.

On Wed, Feb 22, 2012 at 12:29 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 23
‘...வெய்ய கதிரோன் விளக்காக...’ (பொய்கையாழ்வார்)
‘உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.’ (சங்கீதம்: 119:120 விவிலியம்)

‘பொய்யிலிருந்து தடுத்தாட்கொண்டு, என்னை மெய்ஞானம் நோக்கி அழைத்துச் செல்க என்று தினந்தோறும் இறைவனை பிரார்த்திக்கிறேன். ‘Lead, kindly Light...‘என்று கார்டினல் ந்யூமென் அதைத்தான் சொல்கிறார் அல்லவா!’ 
~அண்ணல் காந்தி வினோபா பாவேக்கு மார்ச் 10, 1947ல் எழுதிய மடல்.


இதை தமிழில் மொழியாக்கம் செய்யப்போவது யார்?
இன்னம்பூரான்
23 02 2012
Inline image 1
உசாத்துணை
பி.கு. நாளைய ‘அன்றொரு தினம்’ இழையை, அன்றைய செய்தி ஒன்றை பிரமேயமாக வைத்து, சுய அனுபவம்/புராணம் ஒன்றை ஓதி விடலாமா?



Innamburan Innamburan Thu, Feb 23, 2012 at 2:52 PM
To: Geetha Sambasivam

கருத்தளித்த வாசகர்களுக்கு நன்றி. இந்த இழையை எழுதும்போதே, பல சிந்தனைகள் நடை பயின்றன, மனத்துள். தொன்மை (mythology), முதலில் அஞ்சினாலும், ஒளியை தொழுதது. வைகறையில் சூரியோதயம் ஆதிமனிதனை ஆகர்ஷித்தது => ‘கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்/கனையிருள் அகன்றது காலையம் பொழுதாய்...’ .சூரிய அஸ்தமனம் மன நிம்மதியை குலைத்தது. முதல் வேதமாகிய ரிக்வேதத்தின் முதல் தோத்திரத்தின் முதல் வரியில் அக்னியின் புகழாக அமைந்தது ஆச்சரியமன்று.
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥ 
கதிரோன் ஒளி வீசினால், இருள் அகலும். அவன் திசை திரும்பினால், இருளை விலக்க, அக்னி வருகை புரியவேண்டும். வள்ளலாரின் ஜோதி வழிபாடு புரிகிறது.
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

‘சுட்டும் விழி சுடர் தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோ...’ என்று பாடிய
ஒளி படைத்தக் கண்ணினான் வில்லியம் ப்ளேக் என்ற தொன்மை கவிஞனின் 
Tyger! Tyger! burning bright
In the forests of the night,

What immortal hand or eye 

Dare frame thy fearful symmetry?

என்ற கவிதையை நினைவூட்டுகிறார். எழுதிக்கொண்டே போகலாம்! இதற்கென்றே ஒரு தனி இழை துவக்கலாம். 

‘...இதம்தரும் வீடோ வெகுதூரம்...’ என்ற மொழியாக்கம் என்னை கவர்ந்தது.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Feb 23, 2012 at 2:53 PM
To: innamburan88
[Quoted text hidden]

Hari Krishnan Thu, Feb 23, 2012 at 3:15 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/23 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
24-ம் தேதிக்கான சுயபுராணத்துக்குக் காத்திருக்கேன்.  இங்கே இப்போத்தான் 23-ம் தேதி விடிஞ்சிருக்கு! 
அம்மாடியோவ்!  எடம் தெரியாம தலய நீட்டிட்டேனா!  சாரி சாரி மன்னாப்பு மன்னாப்பு... இனிமேல் எச்சரிக்கையாக இருந்து கொள்கிறேன்.  சம்பந்தப்பட்டவர் மன்னித்துக் கொள்ளவும்.

--
அன்புடன்,
ஹரிகி.


Geetha Sambasivam Thu, Feb 23, 2012 at 3:51 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

பி.கு. நாளைய ‘அன்றொரு தினம்’ இழையை, அன்றைய செய்தி ஒன்றை பிரமேயமாக வைத்து, சுய அனுபவம்/புராணம் ஒன்றை ஓதி விடலாமா?
இ//
24-ம் தேதிக்கான சுயபுராணத்துக்குக் காத்திருக்கேன்.  இங்கே இப்போத்தான் 23-ம் தேதி விடிஞ்சிருக்கு! //

என்னோட கருத்து இன்னம்புராருக்குச் சொன்னது.  அதையும் எடுத்துப் போட்டிருக்கணுமோ??
[Quoted text hidden]

Hari Krishnan Thu, Feb 23, 2012 at 3:56 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/23 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
என்னோட கருத்து இன்னம்புராருக்குச் சொன்னது.  அதையும் எடுத்துப் போட்டிருக்கணுமோ??

