Friday, May 17, 2013

அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(1)




அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(1)

Innamburan S.Soundararajan Fri, May 17, 2013 at 4:56 PM



 அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(1)
Inline image 1

முன்குறிப்பு:

கிட்டத்தட்ட முப்பது மாதங்களுக்கு முன் திரு. வாசுதேவன் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த இழை, 'தணிக்கைத்துறையின் தணியா வேகத்தின்' கிளை. பல சான்றோர்கள், மனம் திறந்து, திசை மாற்றாமல் அளவளாவிய இழை. இது இந்தியாவை மட்டுமல்ல, உலகின் மற்ற துரைத்தனத்தாரின் போக்கை உற்று நோக்குவது. வழக்கம் போல் நூல் முடிச்சுப்போட்டுக்கொண்டு, தங்கி விட்டது. தற்கால அரசியல் நிலையை, குறிப்பாக இந்தியாவின் வரும் தேர்தலை நினைக்கும்போது விழிப்புணர்ச்சி அவசரத்தேவை. எனவே, இவ்விதழின் மிச்சபகுதிகளை வலையேற்றிய பிறகு, சிந்தனைகள் தொடரலாம்.
சித்திரத்துக்கு நன்றி
இன்னம்பூரான்
17 05 2013
____________________________________________________________



Tirumurti Vasudevan 
1/13/10

ஆமாம். வெகு நாட்களாக இருக்கிற ஆதங்கம். அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க சட்ட வழி முறைகளே இல்லையா?
உங்கள் பதிவுகளில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். வேறு இழையாக இதை பிரித்து கொண்டு போகிறேன்.
திவாஜி

2010/1/13 Innamburan Innamburan 
திவாஜி விடுவதாக இல்லை.



Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/13/10

திவாஜி,
,'எள்' என்றால் எண்ணெய்! இழை பிரிக்கவேண்டும் என நினைத்தேன். செய்து விட்டீர்கள்! இங்கு இந்த வினாவே தொடக்கம்.
.
அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க அரசியல் சாசனம் வழி வகுத்துள்ளது. அந்தந்த செயல்களுக்கு அந்தந்த சட்டம் உண்டு; தண்டனை உண்டு. சான்றாக, சிறார்களையும், சிறுமிகளையும் வேலை வாங்கக்கூடாது, சட்டப்படி.  மற்றொரு சட்டம் அவர்களுக்கு கட்டாய கல்வி என்கிறது. நடப்பது நாம் அறிந்ததே.

௧. மக்கள் சட்டத்தை மதிப்பதில்லை.
௨. அரசு சட்டத்தின் சாட்டையை வீசுவதில்லை.

௩.நீதித்துறையை என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது.

௪. நிர்வாகம் தடம் மாறும் போது பொதுநல வழக்கு, தகவல் உரிமை சட்டம், ஆகியவை அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க விரட்டலாம். சட்டம் மற்றவகையில் உதவாது, அதனுடைய பயன் வேறு.

இவையெல்லாம் புதியவை. அறுபது வருடங்ககளுக்கு முன்னாள், திரு வசந்த பை என்ற வழக்கறிஞர் தவறுகளை தட்டிக்கேட்டு நீதிமன்றத்தையே, ஒரு 
ஆட்டு ஆட்டி வைத்தார்.

௫.  அரசை உருப்படியாக வேலை செய்ய, அரசியல் வாதிகள் தன்னலம் அற்றவர்களாகவும்,சர்தார் படேல் போல திறன் படைத்தவர்களாக இருக்கவேண்டும். அது மக்களாட்சியில் துர்லபம். சர்வாதிகாரமோ கொடியது.

௬. அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கட்டுப்பாடான விதிமுறைகள் உள்ளன.    கண்டு கொள்பவர்கள் இல்லை.

௭. எனவே, விழுப்புணர்ச்சி, போராட்டம் என்றெல்லாம் ஆரம்பிக்க ஹேது உண்டு. வரலாறும் அதையே கூறுகிறது.

இன்னம்பூரான்

Tirumurti Vasudevan 
1/13/10

அரசு மதிச்சாத்தானே மக்கள் மதிக்க? அரசே சட்டத்தை மதிக்காது, கோர்ட் உத்திரவை அமல் படுத்தாது ன்னா என்ன் மக்கள் செய்வாங்க?
அதான் கேக்கிறேன், அரசு தன் கடமையை செய்ய வேண்டும்ன்னு கேஸ் போட முடியுமா முடியாதா? ஆர்தர் ஹெய்லி யோட ஹைப்லேசஸ் லே அப்படி கனடிய (?ப்ரிட்டிஷ்?) சட்டத்தில் இடம் உண்டுன்னு படிச்ச நினைவு. நினைவென்ன, படிச்சேன் நிச்சயமா.



Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/13/10

திவாஜி,
ஆர்தர் ஹெய்லி யோட ஹைப்லேசஸ் கற்பனை நூல் எனினும்,  அதன் பின்ணணியில் ஆய்வு இருந்தது. 1960ல் அது எழுதப்பட்டபோது, அப்படி சட்டம் ஒன்றும் இல்லை; பிறகும் இல்லை. ஆனால், அந்தந்த சட்டங்களை மக்கள் கையாண்டார்கள் வெற்றியோடு. 'டார்ட்' சட்டம் இங்கிலாந்தில் வேரூன்றியிருந்தது. ஒரு ப்ராம் வண்டியில் இருந்த கம்பியானால் அமைந்த வசதி, தவறாக இணைக்கப்பட்டிருந்த்ததால், குழந்தையின் கண்ணை குத்தி விட்டது. வழக்கில், அதை விற்றவரும், உருவாக்கிய கம்பெனியும், பளுவான நஷ்டஈடு கொடுக்க  தீர்ப்பு. இந்தியாவில் 'ஏன் 'டார்ட்' பற்றி பேசமாட்டேன் என்கிறார்கள் என்பது மர்மம்.பட்டாசு கம்பேனி சட்டத்தை மீறினால்  ஏற்படும் சாவுக்கு வரிப்பணத்த ஏன் கொடுக்கவேண்டும்? அவனிடம் பிடுங்க வேண்டியது தானே?
As John Stuart Mill put it, "Vigilance is the price of Liberty."
இங்கிலாந்தில் விழிப்புணர்ச்சி அதிகம்; வெல்ஃபேர் ஸ்டேட் அல்லவா. நான் ஐந்து வருடங்கள் இங்கு மக்கள் ஆலோசனை மையத்தில் தன்னார்வ பணி புரிந்த போதும், அத்துறையில் பட்டப்படிப்பு ஆய்வுகளிலும் கற்றுக்கொண்டது மக்களால் மட்டுமே அரசை மேய்க்க முடியும் என்பது. நாள் தோறும், அரசு மான்யம் பெற்று அதை செய்கிறோம்!  என்னுடையான உறுதியான கருத்து, நாடாளும்
மன்றம், அரசியல் சாஸனம் என்பதையெல்லாம் விட ஆங்கிலேயர்கள் Citizen Advice [established 1939] அமைப்பை நமக்கு தந்திருந்தால், நாம் சுபிக்ஷமாக இருந்திருப்போம். 2002 ஆண்டிலிருந்து அந்த அமைப்பின் தொடக்கத்தையாவது இந்தியாவில் செய்ய முயன்றேன். கஜினி படையெடுப்பு செய்தேன். படு தோல்வி அடைந்தேன். இந்தியாவில் பொதுவாக நான் கண்ட குறை, 'எதிலும் ஆதாயம் தேடுவது'. எனினும், சான்றோர்கள் பல இருந்திருக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் டா. பார்த்தசாரதி என்ரு ஒருவர் பழங்குடிமக்களுக்கு சேவை செய்தார். அவர் காலவியோகம் ஆனபோது, மக்கள் நம்பவில்லை. அவர்கள் அவரை இறைவன் என்றும், இறைவனுக்கு மரணம் இல்லை என்றும் நம்பி இருந்தார்கள்.
இந்தியாவில் அரசு இயந்திரம் இந்தளவுக்கு பழுது அடையும் என்று நாற்பது வருடங்களிக்கு முன் கிஞ்சித்தும் நினைக்கவில்லை.
அன்புடன்,

இன்னம்பூரான்
2010/1/13 Tirumurti Vasudevan <agnihot3@gmail.com>

karthi 
1/14/10


இன்னம்பூரான்,
அரசு - மேலும் குறிப்பாக பிரிட்டிஷ் மாதிரியிலான அரசு - ஒரு சிறந்த நிர்வாகியாக
இருக்க முடியாது என வரலாறும், பல நாடுகளின் அனுபவங்களும் நிருபித்துள்ளன.
அதன் குறைகள் அரசு அமைப்புடன் சேர்ந்தே பிறப்பவை. "உடன் பிறந்து கொல்லும்
நோய்கள்."
இதற்கான தீர்வு அரசு சேவைகளை தனியார் மயப்படுத்தலில்தான் இருக்கிறது. அமெரிக்காவிலும்
இங்கிலாந்திலும் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டு சேவைகள் மேம்பாடு
அடைந்துள்ளன. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர், மலேசியா, கொரியா, ஜப்பான் முதலிய
நாடுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். மலேசியாவில் வருமான வரி வசூலிப்பு கூடத்
தனியார் துறையினால்தான் செய்யப்படுகிறது. இந்நாடுகளில் அரசாங்கம் பல துறைகளில்
மேலாண்மை மட்டுமே செய்கிறது.
ஆனால் தனியார் துறை இலாப நோக்குடையது. இலாபம் பெற சேவைகளுக்குக் கட்டணம்
விதிக்கும். சேவை பெறும் பொதுமக்கள் அதிகக் கட்டணம் தர வேண்டி இருக்கும்.
இந்தியாவில் இதற்குப் பெரும் எதிர்ப்பு கட்டாயம் இருக்கும்.
இந்தியாவுக்கு இன்னமும் ஒரு சோஷியலிச மனப்பான்மை இருக்கிறது. சோஷியலிசம்
மீண்டும் மீண்டும் தோல்வியடைந்த போதும் அதனை விடாப்பிடியாகப் பிடித்துக்
கொண்டிருக்கும். நோக்கங்கள் உன்னதமாக இருந்தாலும் விளைவுகள் மோசமாக இருக்கும்.
ஆகவே அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க அரசு இவற்றிலிருந்து விலக வேண்டும்.
மேலாண்மை மட்டுமே செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியா சீரடையும்.
ரெ.கா.

