Thursday, May 23, 2013

வள்ளலார் - 6




வள்ளலார் - 6

Innamburan S.Soundararajan Thu, May 23, 2013 at 10:54 AM


வள்ளலார் -6
Inline image 1

வள்ளலார் பற்றிய இழையில், திசை மாறியும், வெறும் சர்ச்சையுமாக வந்த இழைகள் சிலவற்றை, இங்கு பதிக்கவில்லை.
மற்றபடி, சில பதிவுகள். ஈற்றடியையும், அதில் கொடுத்துள்ள லின்கையும் நோக்குக.
இழையும் சீக்கிரம் முடிவு பெறும்.

இன்னம்பூரான்
23 05 2013
N. Kannan 
5/4/10


2010/5/4 Nakinam sivam
> நான் முள் மரம் அல்ல மென்மையான ரோஜா செடிதான்
> முள்ளை பார்த்தால் முள் மட்டுமே தெரியும்.

வாடிய பயிரைக் கண்டாலும் வாடும் மனமுடைய ஒரு தமிழனைப் பற்றிப் பேசவரும்
இழையில் இவ்வளவு வாட்டம் ஏன்?
It is important to be sensitive to other's feeling.

நாமெல்லாம் எவ்வளவுதான் செம்மொழிகளில் ஆன்மீகம் பற்றி அடுக்கடுக்கடாய்
காட்டினாலும், நடைமுறை என்று வரும் போது அவரவர் கூடு அவரருடையது என்று
பதுங்கிவிடுகிறோம். நெருங்கினால் பாயத்தொடங்குகிறோம்.

சகல காரணனாய் அவனொருவன்தானே நம்மையெல்லாம் இப்படி ஆட்டுவித்துக்
கொண்டிருக்கிறான். அந்த ஒருமையில் நம்மைக் குவித்தால் கோபத்திற்குப்
பதில் இரக்கம் வரும்.  [என்ன நாகையா என்ற பட்டமும் கூட வரும் :-))]

நான் அடிக்கடி சொல்வது. இது ஏதோ விளையாட்டாக எழுதும் ஒரு களமல்ல இது!
கூரறிவு படைத்தவர்க்கு இதுவொரு பொற்கொல்லன் உலை. ஆண்டாள் சொல்வது போல்
நம் மலங்களை தூசாக்கும் உலை இது. ஆனால் எதுவுமே மேலே படாமல் இலை மேல்
நீர் போல் வந்து போவோர்க்கு ஒரு ஆதாயமும் இங்கில்லை. சும்மா பொழுது
போவதைத் தவிர.

மின்தமிழ் ஒரு ஆன்மீகக் கண்ணாடி. வள்ளலாருக்கு முருகனையும், ஆண்டாளுக்கு
ரங்கனையும் காட்டிய கண்ணாடி...இப்போது இந்த வடிவில் வந்து நிற்கிறது.
‘என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்’ என்று தன்னை இக்கண்ணாடியில்
பார்க்கத்தெரிந்தவர் நிர்மலனாகிறார். கொஞ்சம் எட்டப்பார்வை,
கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு கொஞ்சம் நாள் எடுக்கலாம். ஆனாலும் ஒரு நாள்
ஆத்ம தரிசனம் கிட்டும்!!

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்

மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

இந்த அற்புதமான பாடலைக் கேட்க!
http://www.youtube.com/watch?v=k-IF_VhbiSE&feature=player_embedded

http://www.thamizhisai.com/video/video-002_tamil-cinema/tamil-001_orumaiyudan.php

நா.கண்ணன்
YouTube - Videos from this email
RK.SATHISH KUMAR 
5/4/10



அசைவம் உண்ன வேண்டாம்.பூஜை புணஸ்காரம்,உருவ வழிபாடு பலன் தராது.அப்படி எதையேனும் வணங்க விரும்பினால் ஜோதியை வழிபடு.அன்பு,இரக்கம்,மனிதாபிமானத்தோடு நடந்துகொள்.உணவு பழக்கத்தை முறையாக கடைபிடி.இதுவே அறிவு.-வள்ளலார் வாக்கு.

