Sunday, May 12, 2013

அன்றொரு நாள்: மே 13: அனந்தகோடி சூரியரஷ்மி!




அன்றொரு நாள்: மே 13: அனந்தகோடி சூரியரஷ்மி!


Innamburan Innamburan Tue, May 15, 2012 at 3:35 AM

ன்றொரு நாள்: மே 13:
அனந்தகோடி சூரியரஷ்மி!

சிறு வயதில் அதிகாலையில் புதுக்கோட்டையின் புதுக்குளத்தைச் சுற்றி ஓடுவதுண்டு. ஒரு நாள், பிடிவாதமாக, ஏழு வயது தம்பி பார்த்தசாரதி கூட வந்தான். அங்கு பக்கத்திலேயே சுடுகாடு. மெனெக்கெட்டு, அங்கிருந்து மேலேறி வந்து ஒரு ஜடாமுனி, அவனை பார்த்தார். பிறகு வானத்தை பார்த்து அவனிடம், ‘நீ இந்த நக்ஷத்திரம் போல் ஜொலிப்பாய்’ என்றார். எனக்கு அச்சான்யமாக பட்டது. விரைவில் வீடு திரும்பினோம். யாரிடமும் சொல்லவில்லை. பத்து வயது ஆனபோது, ஆகஸ்ட் 7, 1949 அன்றிலிருந்து ஜொலிக்கிறான். அது1898ம் வருடத்து அனந்தகோடி சூர்யரஷ்மி நக்ஷத்திரத்தை ஞாபகப்படுத்துகிறது.

‘அம்பா! நீ இரங்கலாகாதா?’ 

பிரளயம் கோத்துக்கும் போல பண்ணிட்டேயேடீ. எந்த பிரமேயத்தைக் கொண்டு, மே 13, 1898 அன்று, மிஸ்டர் மான்ய்வல் பைக்கடை அவர்கள் சொன்னதைப் போல் இப்படி செய்தாய்? அதுவும் ஆகஸ்ட் 1949 தான். அவருடைய திருமகனும்...* அவர் என் அப்பாவிடம் சொன்னார், ‘என் தோட்டத்து மலரை பரம பிதா தனதாக்கிக்கொண்டார்’ என்று. உனக்குத் தான் கருணையில்லை. உமையொருபாகனாக, உன்னை தழுவி நிற்கும் அந்த தோடுடைய செவியனுக்கும் புத்தி எங்கே போச்சு? மதுரையில் உன்னை அவனிடம் கையை பிடித்து தாரை வார்த்துக்கொடுத்த அந்த அலங்காரப்பிரியன் மஹாவிஷ்ணுவுக்கு கூட தயை தாக்ஷிண்யம் இல்லையே. ஏன்? உலகமாதாவான தாயார் மஹாலக்ஷ்மி கூட கிருபையுடன் கண்ணசைக்கவில்லையே. நாங்கள், ஹிந்து சமுதாயம், தமிழகம், பாரதவர்ஷம் செய்த கர்மவினையா, தாயே?

