Saturday, May 25, 2013

2. தேமதுரத் தமிழோசை விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்



2. தேமதுரத் தமிழோசை விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்

Innamburan S.Soundararajan Sat, May 25, 2013 at 9:46 PM




தேமதுரத் தமிழோசை

விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 2
Inline image 1

நூற்றுக்கணக்கான நாடுகளை சார்ந்த அரசியல் வல்லுனர்கள் செய்த ஆய்வின் முடிபு ஒன்றை காண்போம்: ‘ஜனநாயக மரபுகளுக்குகந்த கலாச்சார ஒருமைப்பாடும் பொருள்வளமும் உலகின் குடியரசுகளில் பிரசன்னம், இந்தியாவை தவிர.’ சொல்லப்போனால், இந்திய குடியரசு புரட்சியின் கருத்தாழத்தையும், வரலாற்றையும் இது வரை யாரும் முறையாக ஆய்வு செய்யவில்லை. அதனுடைய விசித்திர/விநோத போக்கு தான் அதற்குத் தடையாக நின்றதா? சுருங்கச்சொல்லின், உலக ஜனநாயக பிரவாகத்தில், இந்தியா கலந்து விடாமல், தனித்துத் தேங்கிவிட்டது. அது ஒரு புதிர் தான். சமூகவியல் ஆய்வாளர்களுக்குத்தான் அது பிடிபடவில்லை.  முந்தைய ஆட்சி இந்தியாவுக்கு, தெரிந்தோ, தெரியாமலோ, தத்தம் கொடுத்த பிதுரார்ஜிதம் என்று  வரலாற்றாசிரியர்கள் ( பிரிட்டீஷ்க்காரர்கள் மட்டுமல்ல) கூறுகிறார்கள். ஃப்ரென்ச்/டச்சு/ போர்ச்சுகீஸ்/பெல்ஜியர் போல் அல்லாமல், பிரிட்டீஷ் கலோனிய ஆட்சி திறந்த மனது கொண்ட நவீனர்களாம்!
இந்த வாதம் சிக்கலானது; நிஜம். ஆனால் நிஜம் அல்ல. பிரிட்டீஷ்க்காரர்கள் ஜனநாயக மரபுகளையும், நெறிகளையும், முறைகளையும் பரப்பினார்கள் என்றால், ஜனநாயகம் ஆஃப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் இருந்த அவர்களின் காலனிகளில், (குறிப்பாக, இந்திய வரலாற்றில் முளைத்தெழுந்த பாகிஸ்தானில்) ஏன் காலூன்ற முடியவில்லை. வாழையடி வாழையாக, இந்திய சமூக சீர்த்தித்தவாதிகளாலும், சமுதாய ஆர்வலர்களாலும் தான் இந்தியா, பொறுமையுடனும், கடும் உழைப்பினாலும், ஜனநாயகத்துக்கு ஏற்புடையதாக தயார் செய்யப்பட்டது என்பது தான் உண்மை. இந்திய தேசீய காங்கிரஸ், பிரிட்டீஷ் தொழிலாளர் கட்சி துவக்கம் செய்வதற்கு முன்னரே 1885ல் நிறுவப்பட்டது.   அந்த கட்சி இந்திய மகாஜனங்கள் யாவரையும், ஜாதி மத இன பேதமின்றி, ஒரு குடையின் கீழ் கொணர பகீரதப் பிரயத்தனம் செய்தது யாவரும் அறிந்ததே. ‘ காங்கிரஸ் இந்திய தேசீயம் என்ற தோணியின் மாலுமி’ என்கிறார், பிரபல வரலாற்று ஆசிரியரான முகுல் கேசவன். எவ்வகையாயினும் இந்தியர் எனப்படுவோரை இந்தத் தோணியில் ஏற்றிக்கொள்ள படாத பாடு பட்டது, இந்த கட்சி. அந்த முயற்சியில் கணிசமான அளவு வெற்றி பெற்றிருந்தாலும், முழு வெற்றி அடைய முடியவில்லை. 1947ல் விடுதலை அடையும் வரை , இந்தியாவில் அதற்கு மவுசு இருந்திருந்தாலும், அதற்கு பின் முஸ்லிம் கட்சிகள், பத்தாம்பசலி ஹிந்து அமைப்புகள், லிபரல்/கம்யூனிசம் (போல்ஷ்விக் புரட்சி நடந்த நான்கே வருடங்களில் நிறுவப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.) போன்ற கொள்கைளால் உந்தப்பட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விட ஆரம்பித்தன.
*
மூலம்:
*
Owing to its counter-intuitive, even miraculous nature, the historical and ideological origins of the Indian Revolution have not been systematically studied by scholars. A study by political scientists of more than one hundred countries found that India alone, of the world’s functioning democracies, did not fit the conventional democratic parameters of cultural homogeneity and economic prosperity—it was, in this respect, an outlier. Where social science cannot account for this puzzle, historians (chiefly but not exclusively British) seek to explain it in terms of a bequest, willed or accidental, from the previous rulers of the country. India is now democratic, it is said, because the British were modern, open-minded colonialists, unlike the French and the Dutch and the Portuguese and (especially) the Belgians.
The problem with this argument is factual as well as counter-factual. To take the latter objection first: if the British promoted democratic values and institutions, why has democracy failed to take root in other of its colonies in Africa and Asia (not least in Pakistan, which has a similar legal and institutional history to India’s)? The truth is that Indians were prepared for democracy by the patient hard work of several generations of homegrown reformers and activists. The Indian National Congress—founded in 1885, some years before the British Labour Party—worked hard, even heroically, to bring Indians of all castes, religions, and ethnicities into its ambit. The Congress, as the historian Mukul Kesavan has remarked, was a “Noah’s Ark of nationalism,” which sought to bring every species of Indian on board. Its successes were significant but not total—while it remained the most influential party until independence in 1947, its hegemony was challenged by parties representing the Muslim interest, the orthodox Hindu interest, and the lower-caste interest, as well as by parties run on more strictly ideological lines, such as the Indian Liberal Party and the Communist Party of India (which was founded four years after the Bolshevik Revolution).
*
சேமமுற வேண்டும் என்று  தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம், மின் தமிழர்கள் கூட்டுறவில். 
(தொடரும்)
இன்னம்பூரான்
15 11 2012

