Tuesday, July 23, 2013

ஶ்ரீல ஶ்ரீ. ஆறுமுக நாவலர்:அன்றொரு நாள்:ஜூலை 13




அன்றொரு நாள்:ஜூலை 13

அப்டேட்: திசை மாறுவதில்லை. அதை மாற்றுபவர்களின் மாயமது.
சித்திரத்துக்கு நன்றி: http://www.heritagewiki.org/images/7/72/Navalar.jpg

இன்னம்பூரான்
24 07 2013
Innamburan Innamburan Tue, Jul 12, 2011 at 9:07 PM



அன்றொரு நாள்:ஜூலை 13

     கல்வி அறிவை வளர்க்கும். என்ன புதிசா மஹாவாக்யம் சொல்லிவிட்டீர்கள், புல்லட்டீன் போர்டில் போடுவதற்கு? ஒரு தாரதம்யம் வேண்டாம்? என்றெல்லாம் எள்ளி நகையாடுகிறீர்களா? அது உங்கள் உரிமை. எனினும், யான் சொல்லத்துணிவது யாதெனில், ‘கல்வி அறிவை வளர்க்கும்.’ என்று ஏகோபித்த அபிப்ராயமாக பகர்ந்துவிட்டு, கல்வியை மட்டம் தட்டுவதில் -அதாவது, அதை வளரவிடாமல், ‘மொழி வெறி’ என்ற த்வம்சுக்கட்டையால் மட்டம் தட்டி, மார் தட்டிக்கொள்கிறார்களே சமூக மார்க்கபந்துக்கள், அது நல்லது அன்று, என்பதே.
சான்றாக, இன்றைய தேதியில், 1869 நடந்த நிகழ்வு ஒன்று.
     அவர் ஒரு சிவப்பழம். ஆசாரசீலர். சைவ சமய/ தத்துவ விசாரனையிலும், போதனையிலும், சைவ சம்பிரதாயங்களை கண்ணின் மணியென  போற்றியவருமான அந்த சான்றோனின் தமிழ்பற்று, தமிழறிவு, தமிழ் ஞானம், தமிழ் படைப்பாற்றல்  கரை கடந்தது. மூலநூல்களை பரிசோதித்து, ஒப்புமை ஆராய்ந்து, களையெடுத்து, பதிப்பாசிரியாக பேரும், புகழும் படைத்த அன்னாரின் மாணவர் ஶ்ரீல ஶ்ரீ.நா. கதிரைவேற்பிள்ளை அவர்களும், அவரது சீடரும், என்னுடைய மானசீக குருநாதருமான தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களும், அன்னாரின் வழியை பின்பற்றியதும், நம் கொடுப்பினை. பேசப்படுவது, ஶ்ரீல ஶ்ரீ. ஆறுமுக நாவலர் (18 12 1822 - 05 12 1879) என்பது வெளிப்படை. அவரை பற்றி முழு விவரமும் அறிய, நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிவு செய்துள்ள கட்டுரையை சுட்டியிருக்கிறேன். அந்த கலோனிய காலத்து கட்டாயங்கள், வழக்கங்கள், நடைமுறைகளை புரிந்து கொண்டால், நாவலரின் விவிலிய மொழிபெயர்ப்பு பற்றியும், அவரது ‘சைவதூஷணபரிகாரம்’ போன்ற நூல்களின் தாக்கமும் புரிந்து கொள்வது எளிது. அவரது ‘போலியருட்பா மறுப்பு‘ என்ற நூலை பற்றி பேசும் இடமிது இல்லை.  நான் சொல்ல வருவது நான்கு விஷயங்கள், ‘கல்வி அறிவை வளர்க்கும்.’ என்றுணர்ந்து ்ஶ்ரீல ஶ்ரீ. ஆறுமுக நாவலர் அவர்கள் இயங்கிய விதம்:
  1. அவரது 60 நூல்களில் பாலபாடம் என்ற நான்கு தொகுப்புக்கள் நம்மை வியக்கவைக்கின்றன, எளிமையான, பளிங்கு நீர் போன்ற திண்ணைப்பள்ளிக்கூட தமிழ். சமச்சீர் கல்வி சர்ச்சையாளர்களே. சற்றே, அவற்றை பார்க்கவாவது பாருங்கள்.
  2. ஶ்ரீல ஶ்ரீ. ஆறுமுக நாவலர் அவர்கள்  பல சமயங்களில் சொந்தச்செலவில் பள்ளிகள் நடத்தியிருக்கிறார். யாசகம் வாங்கத்தயங்கவில்லை.
  3. தமிழில் நிறுத்தக் குறியீடுகளை, ஆங்கில முறையைப் பின்பற்றி, இடமறிந்து முதன்முதலில் பயன்படுத்தியவர் இவரே என்று சொல்லப்படுகிறது.
  4. 13 07 1869: வண்ணார் பண்ணையில் ஒரு ஆங்கிலேயர் நடத்திய ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் வீபுதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை நிறுவி நடத்தினார். ( ஒரு இடத்தில், இது நடந்தது 1872 தை மாதம் என்ரும் குறிப்பும் உள்ளது.) எந்த தேதியாக இருந்தாலும், நாவலர் அவர்கள் ஆங்கிலப்பாடசாலை நிறுவியதின் நோக்கத்தை, தீர்க்க தரிசனத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