ஐஏஎஸ் அலுவலர்களிடம் பேப்பரை நீட்டினால், இரண்டு கையாலும் முதுகை வளைத்துக் கொண்டு, குனிந்து தரவேண்டும்.  இல்லாவிட்டால் கொடுத்த பேப்பரை முகத்தில் விட்டெறிவார்கள்.  இரண்டாண்டுகள் டெபுடேஷனில் வந்த ஐஏஎஸ் அலுவலகருக்கு எக்ஸிக்யுடிவ் செகரடரியாக இருந்து நிறையவே அனுபவப் பட்டிருக்கிறேன்.

ஆகவே, பெரியவர்கள் இழையென்றால் எட்டு முழம் எட்டி நிற்கக் கற்றுக் கொண்டுவிட்டேன்.  பெரியவர்கள் இழை என்பது பின்னால்தான் தெரிந்தது.  அதைத்தான் சொன்னேன்.


--
அன்புடன்,
ஹரிகி.
[Quoted text hidden]

rajam Thu, Feb 23, 2012 at 7:19 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

ஓ ஓ , என்ன செய்ய?! ஒரு தனி மடல் அனுப்பினேன். அது ஆழ்கிடங்கில் போய்விடுமென்று இங்கே அதைத் திருப்புகிறேன் ...
+++++++++++++++++++++++++++++++
சரி, அன்புள்ள தம்பிமாரே ...

ஆஆ! ரெண்டு "திருட்டு"த் தம்பிகளும் எங்க பாத்திமாக் கல்லூரி மாட்டொ (motto) பாட்டெ எடுத்துப் போட்டு ... மொழியாக்கம் செஞ்சுட்டாங்க'ப்பா! நல்லாதான் இருக்கு! :-) 

எங்க கல்லூரிலெ அது அமைதி தந்த / தரும் பாடல். ஒவ்வோர் ஆண்டும் "மெழுகுதிரித் திருநாள்"  (candle light ceremony) என்று பட்டப் படிப்பின் இறுதியாண்டை முடிக்கும் வகையில் கொண்டாடும் மாலை/இரவு நேரம்.  ஒவ்வொரு மாணவியும் ஒவ்வொரு ஆசிரியையிடமிருந்தும் மெழுகுதிரியின் விளக்கைப் பெற்றுக் கொள்ளும் அந்த நிகழ்ச்சி ... அப்படியே நெஞ்சை உருக்கிவிடும். பிறகு எல்லாரும் வரிசையாகப் போய் மேரி மாதாவின் "grotto" பக்கம் அந்த மெழுகுவர்த்திகளை நட்டுவைப்போம்.
+++++++++++++++++++++++++++++++
இளைய தலைமுறைக்கு "அறிவு" எப்படிப் பரவுகிறது என்பதற்கு இந்தச் சடங்கு மிகவும் உதவும் (கார்த்திகைத் தீபம் போல). 
இதெல்லாம் என் வாழ்க்கைப் பதிவுகளில் வரும், என்றைக்கு என்று தெரியாது! :-) 

இந்த வயசான அக்கா அந்தப் பாட்டைப் பாடிவைத்திருக்கிறாள். என்றைக்காவது ஒருநாள், பிறர் கேலி செய்யமாட்டார்கள் என்ற உறுதியிருந்தால் ... பகிர்ந்துகொள்வாள். ஒரு முறை "வானாகி மண்ணகி ... " பாட்டை ஒலிப்பதிவாக வேளியிட்டு ... கிடைத்தது வெறும் சாணிதான். 

ஆனால் ... இப்போதைக்கு ... புத்தக வேலை, உடல் நலம் இரண்டும் மிக முக்கியம். அதனால் என் பாட்டு பின்னணிக்குப் போய்விடும். 
மீண்டும் என் புத்தகப் புதையலுக்குள் போகிறேன். முடிந்தபோது மீண்டும் வருகிறேன்.
எல்லாரும் உடல் நலம் பேணவும்.
அன்புடன்,
ராஜம்
[Quoted text hidden]
[Quoted text hidden]

Subashini Tremmel Thu, Feb 23, 2012 at 7:27 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram
முடிந்த போது வந்து போங்க..  

சுபா
[Quoted text hidden]
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
[Quoted text hidden]

Geetha Sambasivam Fri, Feb 24, 2012 at 12:02 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ரொம்ப நாட்கள் கழித்துப் பார்த்ததில் சந்தோஷம் அம்மா.  நேரம் இருக்கையில் வாருங்கள்.