கி.காளைராசன் 



ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
Durai A 



மிக நேர்த்தியான கட்டுரை.
தெருவெங்கும் தமிழ் முழக்கத்துக்கும் இந்திய ஜனநாயக வரலாற்றுக்கும் தொடர்பு குறையெனத் தோன்றுகிறதே? 

பாமரராய் விலங்குகளாய்த் தொடர்ந்து வாழ்வது இந்திய ஜனநாயக அடையாளமென்றால் இது பாரதிக்கு நாம் போட்ட செருப்பு மாலை போலத் தோன்றுகிறதே? (எனக்கு அவனை செல்லமாக அழைப்பதே பிடிக்கும்; என் பிள்ளையை விட இனியவன் பாரதி) 
Innamburan Innamburan 



நன்றி, துரை. நீங்கள் சொல்வது சரியே. குழுமத்தில் கூட கண்ணனும், ஸுபாஷிணியும் வரவேற்றார்களே தவிர, மற்றவர்கள் ஸ்விட்ச்ட் ஆஃப்! தெருவெல்லாம் நடக்கும் தமிழ் முழக்கம் போலி என்று நினைக்கிறேன். இந்த நீண்ட கட்டுரை. பல பகுதிகள். சம்மதமானால் உங்களுக்கு அனுப்புகிறேன். உங்கள் கருத்துக்களும் ஆர்வமும் எனக்கு தேவை. இது என் முதல் மொழிப்பெயர்ப்பு முயற்சி. தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். நல்வரவே.
அன்புடன்,
Durai A 




மொக்கைனு ஒரு புது வார்த்தை வந்திருக்கு இப்ப (may be it is an old expression, don't know:).  அதுக்குத் தான் மவுசு.

அறிவார்ந்த எழுத்தை நெருங்கவும் நேரமில்லை மக்களுக்கு. சிலருக்கு நேரமிருந்தாலும் கிரகிக்க மனம் வருவதில்லை.  என்னுடைய ஆசிரிய நண்பர் அரசன் சொல்லுவார்: படிப்பாங்கனு நெனச்சா கம்பர் பத்தாயிரம் பாட்டு எழுதினாரு?  

கட்டுரை நன்றாகவே இருக்கிறது. படிக்க விரும்புகிறேன்.

happy holidays!

No comments:

Post a Comment