அன்றொரு நாள் கிரிஸ் ஆன்ஸ்ட்டூஸ்சும்,ஜேம்ஸ் மார்லியும் அமெரிக்காவிலிருந்து வந்த போது, இரண்டு பேரும் மனோதத்துவ பேராசிரியர்கள், கீழே படம் போட்டிருக்கேனே, அந்த புஸ்தகத்தைத் தான் கொடுத்தேன். மேலும் சொன்னேன்.
இதை எழுதிய வாலிபன் தான், பி.அய்யாசாமி, ஜி.ஜி. நரஸிம்ஹாச்சாரியார், பீ.வீ.காமாஸ்வர ஐயர் அவர்களுடன் கூட்டு சேர்த்து கொண்டு 1896 ல் ‘ப்ரபுத்த பாரதா‘ என்ற ஆன்மீக விழிப்புணர்வு சஞ்சிகையை பிரசரித்தார்கள். இந்த வாலிபன் தான் ஆசிரியர். நால்வரும், அவர் 1893ல் அமெரிக்கா போகுவதற்கு முன்னேரே ஸ்வாமி விவேகாநந்தரின் சிஷ்ய கோடிகள். இவர் தான் ‘கமலாம்பாள் சரித்திரம்’  என்ற புதினத்தை 1896இல் வெளியிட்டார். தமிழிலக்கியத்தில் அது தான் இரண்டாவது புதினம். அவர்களிடம் நான் திரு. பி.ஆர். ராஜம் அய்யர் அவர்கள் தான் அந்த வாலிபன். ஆத்மவிசாரணையில் புதிய ராஜபாட்டைகள் போட்டவர். மே 13, 1896 அன்று அவர் சிவலோக பிராப்தி அடைந்த போது, அவருடைய வயது 24. அவர் பூலோகவாசியாக இல்லாததால், இரண்டே வருடங்களுக்கு பிறகு, ப்ரபுத்த பாரதா அடுத்த மாத இதழுடன் நின்று போனது என்று மேலும் சொன்னேன். விசனத்துடன் கேட்டுக்கொண்டார்கள். இன்று திண்ணை இதழில் நான் பார்த்த கட்டுரை ஒன்று, திரு. பி.ஆர். ராஜம் அய்யர் அவர்கள் காலத்தில் நடந்து வந்தத் தத்துவ விசாரணை/மரபு/ஆளுமை/ ஆழம்/ விசாலம்/ உன்னதம் ஆகியவற்றை எடுத்து வைப்பதால், காப்புரிமை & நன்றி நவின்று, பதிவு செய்கிறேன்.
இன்னம்பூரான்
13/14 05 2012
Inline image 1