On Thu, Feb 23, 2012 at 1:19 PM, rajam <rajam@earthlink.net> wrote:

ஓ ஓ , என்ன செய்ய?! ஒரு தனி மடல் அனுப்பினேன். அது ஆழ்கிடங்கில் போய்விடுமென்று இங்கே அதைத் திருப்புகிறேன் ...


ஆனால் ... இப்போதைக்கு ... புத்தக வேலை, உடல் நலம் இரண்டும் மிக முக்கியம். அதனால் என் பாட்டு பின்னணிக்குப் போய்விடும். 
மீண்டும் என் புத்தகப் புதையலுக்குள் போகிறேன். முடிந்தபோது மீண்டும் வருகிறேன்.
எல்லாரும் உடல் நலம் பேணவும்.
அன்புடன்,
ராஜம்


On Feb 22, 2012, at 11:40 PM, Hari Krishnan wrote:





செல்வன் Fri, Feb 24, 2012 at 12:28 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
லீவ் அப்ரூவ்ட். ஆனால் புஸ்தகத்தில் எங்களுக்கு எல்லாம் ராயல்டி வந்துடணும்:-).


rajam Fri, Feb 24, 2012 at 2:48 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: செல்வன்

ஒரு புத்தகத்துக்கும் எனக்கு ராயல்டி கிடைத்ததில்லை'ப்பா! என் dissertation-க்கு ரெண்டு தடவை ஏதோ பணம் அனுப்பினாங்க. இப்பொ அதெல்லாம் பிடிஃப் கோப்புலெ போகும்போது ... எனக்கு என்ன ராயல்டி கிடைக்கும்?
ஒங்க மாதிரி இளைய சமுதாயம் ஆர்வம் கொண்டால் ... என்னெ மாதிரிப் பழமையாட்களுக்கு ஏதாவது கிடைக்கும். கிடைத்தால் ... ஆஆ ... எல்லாருடனும் பகிர்ந்துகொள்வேனே! :-) 
[Quoted text hidden]
[Quoted text hidden]

செல்வன் Fri, Feb 24, 2012 at 3:07 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: 
Cc: mintamil@googlegroups.com
ஆகா....?கீதாம்மா வேற உங்க புஸ்தகம் ரிலிசானவுடன் ஆயிரம் காப்பி வாங்கி மிந்தமிழர் அனைவருக்கும் அனுப்புவதா சொல்லிருக்காங்க.அப்புறம் ராயல்டிக்கு என்ன குறை?:-)
சரிம்மா....நாங்க இப்படிதான் உங்க நேரத்தை வீணடிச்சுகிட்டு இருப்போம். நீங்களாச்சும் தமிழுக்கு உருப்படியா எதையாவது செய்ய விடுறோம்.வெற்றிகரமா புஸ்தகத்தை எழுதிமுடிச்சுட்டு வாங்க.நல்வாழ்த்துக்கள். அமெசான்ல முதல் பிரதியை வாங்க ஆவலா இருக்கேன்


[Quoted text hidden]

rajam Fri, Feb 24, 2012 at 3:37 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: செல்வன்



On Feb 23, 2012, at 7:07 PM, செல்வன் wrote:

ஆகா....?கீதாம்மா வேற உங்க புஸ்தகம் ரிலிசானவுடன் ஆயிரம் காப்பி வாங்கி மிந்தமிழர் அனைவருக்கும் அனுப்புவதா சொல்லிருக்காங்க.அப்புறம் ராயல்டிக்கு என்ன குறை?:-)


அது மட்டுமா, செல்வன்? "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்று பாடித் திரிகிறவர் எல்லாரும் என் அந்த "அன்றீக்கு அடிகளார் தமிழ்" புத்தகத்தை வாங்காவிட்டால் ... சரி, நான் "சாபம்" போடக் கூடாதென்று நம் மறைமூர்த்தி கண்ணனார் சொல்லியிருக்கார். 60-வயதுக்கு மேற்பட்டவர்கள் "சிறுபிள்ளைத்தனமாக" இருக்கப்படாதாம்! அது என்ன கணக்கோ, தெரியலெ. சின்ன வயசுக்காரங்க "சிறுபிள்ளைத்தனமாக" நடந்துக்கலாமோ? புரியலெ. :-) 
அது கிடக்க.
ராயல்டி கிடைக்கட்டும், பாப்பம்.  
அதுக்கு முன்னாலெ ... புத்தகத்தெச் சரியா முடிக்க ... பணம் இல்லெ, கணினி இல்லெ, கணினியில் உள்ள மென்பொருள் எதுவும் சரியா வேலெ பாக்கலெ. என்னென்ன சிக்கல்'ப்பா. ஆராய்ச்சியும் வேணாம், ஒண்ணும் வேணாம்-னு நிம்மதியா இருந்தா-ப் போதும்-னு இருக்கு. பணக்கஷ்டத்தோடெ போகும்.
பாப்பம். "எங்களுக்கும் காலம் வரும்; காலம் வந்தால் வாழ்வு வரும்; வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே...." இதுவே என் தாரக மந்திரம். :-) 


