Wednesday, April 24, 2013

எப்படி ஓடினரோ...! - 5

buran@gmail.com>


எப்படி ஓடினரோ...! - 5

Innamburan S.Soundararajan Wed, Apr 24, 2013 at 10:48 AM

எப்படி ஓடினரோ...! - 5
Inline image 1

     (...பேஸ்து அடிச்சமாதிரி ஆயிடுத்து!...) கம்பியில்லா தந்திகள் பறந்த வண்ணம் இருந்தன. குப்தா தலைமையில், தலை தெறிக்க ஓடினோம், ஸூப்டப் காரில் தான், வேறு திசை நோக்கி. இந்த கிரிஜா புன்சிரித்தாள். இந்த ஹாண்ட் இன் க்ளவ்வுக்குத்தான், ஒரிஜினல் வழித்தடம் தெரியுமே. அப்டிப்பட்ட பாங்கி லேசுல கட்சி மாறமாட்டா தான், கீதா சொல்றமாதிரி. ஆனா, நம்பள் ‘சாம, தான, பேத, தண்டத்துக்கு’ முன்னாலே...

     “எழுந்தது துகள்
      ஏற்றனர் மார்பு
      கவிழ்ந்த மருப்பு
      கலங்கினர் பலர்’
என்ற கலித்தொகைப்பாடல், நினைவுக்கு வருகிறது, நாங்கள் கிளப்பிய தூசிப்படலத்தை நினைத்தால்! மார்பு ஏற்றவில்லை எனினும், உள்ளூர கலக்கம் இருந்தது என்பது என்னமோ உண்மை!
     
     கிரிஜாவுக்குத் தெரியாது, போலீஸ் நடமாட்டத்தைக் கண்டு, ‘வனஜன்’, கிருஷ்ணன் கோயிலில் புரோகிதர்களை மிஸ் பண்ணவுடனேயே, ராமர் கோயிலை நோக்கி ஓடியது. விட்டுடுவாரா, குப்தா? ‘குறுவஞ்சி பாய்மா’ போல, சீறிப் பாய்ந்து சென்றது, எங்கள் ஐந்துச்சக்ரப்படை. (நடுவிலே ஸ்டெப்னி மாத்தினோம்; அதை சொல்றேன்!). அதோ! அக்கா! என்று கத்திவிட்டாள், கிரிஜா! அந்த மறைமூர்த்திக்கண்ணன் ( நாவன்னா காவான்னா நோட்டுக.) திருதராரஷ்ரனுக்கு  திவ்யசஷுக்கள் கொடுத்தானோ, இல்லையோ, எனக்கு தெரியாது. தேவ் அவர்களைக் கேட்கணும். எங்களுக்குக் கொடுத்தான்! ஓட்ற கார்லே, எழுந்து நின்னுண்டு, வனஜன் அவளுக்கு தாலி கட்டிவிட்டான். குப்புசாமியின் முகத்தைப் பார்த்தேன். கொஞ்சம் கலக்கம் நீங்கினமாதிரி இருந்தது. 

     ஒரே வினாடி. அவுக கார் வளைக்கப்பட்டது. இரண்டுச்சக்ர சுற்றுவட்டாரப்படை நிறுத்தப்பட்டது. சாவிகள் பிடுங்கப்பட்டன. எல்லாரையும் ஒரு கார் ஏற்றிக்கொண்டு, கஸ்ட்ஹெளஸ் நோக்கிப் பறந்தது. ஒரு காவலர் அவங்க வண்டிகளுக்கு. நம்ம கடுமா, எல்லாவற்றையும் கடந்து, முன்னாலேயே போய்டுத்து. காஃபி குடித்து, ஆஸ்வாசப்படுத்திக்கொண்டோம். எங்களை வரவேற்றது, அந்த வட இந்திய பார்ட்டியின் தலைவர். ‘சாப்பாடு ரெடி’ என்றாரே பார்க்கலாம், அந்த விவரம் அறிந்த பெரியவர்! குப்தா, இருவரையும் கூப்பிட்டுப் பேசினார். அவள் மேஜர் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டாராம்.  குப்புசாமி வனஜாவுடன் தனித்து பேசணும் என்றார். ஆனால், என்னையும் வைத்துக்கொண்டார். கிரிஜா நகத்தைக் கடித்தாள். 

