Monday, May 20, 2013

வள்ளலார் -4 ஜீவ ஐக்கியம்





ajan

வள்ளலார் -4

Innamburan S.Soundararajan Mon, May 20, 2013 at 4:44 PM

வள்ளலார் -4
ஜீவ ஐக்கியம்
Inline image 1
சமரசமென்றால் நவரசமும் வரும் போல!
சித்திரத்துக்கு நன்றி: http://1.bp.blogspot.com/-PDYtkQVlGnQ/TV-nsWWbXSI/AAAAAAAAADw/m54cDSRU62M/s1600/kamadhenu.jpg

இன்னம்பூரான்
20 05 2013

சிவ அறிவொளியன் 
5/2/10

அன்பின் நக்கினம் சிவம்,
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்!
நல்ல இடுகை. நன்றி!!
.


> அடுத்த மூன்றிற்கு கீழே விளக்கம் அளித்துள்ளேன்.
> சைவ சமயத்தின் உச்சமே உருவத்தை விட்டு விலகி அருவத்தில் கரைவதுதான். இதை
> நீங்கள் நாயன்மார்கள் பாடல்கள் அனைத்திலும் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக
> திருவாசகத்தில் உருவம் கரிந்து அருவ நிலை சிறப்பாக விளக்கப் பட்டுள்ளது.
>
25 தத்துவங்களோடு நின்று விட்டவர்களுக்கு, எங்கே 36 தத்துவங்களும், 96
தத்துவங்களும் புரியப் போகிறது?!

சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிசூழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய் பங்கயத் தயனுமா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந்துறையில் நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என் றரு ளாயே.  - திருவாசகம்

திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாமம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
*ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்* காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.  - திருவாசகம்



> அடுத்து சன்மார்க்கம் என்பது இறைவனை தானாக காண்பது.
> இங்குதான் ஒருமை என்பது தோன்றுகிறது.
> இங்கு ஒன்றை தவிர வேறு இல்லை என்று உணர்படுகிறது.
> இதற்கு தான் ஜீவ ஐக்கியம் என்று பெயர்.
>

*ஒருமையுடன்* நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய் பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.


> ஆக வள்ளல் பெருமானும் முதல் மூன்று மார்க்கங்களான
> சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சக மார்க்கம்
> என மூன்று நிலைகளில் இருக்கும் வரை முருகன், சிவன் என வழிபாடு முறையினை
> வைத்திருந்தார்.
எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும் ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை இகழ்விற கெடுக்கும்தலை
கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண் கலநீர் சொரிந்தஅழுகண்
கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி கைத்திழவு கேட்கும்செவி
பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம் பகீர்என நடுங்கும்நெஞ்சம்
பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை பலிஏற்க நீள்கொடுங்கை
சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.  -திருஅருட்பா,
முதல் திருமுறை, தெய்வமணி மாலை

>
> அடுத்த நிலையான சன்மார்க்கம் நிலை வரும்போது அனைத்தையும் விட்டு விலகி ஜோதி
> நிலையினை உணர்ந்த காரனத்தால் இறைவன் உருவம் அற்றவன் என்று ஜோதி வடிவானவன் என்று
> அனைவருக்கும் எடுத்து கூறினார்.
> இது அவரது ஆறாம் திருமுறை பாடல்கள் அனைத்திலும் ஜோதி வழிபாடே
> அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் நிலையினை விளக்கி உள்ளார். (முதல் ஐந்து
> திருமுறையிலும் உருவ வழிபாடே உள்ளது)
>
சிவன் - சிவம் இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாதவர்களுக்கு எங்கே ஐயா
இதெல்லாம் புரியப் போகிறது!

திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
    சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
    தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
    திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
    உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
    உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
    மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
    வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே. - திருஅருட்பா,
ஆறாம் திருமுறை
அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
    அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
    பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
    பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
    இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்
    எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
    சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்
    திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.  - திருஅருட்பா,
ஆறாம் திருமுறை
சொல்லிக் கொடுக்க யாருமில்லை.
“ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்”

நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை நன்மைதீ மைகளும் இல்லை
நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற நடுநின்ற தென்றுவீணாள்
போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே போதிப்பர் சாதிப்பர்தாம்
புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று போந்திடில் போகவிடுவார்
சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு தாம்புபாம் பெனும்அறிவுகாண்
சத்துவ அகண்டபரிபூரண காரஉப சாந்தசிவ சிற்பிரம நீ
தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.  - திருஅருட்பா,
முதல் திருமுறை, தெய்வமணி மாலை



ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு
V, Dhivakar 
5/3/10


அன்பின் சிவம்!

உங்கள் விளக்கம் மிக நன்றாக உள்ளது. வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகள் அத்தனையும் படித்து பொருள் புரிந்து விளங்கிக் கொண்டால்தான் ஆறாம் திருமுறையே சரியான முறையில் தெளியப்படும் என்ற உங்களின் கருத்து பல பெரியவர்கள் மூலமும் கேள்விப்பட்டுள்ளேன். படிப்படியான வழியைக் காட்டி நம்மைக் கடையேற்றும் பாடல்கள். 