5/4/10
 
to mintamil
 
அன்பு நண்பர் கண்ணன் அவர்களுக்கு,

மிக்க நன்றி.
நான் சன்மார்க்கம் பயிலும் மாணவனாக தான் இருக்கிறேனே தவிர 
எல்லாம் தெரிந்தவன் என்று எப்போதும் நினைத்தது கிடையாது.
கற்க வேண்டியது இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவோ உள்ளது என்று நினைப்பவன்.
நான் இன்னமும் ஒருமை நிலையினை முழுமையாக அடையவில்லை.
இருப்பினும் அந்த பாதையில்  பயணித்து வருகிறேன்.
சைவ சித்தாந்தத்தின்படி தற்போதம் என்னும் உணர்வு நீங்கினால் மட்டுமே ஒருமை வரும். ஆனால் அந்த ஒருமை நிலை வரும்போது 
இதுபோன்ற எதையும் எழுத முடியுமா என்று தெரியவில்லை.
இந்த உடலையும் உயிரையும் பற்றிய 96 தத்துவங்களும் ஒடுங்கிய நிலையில் மட்டுமே ஒருமை வாய்க்கும்.
அது வரை தான் வேறு மற்றவர் வேறு என்பதுதான் உணர்வாக இருக்கும்.
இல்லை நான் ஒருமை நிலை அடைந்து விட்டேன் என்பது வெறும் பேச்சளவாகவே இருக்கும்.
இருப்பினும் உடனுக்குடன் மற்றவர்கள் படுகின்ற துன்பத்தை உணர முடிவதனால் நமது நிலையை மாற்றிக்கொள்கிறோம்.
ஆகவே யாரையும் நோகடிக்க வேண்டும் என்று என்னவில்லை.
இருப்பினும் மற்றவர்களின் வலி என்ன என்று உணர்த்த வேண்டியே செய்தேன்.
அவர் அதை உணர்ந்து இருப்பின் அவர் பட்ட வலிக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.
அன்புடன்
நக்கினம் சிவம் 

N. Kannan 
5/4/10



> அசைவம் உண்ன வேண்டாம்.பூஜை புணஸ்காரம்,உருவ வழிபாடு பலன் தராது.அப்படி
> எதையேனும் வணங்க விரும்பினால் ஜோதியை வழிபடு.அன்பு,இரக்கம்,மனிதாபிமானத்தோடு
> நடந்துகொள்.உணவு பழக்கத்தை முறையாக கடைபிடி.இதுவே அறிவு.-வள்ளலார் வாக்கு.
>
அருமையாக உள்ளது.

நாசா வேற்று கிரகங்களுக்கு விண்கலம் மூலம் மனிதர்களை அனுப்பும்
ஆய்வுகளைப் பல காலமாக மேற்கொண்டு வருகிறது. விண்கலங்களில் ஆடு, மாடு,
கோழி வளர்க்க முடியாது (பயணம் சில வருடங்களாவது ஆகும்). பயிர்களைத்தான்
வளர்க்க முடியும். எனவே சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களே முதலில் வேற்று
கிரகங்களில் குடியேறுவர்!!


Kamala Devi 
5/4/10


to mintamil
 
”அவர் பட்ட வலிக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்”

சிவம்,
இந்த, வரிகளுக்காக, இந்த  பண்புக்காகவே ,ஞான் நிங்ஙளை வணங்குகிறேன்.
அன்பு கமலம்



Nakinam sivam 



ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிதல்


ஒருமுறை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.அதில் வசித்த தவளை ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு
ஒரு கிணற்றில் விழுந்தது. அந்த கிணற்றிலே வசித்து வந்த தவளை ஒன்று அந்த தவளையை பார்த்து நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டது.அதற்க்கு கடல் தவளை நான் கடலில் இருந்து வருகிறேன் என்று
பதில் கூறியது.
அதற்க்கு கிணற்று தவளை உன்னுடைய கடல் இவ்வளவு தூரம் இருக்குமா என்று கூறி கொண்டு ஒரு முறை எம்பி குதித்து தாண்டியது. அதற்கு கடல் தவளை இல்லை இதை விட பெரியது என்று பதில் கூறியது.அடுத்ததாக கிணற்று தவளை இரண்டு முறை எம்பி தாண்டி குதித்து இவ்வளவு தூரம் இருக்குமா என்று கேட்டது.அதற்கும் கடல் தவளை இதைவிட பெரியது என்று பதில் கூறியது.சரி இந்த கிணற்றில் பாதி தூரம் இருக்குமா உனது கடல் என்று கிணற்று தவளை கூறியது.அதற்கு கடல் தவளை இந்த முழு கிணற்றை விட பல மடங்கு பெரியது கடல்என்று பதில் கூறியது.உடனே கிணற்று தவளைக்கு மிகுந்த கோபம் உண்டாகியதுகடல் தவளையை பார்த்து மூடனே இந்த கிணற்றை விடபெரிய இடம் இந்த உலகத்திலேயே கிடையாது.நீ மிக பெரிய பொய்யன் உடனடியாக இந்த இடத்தை விட்டு ஓடிப் போ
என்று கடல் தவளையை விரட்டி விட்டது.
அது போல்தான் ஞான மார்க்கத்தில்  சிறிது கற்ற உடன் நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று  அந்த கிணற்று தவளையை போல் நமக்கு ஆணவம் வந்து விடுகிறது. ஆனால் கடல் போல் ஞானத்தை தெரிந்து கொள்ள பல விஷயங்கள்  உள்ளன என்றும் கற்க வேண்டிய ஞானம் மிக அதிகம் நாம் கற்றவை
மிகவும் குறைவு என்பதும் நாம் உணர வேண்டும்.