ஆங்கில ஒழிப்பு, ஹிந்தி எதிர்ப்பு, தெலுங்கை பரிஹசிப்பது, மலையாளத்தை குறை கூறுவது, கன்னடதை உடைப்பது என்று பேச்சுப்படினின்...

எதற்கும், சிந்தனைக்கு ஒரு கருத்து:

“எந்த எல்லை வரை நாம் சமூகத்தின் விதிகளை பின்பற்றவேண்டும்? அதாவது, ‘ஊருடன் ஒத்து வாழ்வது’ எப்போது ஒவ்வாத செயல் ஆகி விடுகிறது? இதற்கு விடை காணும் போது தான், மனசாட்சி வாய்மையுடன் இயங்குகிறது.”
கென்னெத் டைனன், விமரிசகர் & எழுத்தாளர் (1927 -1980)
இன்னம்பூரான்
13 07 2011
pastedGraphic.pdf


உசாத்துணை:
http://ta.wikipedia.org/wiki/றுமுக_நாவலர்



Geetha Sambasivam Wed, Jul 13, 2011 at 3:06 AM


எல்லாம் மொழியை வைத்துப் பிழைக்க வந்தவர்கள் செய்த கூத்து. ஆங்கிலேயன் வியாபாரம் செய்ய வந்து விட்டுக் கலாசாரத்தையும், மதத்தையும் மாற்றினான் என்றால் இங்கே உள்ளூர்க்காரங்க வேறே விதமாய்! :((((( இதைக் குறித்து எழுதினால் எழுதித் தள்ளலாம்.  வேறு மொழிகளைக் கற்றால் என்ன தப்பு?? புரியலை!

இதைச் சாக்காக வைத்தே ஹிந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இன்று வரை நவோதயா பள்ளிகளை வரவிடவில்லை.  இதனால் நஷ்டம் அடைவது கிராமங்களில் மிகக் கஷ்டப்பட்டு ஆற்றையும், ஏரியையும், காட்டையும், மேட்டையும் கடந்து சென்று படிக்கும்/ அல்லது படிக்க முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் குப்பனும், சுப்பனும்.  அரசியல் வியாதிகள் அல்ல.






seshadri sridharan Wed, Jul 13, 2011 at 3:29 AM


எல்லாம் மொழியை வைத்துப் பிழைக்க வந்தவர்கள் செய்த கூத்து. ஆங்கிலேயன் வியாபாரம் செய்ய வந்து விட்டுக் கலாசாரத்தையும், மதத்தையும் மாற்றினான் என்றால் இங்கே உள்ளூர்க்காரங்க வேறே விதமாய்! :((((( இதைக் குறித்து எழுதினால் எழுதித் தள்ளலாம்.  வேறு மொழிகளைக் கற்றால் என்ன தப்பு?? புரியலை!
கட்டாயத்தின் பெயரில் பிற மொழிகளை அரசோ அல்லது ஒரு அமைப்போ கற்கச் சொல்லக் கூடாது. தமிழகத்தில், சென்னையில், RSS  ஏற்பாட்டால் இயங்கும் விவேகானந்தா கல்வி நிறுவனப் பள்ளிகளில் இந்தியுடன் சமற்கிருதமும் ஒரு கட்டாயப் பாடம். இது எதற்கு இதனால் மாணவர் நேரம் வேறு மொழியை கற்பதில்  வீணாகிறது, தனிக் கல்விக்கு (Tution) தண்டமாக பணச் செலவு வேறு.
இதைச் சாக்காக வைத்தே ஹிந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இன்று வரை நவோதயா பள்ளிகளை வரவிடவில்லை.  இதனால் நஷ்டம் அடைவது கிராமங்களில் மிகக் கஷ்டப்பட்டு ஆற்றையும், ஏரியையும், காட்டையும், மேட்டையும் கடந்து சென்று படிக்கும்/ அல்லது படிக்க முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் குப்பனும், சுப்பனும்.  அரசியல் வியாதிகள் அல்ல. 

நவோதயா பள்ளிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே இந்திக் கல்வியை ஊக்கத் தான் என்பது அதன் படத் திட்டத்தால் புரியும். ஏழைகள் படிக்க வேண்டும் என உருவாக்கப்பட்டதல்ல. இது அரசியல் வியாதிகளின் சதி.
  