ஒருமையுடன் உனை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும், உண்மை பேச வேண்டும், பொய்மை பேசாதிருக்கவேண்டும் என்பனவைகளை முதலிலேயேப் பாடிவிட்டதை ஏன் ஒதுக்கவேண்டும்? முருகனும் சிவனும் வள்ளலாரை வழிநடத்திச் சென்ற பாடல்கள் அல்லவா அவை?

ஆறுமுக நாவலர் பற்றிய பல தெளிவான புத்தகங்கள் தற்சமயம் வந்துள்ளன. நாவலர் கோர்ட்டுக்கு சென்றதும் உண்மை, கோர்ட்டில் வள்ளலாரின் பிரகாசம் பார்த்து ஏதும் வாதாடாமல் திரும்பிவந்ததும் உண்மைதான். நாவலரின் இந்த அரிய பண்பை வள்ளலார் சிலாகித்ததாக ஊரன் அடிகளின் புத்தகம் கூறுகிறது.

பெரியோர்கள் என்றும் பெரியோர்களே என்ற விதத்தில் மட்டுமே இந்த விவகாரம் பார்க்கக்கூடியதே தவிர வேறெந்த நோக்கிலும் பார்ப்பதற்கு இதில் ஒன்றுமில்லை என்ற கருத்தை மட்டுமே இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

மற்றபடி அரிய கருத்துகளை எளியவகையில் சொல்லி வ்ருகிறீர்கள்!

அன்புடன்
திவாகர்
srirangammohanarangan 
5/3/10



அன்பருக்கு,
 
என்னுடைய மீள் சிந்தனைகளை முகாந்திரமாக வைத்து நீங்கள் செய்த பிரசங்கமும், பின்னணியாக சிவ அறிவொளியின் திட்டல்களும் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
 
ஆனால் நீங்கள் கூறியிருப்பன சைவ சித்தாந்த சாஸ்திரங்களுக்குச் சற்றும் பொருந்தாதனவாக இருக்கின்றன -- சாத்திரக் கருத்துக்களைப் பொறுத்தவரையில்.
 
வள்ளலார் சம்பந்தப்பட்ட வரையில் ஒன்றிரண்டு கூடுதல் தகவல்கள் என்பதற்கு மேல் உங்கள் எழுத்தில் வேறு பயன் இல்லை.
 
எனவே தாங்கள் மிகவும் சிரமப் பட வேண்டாம். அறிந்தவர்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
 
முயற்சிக்கு மிகவும் நன்றி.
 
***
Hari Krishnan 
5/3/10

2010/5/3 srirangammohanarangan v
அன்பருக்கு,
 

எனவே தாங்கள் மிகவும் சிரமப் பட வேண்டாம். அறிந்தவர்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

தத்வ நாற்பத் தெட்டு நாற்பத் தெட்டு மேவி திடமேவும்
தர்க்க சாத்ர தக்க மார்க்க சத்ய வாக்யப் பெருமாளே

என்பது என்னுடைய அன்றாட வழிபாட்டுக்குப் பயன்படும் திருப்புகழ்.  48ம் 48ம் கூட்டினா 96 என்பது கூடவா தெரியாம போயிடும் எங்களுக்கு?  96 தத்துவங்களை கிருபாநந்த வாரியார் உரை போதுமான அளவுக்கு விளக்கியிருக்கிறது.  

ரொம்ப கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு விளக்க முயல்வதற்கு நன்றி என்று நானும் தெரிவித்துக்கொள்கிறேன்.  கஷ்டப் படாதீங்க.  மத்தவங்க நிறைய பேர் இருக்காங்க.  மடையர்களிடம் போய் உங்களுடைய பொன்னான நேரத்தை வீணடிப்பானேன்....

வாழ்க.  
Madhurabharathi 
5/3/10

t
2010/5/3 Hari Krishnan


2010/5/3 srirangammohanarangan v
அன்பருக்கு,
 

எனவே தாங்கள் மிகவும் சிரமப் பட வேண்டாம். அறிந்தவர்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

தத்வ நாற்பத் தெட்டு நாற்பத் தெட்டு மேவி திடமேவும்
தர்க்க சாத்ர தக்க மார்க்க சத்ய வாக்யப் பெருமாளே

என்பது என்னுடைய அன்றாட வழிபாட்டுக்குப் பயன்படும் திருப்புகழ்.  48ம் 48ம் கூட்டினா 96 என்பது கூடவா தெரியாம போயிடும் எங்களுக்கு?  96 தத்துவங்களை கிருபாநந்த வாரியார் உரை போதுமான அளவுக்கு விளக்கியிருக்கிறது.
 
ரொம்பத்தான் புரிஞ்சுது போங்க. ரெண்டுதடவை சொன்னப்புறம்தான் உங்களால் கவனிக்கவே முடிஞ்சிருக்குது. அப்படியிருக்க புரியுதாமே, புரியுது. ம்க்கூம் :-)
 
அன்புடன்
மதுரபாரதி










No comments:

Post a Comment