ஆகவே நாம் ஒன்றை மட்டும் தெரிந்து  கொண்டு அதையே பிடித்து கொண்டு  அதுதான் ஞானம் என்று அதற்குள்ளேயே உழன்று கொண்டிருந்தால்ஞானத்தை முழுமையாக அடைய முடியாது.
நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். நல்ல கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு ஆராய்ந்து கற்க வேண்டும்.
நல்ல ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிந்தால் நாம் தூய்மை அடைவதில் எந்த தடையும்  இருக்காது.
இறை அருள் நம்மை வந்து அடையும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு.
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
5/5/10


     இந்த இழையை தொடங்கியபோதும், இது விசனம் தரும் வகையில் பயணிக்கலாம்; மத/சமய/ஆன்மீகக் கோட்பாடுகள், தங்கள், தங்கள் உன்னத நிலைகளிலிருந்து உதறி வீசப்படலாம்; முரணும், மருளும் முருங்கை மரம் ஏறிக்கொள்ளக்கூடும் என்றெல்லாம், நான் கனவிலும் நினைக்கவில்லை. மும்மலங்களின் ஆளுமை ஆட்டிப்படைக்கிறதே என்ற வ்யாஹூலத்தில் தள்ளப்பட்டுள்ளேன். எனவே, நான் தவறு இழைத்தேனோ,இல்லையோ, மின் தமிழ் வாசகர்களிடம், மன்னிப்பு கேட்டுக்கொண்டு, ஹைக்கோர்ட் ஜட்ஜமெண்டை இணைக்கிறேன். மனித இனம் சன்மார்க்கம் நோக்கி 'இரட்க்ஷ்ண்ய யாத்ரீகம்' செய்யமாட்டேன் என்று முரண்டு பிடிப்பதற்கு மூன்று வழக்குகள் சான்று. முதல் வழக்கு ஆறாம் திருமுறை வரும் முன். இரண்டாவது வள்ளலாரின் காலத்திற்கு பிறகு, திரு. நா.கதிர்வேற்பிள்ளை அவர்களால் எழுந்தது. அது இல்லாதிருந்தால், திரு.வி.க. அவர்கள் தமிழ்த்தாத்தாவிற்கு பிறகு, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியார் ஆகி இருந்திருக்கலாம். விதி யாரை விட்டது? சிவப்பழமாக இருந்த அவர் சன்மார்க்கம் நோக்கிப் பயணித்தற்கு சான்றாக, பல ஆதாரங்கள், திருமதி.சுபாஷிணியின் ஆர்வத்தினால், தமிழ் மரபு அறக்கட்டளையின் சேமிப்புகளில் உள்ளன. அதையெல்லாம் கண்ணெடுத்துப் பார்க்கமாட்டோம். இருக்கும் விடையை புறக்கணித்து, வினா எழுப்பிவிட்டு விலகிடுவோம் என்றால், இந்த தீர்ப்பை இணைத்தும் பயனில்லை. ஒரே ஒரு உரிமை எடுத்துக்கொள்கிறேன். திரு. நக்கினம் சிவன் அவர்களின் 'கிணற்றுத்தவளை' கேலியை நான் ரசிக்கவில்லை.
     
    இருந்தும், நீதியரசர் சந்துரு அவர்கள் தனது நேர்மைக்கும், வாய்மைக்கும், நடுநிலைமைக்கும், ஆழ்ந்த சிந்தனைக்கும், பன்முக படிப்பறிவுக்கும் புகழ் பெற்றவர், வழக்கறிஞராக இருந்த போதே. மின் தமிழர் ஒருவருக்காவது அந்த தீர்ப்பை படிக்கவேண்டும் தோன்றவில்லை என்பது எனக்கு வருத்தம் அளித்தது. அது 31 பக்கம் இருப்பதால், எனக்கு தோன்றிய படி, சில வாக்கியங்களை ஹைலைட் செய்து இணைத்துள்ளேன். பொறுப்பு எனது.

நன்றி, வணக்கம்,

இன்னம்பூரான்
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS.docIN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS.doc
128K   View   Download  

No comments:

Post a Comment