    சேசாத்திரி



2011/7/13 Innamburan Innamburan 

.

    ஆங்கில ஒழிப்பு, ஹிந்தி எதிர்ப்பு, தெலுங்கை பரிஹசிப்பது, மலையாளத்தை குறை கூறுவது, கன்னடதை உடைப்பது என்று பேச்சுப்படினின்...

    எதற்கும், சிந்தனைக்கு ஒரு கருத்து:

    “எந்த எல்லை வரை நாம் சமூகத்தின் விதிகளை பின்பற்றவேண்டும்? அதாவது, ‘ஊருடன் ஒத்து வாழ்வது’ எப்போது ஒவ்வாத செயல் ஆகி விடுகிறது? இதற்கு விடை காணும் போது தான், மனசாட்சி வாய்மையுடன் இயங்குகிறது.”
    கென்னெத் டைனன், விமரிசகர் & எழுத்தாளர் (1927 -1980)
    இன்னம்பூரான்
    13 07 2011
    pastedGraphic.pdf


    உசாத்துணை:
    http://ta.wikipedia.org/wiki/றுமுக_நாவலர்



    LK Wed, Jul 13, 2011 at 4:41 AM


    /நவோதயா பள்ளிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே இந்திக் கல்வியை ஊக்கத் தான் என்பது அதன் படத் திட்டத்தால் புரியும். ஏழைகள் படிக்க வேண்டும் என உருவாக்கப்பட்டதல்ல. இது அரசியல் வியாதிகளின் சதி.//

    நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டது குறைந்த செலவில் தரமானக் கல்வியைத் தர.  இந்திக் கல்வியை ஊக்குவிக்க அல்ல. இன்றும் கேந்திர வித்யாலயாவில் கல்விக் கட்டணம் குறைவு . இது தெரியுமா உங்களுக்கு,

    இப்படி எல்லாவற்றையும் சதி சதி என்று உங்களை புலம்பவைததுதான் தமிழக அரசியல் வியாதிகளின் சதி 


    --
    Thanks and Regards
    Karthik L

    Geetha Sambasivam Wed, Jul 13, 2011 at 5:34 AM


    நவோதயா பள்ளிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே இந்திக் கல்வியை ஊக்கத் தான் என்பது அதன் படத் திட்டத்தால் புரியும். ஏழைகள் படிக்க வேண்டும் என உருவாக்கப்பட்டதல்ல. இது அரசியல் வியாதிகளின் சதி.

    சேஷாத்ரி, இந்திக்கல்வியை ஊக்குவிக்காத அரசுகளின் தொலைக்காட்சி சானல்களின் இயக்குநர்கள் தனித்தமிழர்கள் இல்லையா?? சரத்குமார் ரெட்டி, ஹன்ஸ்ராஜ் சக்சேனா. இது போல் இன்னும் எத்தனை உதாரணம் வேண்டும்????? அவர்களின் சினிமா கம்பெனிகளின் பெயர்கள் தெரியும் இல்லையா??? கொஞ்சமாவது நியாயமாய்ச் சொல்லுங்கள்.  ஏற்கும்படியாய்ச் சொல்லுங்கள். சட்டமன்றக் கட்டிடம் ஓமந்தூரார் அரசினர் மாளிகையில் கட்டியது முழுக்கவும் தனித்தமிழர்கள், இல்லையா??
    [Quoted text hidden]

    seshadri sridharan Wed, Jul 13, 2011 at 8:46 AM


    ஐயா கார்த்திக்,
    நவோதயா பள்ளிகளில் இந்தி வழிக் கல்வி என்பது எதைக் காட்டுகிறது இந்தித் திணிப்பை.  மாணவர்க்கு குறைந்த செலவாக இருக்கலாம் ஆனால் ஒரு மாணவர்க்கு அரசு செலவிடும தொகை என்ன என்று அறிந்து கொண்டால் இவ்வளவு செலவில் இப்படி ஒரு கல்வி வழங்குவது எதன் பொருட்டு என்பது விளங்கும்
    சேசாத்திரி