      வனஜா, வனதேவதைப் போல் இருந்தால், சிவப்பு கூறைப்புடவையில் (காட்டன்).   முதல் நாளே டைப் அடிக்கப்போயிட்டாளா! அவள் கண்கள் லாஹிரியில் கிறங்கிப்போயிருந்தன. அழகு கூடிவிட்டது, கொஞ்சம் சினம் கொப்பளித்தால் கூட.
உரையாடல்:
குப்புசாமி: வனஜா!
வனஜா: மாமா!
வனஜா: (என்னிடம்): நீங்க கூடவா!  (என் மேல் அவளுக்கு நல்லெண்ணம் இருக்கே என்று எனக்கு சந்துஷ்டி. மழுப்பினேன்).
ஓவர்.

     ஆசீர்வாதம் பண்ணிடிங்கோ என்றேன். ‘பொத்’ என்று  விழுந்தாள், அவர் தாள்களில். அவன் விறைப்பா நின்னுண்டு இருந்தான். ‘சேவிடா!’ என்று கர்ஜித்தேன், ஈனக்குரலில். சேவிக்கறதா பேர் பண்ணினான். சிரிப்பு தாளாமல், புரோகிதர்கள் பஞ்சாதி ஓதினார்கள். ‘தந்துனா நேனா’!
அந்த வட இந்திய சாப்பாடு பிரமாதம், போங்கோ! ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்களின் பெருமை  சாற்றினார், தலைவர்.
     
     Everybody got into the spirit of the things!
     
    முதல் ஹால்ட், கிரிஜாவை ட் ராப் பண்ண, நம்ம கார்லே. அங்கே, ஒரு மகளிர் மன்றமே கூடி இருந்தது. தலைவிக்கிழவி, ஒரு தீர்க்க சுமங்கலி. வந்தவுடன் கேட்டாள், ‘தாலிக்கட்டிட்டுனா?’ என்று. வனஜா அம்மா முகத்திலே, ஒரு கலக்கம் நீங்கா பூரிப்பு. குப்புசாமி வீட்டுக்கு போனா, விசாலம் (வனஜா அம்மா) ஃபோன் பண்ணா, என்று சொல்லி, சிரித்தாள், மாமி. நம் இல்லம் அடைந்தால், வஸந்தா, ‘உங்களுக்காக சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பண்ணியிருக்கேன். வெளிலே சாப்டலாமா, ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா? என்று டோஸ் கொடுத்து விட்டு, கபூர் ஃபோன் பண்ணார், என்று சொல்லி சிரித்தாள். ரோஸ்ட் ஃபிட்டிங் ஃபைனேல்.

     நிஜக்கதையும் முடிந்தது; தலைச்சனும் பிறந்தது. 

      நாடகமே உலகம்.

    

இன்னம்பூரான்

பி.கு. செல்வன் இளைஞர். அதான், ஓடிப்போறதுக்கும், உடன்போக்குக்கும் வித்யாசம் தெரியல்லை. ஓடிப்போறது = eloping: உடன்போக்கு = Eloping. யாராவது பல பேர் கேட்டால், விளக்கம் தரப்படும்.
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/11/10

pdf attached
E5 pdf.pdfE5 pdf.pdf
62K   View   Download  
Geetha Sambasivam 
7/11/10

ஓ, நன்றி ஹரிகி, சட்டுனு மனசில் தோணினதைச் சொன்னேன். 
Geetha Sambasivam 
7/11/10

பெண் மனம் அறியும்; ஆண் மனம் புரியும், அவாளுக்கு!//

அடடா!!!!

//போட்டுக்கொடுத்தறாதங்கோ, என்றாரே, பார்க்கலாம். ‘ஓஹோ! அப்டியா!’ என்று கறுவிக்கொண்டே, அதை மனதின் சனி மூலையில் பதிவு செய்து கொண்டேன். //

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே,
காரியத்தில் கண்ணா யிரு//ங்கறாப்போலயா??? அருமை!!!!

இந்த ஃபாண்ட் படுத்தல் உங்களை படுத்த வில்லையே. //

எனக்கு ஃபாண்ட் படுத்தலை, நல்லாவே படிக்க முடியுது.