*******************
பாரதியாரது தத்துவ மரபு
முப்பால்மணி
தமிழக மரபில் வேதாந்தம்
பாரதியாருக்கு முந்திய வேதாந்தம்
1880களில் சிதம்பரத்திலிருந்து வந்த பிரம்மவித்யா இதழில் சீனிவாச சாஸ்திரி அத்வைத கட்டுரைகளை வெளியிட்டார், சார்வாகம் உலகாயதம் மற்றும் சைவ சித்தாந்தம் ஆகியனவற்றை மறுத்து எழுதினார், ஜhன் லாக்கி. ஹhப்ஸ் ஆகியோருடைய ஆங்கிலேய உலகாயதத்தையும் மற்றும் ஜெர்மானிய புஹ்னர் மேற்கொண்டு இருந்த ஆற்றல்-பொருள் பற்றிய உலகாயதமும். அதோடு சமூகம் மற்றும் சோஷலிசத்தின்பால் இயற்கை சார்ந்த தத்துவங்களைக் கொண்டு செலுத்துவது பற்றிய கருத்துக்களையும் அறியப் பெற்று இருந்த கல்வியாளர் இங்கே 1880 முதற்கொண்டு இங்கே இருந்தனர், மேலும் வால்டேர். ரூஸேh வழிப்படுத்திய பிரெஞ்சுப் புரட்சி மற்றும் விவரித்த நாத்திகம் ஆகியனவற்றைப் பயின்ற படிப்பாளிகள் இங்கே நிலவினர், 1870 முதற்கொண்டு சைவச் சான்றேhர்கள்(யாழ்பாணம். கொக்குவில். குகதாசர் ச, சபாரத்தின முதலியார். Nளை, சோமசுந்தர நாயக்கர்)இங்கே நேர்காட்சிவாதத்தின் ஆன்மிக மற்றும் சமூக விளக்கங்களைக் கைக்கொண்டு புத்தெழுச்சியுடன் திகழ்ந்தனர், கூடவே இங்கே nஜ,எஸ்,மில். ஸ்பென்ஸர். பிராட்லா ஆகியோரது நேர்காட்சிவாத வழிப்பட்ட பகுத்தறிவு நாத்திகக் கருத்துகளும் ஆங்கிலக் கல்வியாளரிடையே வலுவுடன் மேற்கொள்ளப்பட்டு இருந்தன, (இந்த நேர்காட்சி வாதக் கல்விப் பயிற்சி பெற்றவரைத் தான் பாரதி பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள் என வெறுத்தார், பாரதியரால் பொய்மைசேர் மதியினில் புலைநாத்திகம் கூறுபவர் என்று பேசப் பட்டவர் இவர்களாக இருக்கலாம்), 1880 முதல் 1896 முடிய பிரம்மவித்யா இதழ் அவர்களோடு தத்துவப்போர் புரிந்தது, பி,ஆர், ராஜம் அய்யர். சென்னை அழகிய சிங்கர் தம் பங்குக்குக் கட்டுரைகளைத் தந்தனர், இவர்கள் புல். பு{ண்டு. மரம். விலங்கு. பறவை. மனிதர். தேவர். எல்லாப் பிறப்பும் பிரம்ம ஸ்வரூபங்கள் என்று முதலில் பேசினர், பிறகு பஞ்சபு{தப் பொருள்களும் இல்லை என்றனர், கடவுளானது(பிரம்மானது) தனது மாயை காரணமாகப் புல். பு{ண்டு. மரம். விலங்கு. பறவை. மனிதர். தேவர் என எல்லாப் பிறப்புமாகத் தோற்றம் தருகிறது, ஆகவே புல். பு{ண்டு. ஆகியன தோற்றம் மட்டுமே, இருப்பது ஒன்றே, அது பிரம்மம் எனச் சுட்டினர், புறவயப் பொருள்களையும். இயலுலகையும் ஏற்றனர், பிரம்மத்தையும் ஏற்றனர், என்றhலும். அறிவு மட்டுமே உண்மை. பொருள்கள் பொய் என்ற கருத்தியலின் பால்நின்று பிரம்மம் ஒன்று மட்டுமே உண்மை, புல். பு{ண்டு. மரம். விலங்கு. பறவை. (நதி. கடல். தீ. காற்று). தேவர் (நாட்டார் குலதெய்வங்கள்). மனிதர். எல்லாப் பிறப்புகளும் தோற்றம் மட்டுமே என்று முடிவாகக்[ கூறினர், இப்படியாக 20-ஆம் நு}ற்றhண்டுத் தொடக்கத்தில் நின்றனர், அகவய பிரம்மமா அல்லது அனைத்தையும் அளாவி உள்ளும். புறமும் ஆக விளங்கும் புறவய பிரம்மமா என்ற வரலாற்றுச் Nழ்நிலையில்அகம்பிரமாஸ்மி என அகவய பிரம்மத்திற்கு அத்வைதத்துறையில் விளக்கம் கூறினர், அப்போது பிரஸ்தானத்திரயங்களில் ஒன்றhன பிரம்ம சூத்திரமானது முதன்முதலாக 1905-இல் சங்கர. ராமாநுஜ. நீலகண்ட பாஷ்யங்களுடன் தமிழில் மாடபு{சி-ராமாநுஜhசாரியாரால் வெனியிடப் பட்டு இருந்தது, இந்த நிலையில் சங்கரர் அகவயஅத்வைதமே முதலில் பாரதியாரிடம் பிரவேசித்தும் இருந்தது,,.’
******************
உசாத்துணை:
 "Prabuddha Bharata", Vol. 100 No.1 (January 1995).
 "The Story of Ramakrishna Mission" (Kolkata: Advaita Ashrama, 2006), 798–811
http://www.advaitaashrama.org
http://www.eng.vedanta.ru/prabuddha_bharata.php Vedanta website] from Russia with articles from "Prabuddha Bharata"
* [http://www.vivekananda.net/NotNewButLongForgotten.html Cover] of March 1897 issue of "Prabuddha Bharata"
BRR.jpg
14K

coral shree Tue, May 15, 2012 at 3:56 AM
To: Innamburan Innamburan

அருமையான பதிவு ஐயா, வணக்கம்.

2012/5/15 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ன்றொரு நாள்: மே 13:
அனந்தகோடி சூரியரஷ்மி!