சரிம்மா....நாங்க இப்படிதான் உங்க நேரத்தை வீணடிச்சுகிட்டு இருப்போம். நீங்களாச்சும் தமிழுக்கு உருப்படியா எதையாவது செய்ய விடுறோம்.வெற்றிகரமா புஸ்தகத்தை எழுதிமுடிச்சுட்டு வாங்க.நல்வாழ்த்துக்கள். அமெசான்ல முதல் பிரதியை வாங்க ஆவலா இருக்கேன் 
வாழ்த்துக்கு நன்றி'ப்பா!
[Quoted text hidden]
[Quoted text hidden]

Nagarajan Vadivel Fri, Feb 24, 2012 at 3:58 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அட காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம் கையும் காலுந்தானே மிச்சம் அட காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம் கையும் காலுந்தானே மிச்சம்

http://www.youtube.com/watch?v=UIlCFbDtyFg&feature=related

சும்ம கிடந்த நிலத்தை கொத்தி சொம்பலில்லாம ஏர் நடத்தி கம்மா கரையை ஒசத்தி கட்டி கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி சம்பா பயிரை பறிச்சு நட்டு தகுந்த முறையில் தண்ணீர் விட்டு நெல்லு விளைஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறைஞ்சிருக்கு -
நாகராசன்
[Quoted text hidden]

rajam Fri, Feb 24, 2012 at 4:23 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Nagarajan Vadivel

பேராசிரியர் ஐயா,
அமோகமான பழைய பாட்டு, எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! நன்றி! ஆனாலும் ... இந்த இழையைத் தொடங்கிய "இ" ஐயா வந்து அம்ம அல்லாரெயும் ஒரு செமெத்து செமத்துமுன்னெ ... நான் ஓடிடுறேன்! :-) இங்கெ இன்னும் ஃபெப்ரவரி 23. அதனால் எனக்கு-னு ஒரு மன்னிப்புக் கிடைத்தாலும் கிடைக்கலாம்! 
இன்னும் சில நாள் ... என் கணினியும் என் புத்தகமுமே என் அன்பர்கள் என்ற நிலையில் ...
பிற பின்னர்.

அன்புடன்,
ராஜம் 

[Quoted text hidden]
[Quoted text hidden]





Innamburan Innamburan Fri, Feb 24, 2012 at 7:21 AM

To: mintamil

ஒகடி: '...60-வயதுக்கு மேற்பட்டவர்கள் "சிறுபிள்ளைத்தனமாக" இருக்கப்படாதாம்! அது என்ன கணக்கோ, தெரியலெ. சின்ன வயசுக்காரங்க "சிறுபிள்ளைத்தனமாக" நடந்துக்கலாமோ? புரியலெ. :-) 
அது கிடக்க.

=> அதானே! நான் துடிதுடிச்சுப் போய்ட்டேன். கண்ணண்ட்டெயும் பயம். 'பெரியவர்' என்று சொல்லி மொத்தறவர்களிடம் பயம். ஆக மொத்தம் டென்ஷன்.


இரண்டு: பாடலாசிரியர் பேராசிரியர்க்கு, மெருகு சேர்த்ததற்கு நன்றி.

மூடு: '... இந்த இழையைத் தொடங்கிய "இ" ஐயா வந்து அம்ம அல்லாரெயும் ஒரு செமெத்து செமத்துமுன்னெ ... நான் ஓடிடுறேன்! :-) இங்கெ இன்னும் ஃபெப்ரவரி 23. அதனால் எனக்கு-னு ஒரு மன்னிப்புக் கிடைத்தாலும் கிடைக்கலாம்! ...'

=> தன்யனானேன். வசிஷ்டி வாயால் பிரம்மரிஷி!  முடிந்தவரை சென்னையில் அந்தந்த தினம் ஜனித்தவுடன் எழுதுகிறேன். இனி தாமதம் மிக ஆகலாம். வயசாச்சோல்லியோ
இன்னம்பூரான்
[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, Feb 24, 2012 at 7:22 AM
To
=> நிச்சயம் முயலவும். பாராட்டை விட அந்த முயற்சியே நலம் தரும்.
[Quoted text hidden]

Geetha Sambasivam Fri, Feb 24, 2012 at 10:52 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: rajam
ஆஹா, தூங்கப் போனதுக்கப்பறமா இந்தக் குழந்தையோட மண்டையை உருட்டி இருக்கீங்க??? அப்புறமா வரேன்! 