வெட்சிப் படலம்  மிக மிக அருமை!

2010/7/9 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
Geetha Sambasivam 
7/11/10

எப்படியோ எல்லாம் சுபம்! கண் முன்னே காட்சிகள் ஓடின.
Tthamizth Tthenee 
7/11/10

ஓடிப்போறது = eloping: உடன்போக்கு = Eloping. யாராவது பல பேர் கேட்டால், விளக்கம் தரப்படும்.
 
விளக்கம்  சொல்லுங்களேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
Tthamizth Tthenee 
7/12/10

விளக்கம்  கேட்டேனே 
நான் மட்டும்   கேட்டா  சொல்ல மாட்டீங்களா
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/14/10

இந்த நுட்பத்தை அறிய விழைந்த செல்வனே கமுக்கமா இருக்கிறார். மற்றோரின் சுவடைக்கூட காண இயலவில்லையே. யான் என் செய்வேன், த.தே?
devoo 
7/14/10

>>மற்றோரின்  சுவடைக்கூட காண இயலவில்லையே.<<
ஓடிப்போய் விட்டனர்;
எப்படி ஓடினரோ ?

தேவ்

On Jul 14, 9:48 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> இந்த நுட்பத்தை அறிய விழைந்த செல்வனே கமுக்கமா இருக்கிறார். மற்றோரின்
> சுவடைக்கூட காண இயலவில்லையே. யான் என் செய்வேன், த.தே?
>
> 2010/7/12 Tthamizth Tthenee
>
> > விளக்கம்  கேட்டேனே
> > நான் மட்டும்   கேட்டா  சொல்ல மாட்டீங்களா
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/14/10

அதே! ஏன்?
பதறியோ?
பார்க்கமலோ?
பின்வாங்கியோ?
புரியாமலோ?
பூச்சூடியோ?
'பென்' வராததாலோ?
பேர் அறிந்தோ?
பெளருஷம் கலைந்தோ?
ஃபன்னுக்காகவோ?
இன்னம்பூரான்

seethaalakshmi subramanian
7/15/10


ஓடல்லே
உக்காந்துட்டேன்
இந்தக் கிழ மண்ட்யிலே ஒண்ணும் இல்லே
புரியல்லே அய்யா
அப்புறம் என்ன கேக்கறது


 
2010/7/14 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/15/10

அன்றொரு நாள் நா.கா. சொன்னார், நான் கொக்கிப்போடுகிறேன் என்று. சீதம்மா
வந்தது எனக்கு பெரும் பேறு. அது போதாதா - திருவேங்கடமணி, மீனா, கீதா,
மற்றும் பலர்? என் இறுதி இடுகையில்  விளக்கம் தேவை எனின், விளக்க முன்
வருவேன். கொஞ்சம் மூச்சு வாங்கின பிறகு, தொடருகிறேன்.
இன்னம்பூரான்
2010/7/15 seethaalakshmi subramanian <seethaalakshmi@gmail.com>:
meena muthu 
7/15/10

>> அதே! ஏன்?
>> பதறியோ?
>> பார்க்கமலோ?
>> பின்வாங்கியோ?
>> புரியாமலோ?
>> பூச்சூடியோ?
>> 'பென்' வராததாலோ?
>> பேர் அறிந்தோ?
>> பெளருஷம் கலைந்தோ?
>> ஃபன்னுக்காகவோ?

இதெல்லாம் ஒண்ணும் இல்லை. மேற்கொண்டு என்ன செய்ய!
உங்களின் பதிலுக்காகவல்லோ காத்திருக்கிறேன்!


meena muthu 
7/15/10

2010/7/15
>> அதே! ஏன்?
>> பதறியோ?
>> பார்க்கமலோ?
>> பின்வாங்கியோ?
>> புரியாமலோ?  ஆமா.. புரியாமல்த்தான் :)
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/15/10

\
இதோ வந்தனன், விளக்கத்துடன்.
அதான் படமே போட்டாச்சே! நன்றி: http://www.unmaionline.com/new/images/magazine/2012/january/16-31/dravidapuratchi.jpg
இன்னம்பூரான்
24 04 2013

No comments:

Post a Comment