சிறு வயதில் அதிகாலையில் புதுக்கோட்டையின் புதுக்குளத்தைச் சுற்றி ஓடுவதுண்டு. ஒரு நாள், பிடிவாதமாக, ஏழு வயது தம்பி பார்த்தசாரதி கூட வந்தான். அங்கு பக்கத்திலேயே சுடுகாடு. மெனெக்கெட்டு, அங்கிருந்து மேலேறி வந்து ஒரு ஜடாமுனி, அவனை பார்த்தார். பிறகு வானத்தை பார்த்து அவனிடம், ‘நீ இந்த நக்ஷத்திரம் போல் ஜொலிப்பாய்’ என்றார். எனக்கு அச்சான்யமாக பட்டது. விரைவில் வீடு திரும்பினோம். யாரிடமும் சொல்லவில்லை. பத்து வயது ஆனபோது, ஆகஸ்ட் 7, 1949 அன்றிலிருந்து ஜொலிக்கிறான். அது1898ம் வருடத்து அனந்தகோடி சூர்யரஷ்மி நக்ஷத்திரத்தை ஞாபகப்படுத்துகிறது.


ஆச்சரியமாக இருக்கிறது..... 


‘அம்பா! நீ இரங்கலாகாதா?’ 

பிரளயம் கோத்துக்கும் போல பண்ணிட்டேயேடீ. எந்த பிரமேயத்தைக் கொண்டு, மே 13, 1898 அன்று, மிஸ்டர் மான்ய்வல் பைக்கடை அவர்கள் சொன்னதைப் போல் இப்படி செய்தாய்? அதுவும் ஆகஸ்ட் 1949 தான். அவருடைய திருமகனும்...* அவர் என் அப்பாவிடம் சொன்னார், ‘என் தோட்டத்து மலரை பரம பிதா தனதாக்கிக்கொண்டார்’ என்று. உனக்குத் தான் கருணையில்லை. உமையொருபாகனாக, உன்னை தழுவி நிற்கும் அந்த தோடுடைய செவியனுக்கும் புத்தி எங்கே போச்சு? மதுரையில் உன்னை அவனிடம் கையை பிடித்து தாரை வார்த்துக்கொடுத்த அந்த அலங்காரப்பிரியன் மஹாவிஷ்ணுவுக்கு கூட தயை தாக்ஷிண்யம் இல்லையே. ஏன்? உலகமாதாவான தாயார் மஹாலக்ஷ்மி கூட கிருபையுடன் கண்ணசைக்கவில்லையே. நாங்கள், ஹிந்து சமுதாயம், தமிழகம், பாரதவர்ஷம் செய்த கர்மவினையா, தாயே?

அன்றொரு நாள் கிரிஸ் ஆன்ஸ்ட்டூஸ்சும்,ஜேம்ஸ் மார்லியும்,, அமெரிக்காவிலிருந்து வந்த போது, இரண்டு பேரும் மனோதத்துவ பேராசிரியர்கள், கீழே படம் போட்டிருக்கேனே, அந்த புஸ்தகத்தைத் தான் கொடுத்தேன். மேலும் சொன்னேன்.


ஆகா, என்ன விரைவான நடை...