On Thu, Feb 23, 2012 at 9:07 PM, செல்வன் <holyape@gmail.com> wrote:
ஆகா....?கீதாம்மா வேற உங்க புஸ்தகம் ரிலிசானவுடன் ஆயிரம் காப்பி வாங்கி மிந்தமிழர் அனைவருக்கும் அனுப்புவதா சொல்லிருக்காங்க.அப்புறம் ராயல்டிக்கு என்ன குறை?:-)
சரிம்மா....நாங்க இப்படிதான் உங்க நேரத்தை வீணடிச்சுகிட்டு இருப்போம். நீங்களாச்சும் தமிழுக்கு உருப்படியா எதையாவது செய்ய விடுறோம்.வெற்றிகரமா புஸ்தகத்தை எழுதிமுடிச்சுட்டு வாங்க.நல்வாழ்த்துக்கள். அமெசான்ல முதல் பிரதியை வாங்க ஆவலா இருக்கேன்


"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
[Quoted text hidden]

Subashini TremmelFri, Feb 24, 2012 at 10:43 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/24

On Feb 23, 2012, at 7:07 PM, செல்வன் wrote:

ஆகா....?கீதாம்மா வேற உங்க புஸ்தகம் ரிலிசானவுடன் ஆயிரம் காப்பி வாங்கி மிந்தமிழர் அனைவருக்கும் அனுப்புவதா சொல்லிருக்காங்க.அப்புறம் ராயல்டிக்கு என்ன குறை?:-)

அது மட்டுமா, செல்வன்? "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்று பாடித் திரிகிறவர் எல்லாரும் என் அந்த "அன்றீக்கு அடிகளார் தமிழ்" புத்தகத்தை வாங்காவிட்டால் ...

ராஜம் அம்மா.. நேரில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். இப்போது புத்தகம் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிலும் தமிழ் ஆய்வு நூல்கள் மேல் ஆர்வம் உள்ளவர்கள் அதிகரித்திருக்கின்றனர். நிச்சயமாக நூல் சிறப்பாக வரும். இல்லை சும்மா விட்டு விடுவோமா.. த.ம.அ வே விழா எடுத்து நூலை நன்கு அறிமுகப்படுத்தி உங்களுக்கு மன நிறைவு தரும் வகையில் விற்பனைக்கு உதவுவோம். கவலையின்றி தொடருங்கள். 

சுபா
[Quoted text hidden]




[Quoted text hidden]

செல்வன் Fri, Feb 24, 2012 at 11:10 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/24 Subashini Tremmel <ksubashini@gmail.com>
ராஜம் அம்மா.. நேரில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். இப்போது புத்தகம் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிலும் தமிழ் ஆய்வு நூல்கள் மேல் ஆர்வம் உள்ளவர்கள் அதிகரித்திருக்கின்றனர். நிச்சயமாக நூல் சிறப்பாக வரும். இல்லை சும்மா விட்டு விடுவோமா.. த.ம.அ வே விழா எடுத்து நூலை நன்கு அறிமுகப்படுத்தி உங்களுக்கு மன நிறைவு தரும் வகையில் விற்பனைக்கு உதவுவோம். கவலையின்றி தொடருங்கள். 
கரெக்ட்.

எல்லோரும் வாங்குவோம். தெரிந்தவரிடம் சொல்வோம். முக்கியமா நூலை வாங்கியதோடு விடாமல் படிக்கவும் செய்வோம்
[Quoted text hidden]

rajam Sat, Feb 25, 2012 at 2:02 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

பயமுறுத்திறீங்க'ப்பா! இங்கெ கணினி மென்பொருள் ஒத்துழைக்க மாட்டேங்குது. கணினி, மென்பொருள் ... எல்லாம் பத்தி என் இழையில் சொல்றேன். ஏன்னா .. இது 'இ' ஐயாவோட இழை! அவர் சத்தம் போட்டாலும் போடுவார். பயமாருக்கு.
[Quoted text hidden]
[Quoted text hidden]

Innamburan Innamburan Sat, Feb 25, 2012 at 5:44 AM
To: mintamil@googlegroups.com
நிச்சியமா சத்தம் போடுவேன், புத்தகம் வாங்கதவர்களிடம்.
இன்னம்பூரான்

[Quoted text hidden]

No comments:

Post a Comment