N. Kannan <navannakana@gmail.com>
1/14/10

இந்தியா போன்ற ஆன்மீக பாதிப்புள்ள நாட்டில் எவ்வகையான அரசு செயல்படும்
என்பதே கேள்வி.
ஒரு காலத்தில் தெய்வத்திற்கு பயப்பட்டு காரியங்கள் நடந்து வந்தன.
விரைவில் வெளியாகப் போகும் மின்னூல்களில் உ.வே.சா காலம்வரை (ஆங்கில அரசு)
அது ஆங்கிலேயர்களையும் உடன் சேர்த்து எப்படி நடந்து வந்திருக்கிறது
என்பது தெரிய வரும். இன்னும் அங்கு தர்மசாலைகள் உள்ளன. எல்லாம்
தர்மத்திற்குக் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது.
அதே நேரத்தில் கோரமான சுயநலமும், ஊழலும், ஒழுங்கின்மையும் செய்முறை
வாழ்வாகியும்விட்டது.
ஒருபுறம் சோஷலிசம், இன்னொருபுறம் தனியார் துறை. இரண்டையும் ஊழலே அங்கு
கட்டுப்படுத்துகிறது.
ஊழல் என்பதே இந்திய அரசின் அடிக்கோடாக, அடிப்படை அலகாக மாறிவிட்டது.
எனவே ஊழலை எப்படி ஒழுங்குபடுத்துவது எனும் புதிய ஃஇர்வாக நுணுக்கங்கள்
அங்கு செயல்முறைக்கு வரவேண்டும்.
ஊழல் என்பதும் தனியார் துறை சமாச்சாரம்தான்!

க.>


Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
1/14/10

ம்ம்ம்ம்ம்ம் பெருமூச்சுத் தான் விடமுடியுது! :(((((((( 


Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/14/10

நன்னா காதுலே விழறது.


Geetha Sambasivam 
1/14/10



Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/14/10



Venkatachalam Subramanian 
1/14/10

நடுவண் அரசின் பொறுப்பிலுள்ள ஒரு நிறுவனம். தளவாடச் சாமாங்கள் பதிவேட்டில் (Dead stock Register) ஆயில் எஞ்சின் (பெட்டர்) உருப்படி 1.
என்ற பதிவில் இருந்த எஞ்சினைக் கடத்திச் செல்ல திட்டமிட்ட சில ஊழியர்கள் ஒரு புதிய ஏற்பாடு செய்தனர்.

டெட் ஸ்டாக் பதிவேட்டில் இருந்த பதிவினை மாற்றி(Consumable Stock Register) ‘கன்ஸுயூமபல் ஸ்டாக் ரிகிஸ்டருக்கு எடுத்து எழுதினான் ஒருவன். 

ஏன் பிறித்து எடுத்து எழுதினாய் என்ற கேள்வி கேட்கப்படவில்லை. எழுதியவன் ஒரு இட வல மாற்றம் செய்து பெயர்த்து எழுதியிருந்தான்.

’ஆயில் எஞ்சின் ‘ என்பதை ’எஞ்சின் ஆயில்’ என்று எழுதி முறையாக மேலதிகாரியிடம் சுருக்கொப்பமும் பெற்றான்.

பிறகென்ன! 
தினமும் பல வண்டிகளின் பெயரால் செலவு எழுதி ஒரு நன்னாளில் இருப்பு பூஜ்யம் என்று காட்டி காவலரையும் கூட்டத்தில் சேர்த்து பெரிய எஞ்சின் நோகாமல் கடத்தப்பட்டது.
குறுக்கு வழியில் வாழநினைக்கும் திருட்டுக் கூட்டம்!  தணிக்கை குழு ஒன்று இதனைக் கண்டுபிடித்து வெட்ட வெளிக்குக் கொணர்ந்து அந்தக் குழு தண்டிக்கப்படது.

ஓம். வெ.சுப்பிரமணியன

Geetha Sambasivam 
1/14/10

இப்படியும் நடக்கும் என்பதே ஆச்சரியம் தான், கடத்தல் மட்டுமல்ல, தண்டனையும் கூட!

karthi 
1/14/10


ஐயா,
எங்கள் நாட்டிலும் எஞ்சின் திருடர்கள் உள்ளார்கள்.
இங்கே காணலாம்:
ரெ.கா.
2 attachments — Download all attachments   View all images   Share all images  
517.gif517.gif
1K   View   Share   Download  
360.gif360.gif
1K   View   Share   Download  



No comments:

Post a Comment