இதை எழுதிய வாலிபன் தான், பி.அய்யாசாமி, ஜி.ஜி. நரஸிம்ஹாச்சாரியார், பீ.வீ.காமாஸ்வர ஐயர் அவர்களுடன் கூட்டு சேர்த்து கொண்டு 1896 ல் ‘ப்ரபுத்த பாரதா‘ என்ற ஆன்மீக விழிப்புணர்வு சஞ்சிகையை பிரசரித்தார்கள். இந்த வாலிபன் தான் ஆசிரியர். நால்வரும், அவர் 1893ல் அமெரிக்கா போகுவதற்கு முன்னேரே ஸ்வாமி விவேகாநந்தரின் சிஷ்ய கோடிகள். இவர் தான் ‘கமலாம்பாள் சரித்திரம்’  என்ற புதினத்தை 1896இல் வெளியிட்டார். தமிழிலக்கியத்தில் அது தான் இரண்டாவது புதினம். அவர்களிடம் நான் திரு. பி.ஆர். ராஜம் அய்யர் அவர்கள் தான் அந்த வாலிபன். ஆத்மவிசாரணையில் புதிய ராஜபாட்டைகள் போட்டவர். மே 13, 1896 அன்று அவர் சிவலோக பிராப்தி அடைந்த போது, அவருடைய வயது 24. அவர் பூலோகவாசியாக இல்லாததால், இரண்டே வருடங்களுக்கு பிறகு, ப்ரபுத்த பாரதா அடுத்த மாத இதழுடன் நின்று போனது என்று மேலும் சொன்னேன். விசனத்துடன் கேட்டுக்கொண்டார்கள். இன்று திண்ணை இதழில் நான் பார்த்த கட்டுரை ஒன்று, திரு. பி.ஆர். ராஜம் அய்யர் அவர்கள் காலத்தில் நடந்து வந்தத் தத்துவ விசாரணை/மரபு/ஆளுமை/ ஆழம்/ விசாலம்/ உன்னதம் ஆகியவற்றை எடுத்து வைப்பதால், காப்புரிமை & நன்றி நவின்று, பதிவு செய்கிறேன்.


முற்றிலும் சுவையான தகவல்கள். மிகச் சுருக்கமான சுவையான வரலாறு.. இனிமையான வாசிப்பை வழங்கும் பதிவு. நன்றி ஐயா.

அன்புடன்
பவளா.



Geetha Sambasivam Tue, May 15, 2012 at 9:56 AM


அவர் என் அப்பாவிடம் சொன்னார், ‘என் தோட்டத்து மலரை பரம பிதா தனதாக்கிக்கொண்டார்’ என்று. உனக்குத் தான் கருணையில்லை. உமையொருபாகனாக, உன்னை தழுவி நிற்கும் அந்த தோடுடைய செவியனுக்கும் புத்தி எங்கே போச்சு? மதுரையில் உன்னை அவனிடம் கையை பிடித்து தாரை வார்த்துக்கொடுத்த அந்த அலங்காரப்பிரியன் மஹாவிஷ்ணுவுக்கு கூட தயை தாக்ஷிண்யம் இல்லையே. ஏன்? உலகமாதாவான தாயார் மஹாலக்ஷ்மி கூட கிருபையுடன் கண்ணசைக்கவில்லையே. நாங்கள், ஹிந்து சமுதாயம், தமிழகம், பாரதவர்ஷம் செய்த கர்மவினையா, தாயே?//

இந்த எழுத்துக்கு என்ன சொல்றது? அப்படியே மனதை உருக்குகிறதே! நேரே நின்னு சொல்றாப்போல் காதில் ஒலிக்கிறது. பி. ஆர். ராஜாமையருக்கு அருமையான அஞ்சலி. அவரைக் குறித்து ஏற்கெனவே அறிந்திருந்தாலும் இந்த மேலதிகமான தகவல்கள் புதிது.  மிக்க நன்றி. லா.ச.ரா.வே வந்து  உங்களுக்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறார். 


2012/5/15 Innamburan Innamburan <innamburan@gmail.com>
இந்த நிலையில் சங்கரர் அகவயஅத்வைதமே முதலில் பாரதியாரிடம் பிரவேசித்தும் இருந்தது,,.’
******************


Anna Kannan Tue, May 15, 2012 at 10:33 AM


அட, ஆமாம். அந்தக் காற்று இங்கே வீசுகிறது.



2012/5/15 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
லா.ச.ரா.வே வந்து  உங்களுக்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறார். 

[Quoted text hidden]

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Tue, May 15, 2012 at 10:49 AM


இந்தப் புத்தகத்தின் பல பிரதிகளை சி.சு.செல்லப்பா தன்னிடம் வைத்திருந்தார்.  எண்பதுகளின் இறுதியில் நண்பர்கள் அனைவரிடமும் வருத்தத்துடன் புத்தகக் கட்டைக் காண்பிப்பார்.

க்ரியாவில் அப்போது வேலை செய்து கொண்டிருந்த திலீப் குமார் மூலமாக நானும் என் நண்பர் ஒருவரும் இந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கினோம்.  நான் சென்னை சென்றபோது செல்லப்பாவை சந்தித்து  சில  பிரதிகள் தனியாக வாங்கி வந்து சில நண்பர்களுக்குக் கொடுத்தேன்.

இப்பொழுது இந்த நூல் எங்கும் கிடைக்க வில்லை என்று நினைக்கிறேன்.  மீண்டும் பதிப்பிக்கப் படவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

அன்புடன்

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------

Geetha Sambasivam Tue, May 15, 2012 at 10:51 AM


வருத்தமான விஷயம். நீங்க சி.சு. செல்லப்பா பத்திச் சொல்கையில் எல்லாம் மனதைப் பிசைகிறது. :((((

Kamala Devi Tue, May 15, 2012 at 10:56 AM



சி.சு. செல்லப்பாவைப்பற்றி வடக்குவாசலில் பென்னேஸ்வரன் எழுதிய கட்டுரை படித்தீர்களா?
மனம் கலங்கி அழத்தோன்றியது, மாமியின் பதில் கேட்டபோது,
”அது எப்படி எங்கள் அந்தரங்கத்தையெல்லாம் உன்னிடம் சொல்வது ? ” ---
கீதா, செல்லாப்பவை அல்ல, அந்த மாமியைப்பார்க்காமல் போனோமே என்று பலமுறை ஏங்கியிருக்கிறேன்.
கமலம்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Tue, May 15, 2012 at 10:56 AM


இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.

அவருடைய எழுத்து பிரசுரங்களை மொத்தமாக ஒரு கட்டாகக் கட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

எழுத்து பிரசுர நூல்களை மொத்தமாக வாங்குபவர்களுக்கு இந்த Rambles in Vedant இலவசமாகவும் கொடுத்துக் கொண்டிருந்தார் செல்லப்பா.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------

Anna Kannan Tue, May 15, 2012 at 11:12 AM

Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com
சி.சு.செல்லப்பா மரணம் அடைந்த டிசம்பர் 18, 1998 அன்றுதான் அவரை முதன்முதலில் பார்த்தேன். திருவல்லிக்கேணி இல்லத்தில் கிடத்தியிருந்தார்கள். அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை. யாருடனும் எதுவும் பேசவில்லை. கைகூப்பி வணங்கிவிட்டு வந்துவிட்டேன்.



Kamala Devi Tue, May 15, 2012 at 11:21 AM



இறுதியாகவேனும் காணும் பாக்யம் கிட்டியதே தம்பி கண்ணன்
97ல் ஞான் சென்னையில் பயிற்சிக்கு வந்துள்ளேன், ஆனால், இப்பொழுதுதான்,
சான்றோர்கள் யாரையுமே ஞான் சந்தித்தில்லையே ,என நினக்கும்போதே கண்ணீர் வருகிறது



Nagarajan Vadivel 
இந்த இழைக்குத் தொடர்புள்ளதாக உள்ள ஒரு இணைப்பைக் கொடுத்துள்ளேன்

http://sri-ramana-maharshi.blogspot.in/2008/09/interview-with-prof-t-m-p-mahadevan.html

சென்னைப் பல்கலைக்கழகத்தில் எங்கள் மரியாதைக்கும் போற்றுதலுக்குமான பேராசிரியர் டி.எம்.பி.மஹாதேவன் அதவைதா தத்துவத்தில் உலகப் புகழ் பெற்ற பேராசிரியர்.  1982-ல் அவர் அளித்த பேட்டி மேலே உள்ள இணைப்பில்
பாரதியார் காசியில் வாழ்ந்தவர்.  காசி பல தத்துவங்கள் வளர்ந்த பூமி.  பாரதியார் பல ததுவங்களைப் பாடல்களில் எழுதியிருந்தாலும் அவர் சக்தி வழிபாட்டை ஏற்றுக்கொண்டவர்.  சகோ.நிவேதிதாவின் தாக்கத்துக்கு ஆட்பட்டவர் என்பது ஒரு அனுமானம்

No comments:

Post a Comment