    seshadri sridharan Wed, Jul 13, 2011 at 8:55 AM



    சேஷாத்ரி, இந்திக்கல்வியை ஊக்குவிக்காத அரசுகளின் தொலைக்காட்சி சானல்களின் இயக்குநர்கள் தனித்தமிழர்கள் இல்லையா?? சரத்குமார் ரெட்டி, ஹன்ஸ்ராஜ் சக்சேனா. இது போல் இன்னும் எத்தனை உதாரணம் வேண்டும்????? அவர்களின் சினிமா கம்பெனிகளின் பெயர்கள் தெரியும் இல்லையா??? கொஞ்சமாவது நியாயமாய்ச் சொல்லுங்கள்.  ஏற்கும்படியாய்ச் சொல்லுங்கள். சட்டமன்றக் கட்டிடம் ஓமந்தூரார் அரசினர் மாளிகையில் கட்டியது முழுக்கவும் தனித்தமிழர்கள், இல்லையா??
    அம்மணி, கல்வி மக்கள்  படிப்பது. தொலைக்காட்சி  முதலாளிகளாக உள்ள அரசியலாளரால் இயக்கப்படுவது. இரண்டையும் ஒன்றாகப் பார்த்து  குழப்பிக் கொள்வது ஏனோ? சரத்குமார் ரெட்டியால் செமினி, தேஜா தொ.கா வருவாய் வரவில்லையா?  முதலாளிகளுக்கு  யாரால் இலாபம கிட்டுமோ அவரை அமர்த்துவர்.  கல்வி அப்படியா?

    சேசாத்திரி


    Geetha Sambasivam Wed, Jul 13, 2011 at 9:46 AM


    அப்படி வாருங்கள், இன்று கல்வி மூலம் வருவாய் ஈட்டும் எத்தனை அரசியல் வியாதிகளின் பெயர் உங்களுக்குத் தேவை?? நான் சொல்ல வேண்டியதில்லை.  செய்திகளை முறையாகப்பரப்ப வேண்டிய ஊடகங்களில் இருந்து எல்லாவற்றிலும் வியாபார நோக்குத் தான், தங்கள் வியாபாரத் தேவைக்கு, பொருள் ஈட்டுவதற்கு அவர்கள் வடமாநிலமா, வடவரா, தென்னவரா என்று பார்க்க மாட்டோம், யாரால் லாபமோ அவர்கள் தேவை வடவராகவே இருந்தாலும்.  அப்போது நாங்கள் ஆரியர், திராவிடர் என்றா வேறுபாட்டைக் களைந்துவிடுவோம்.  ஆனால் கல்வி கற்பது என்றால் ஆரியர், திராவிடர் என்று பாகுபாடு பார்ப்போம்;  அது தானே நீங்கள் சொல்வது?

    ஆனால் நம்முடைய தேவைக்கு நம் கல்விக்கு என மற்றொரு மொழியைக் கற்க நம் பிள்ளைகளை விடமாட்டோம்.  இது என்ன நியாயம்?? ஏற்கெனவே தமிழில் படித்துவிட்டு வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் திண்டாடும் தமிழர்கள் இப்படி வடமாநிலத்தவர்கள் பெரிய பெரிய கம்பெனிகளில் பெரிய பெரிய பொறுப்புக்களை ஏந்திப் பெரிய மனிதர்களாக விட்டுக் கொடுத்துவிட்டுத் தமிழை மட்டும் படித்துவிட்டுத் தமிழ் நாட்டிலேயே இலவசத் தொலைக்காட்சியில் மானாடிக்கொண்டு, மயிலாடிக்கொண்டு, இலவச அரிசியை இலவச எரிவாயுவில் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, டாஸ்மாக்கில் மூழ்கிக் கிடக்க வேண்டும்.   இன்று அது தான் நடந்து வருகிறது.

    எந்த வேலைகளுக்குப் போனாலும் இன்று தமிழ்நாட்டில் பிஹார், மேற்கு வங்காளம், ஒரிசா மாநிலத்தவர்கள் தான்.  திராவிடர்கள் கட்டும் கட்டிடங்களைக் கட்டியதும் வெளி மாநிலத்தவர்கள் தான்.  தமிழ்ப்பற்றை நம் நாட்டுத் தமிழரிடம் காட்ட வேண்டுமானால் இங்கேயல்லவோ தகுதியான ஆட்களைத் தேடிப் பிடிக்க வேண்டும்? சந்தர்ப்பவாதி என்பதை நன்கு காட்டிவிட்டீர்கள். 

    [Quoted text hidden]

    Innamburan Innamburan Wed, Jul 13, 2011 at 10:15 AM

    To: mintamil@googlegroups.com
    Bcc: innamburan88
    போடு! போடு! அப்டிப்போடு! நான் சொல்லலை. ஆறுமுகநாவலர் சொல்றார்!
    நன்றி, வணக்கம்.


    இன்னம்பூரான்




    LK Wed, Jul 13, 2011 at 12:31 PM

    Reply-To: mintamil@googlegroups.com
    To: mintamil@googlegroups.com
    //வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் திண்டாடும் தமிழர்கள் இப்படி வடமாநிலத்தவர்கள் பெரிய பெரிய கம்பெனிகளில் பெரிய பெரிய பொறுப்புக்களை ஏந்திப் பெரிய மனிதர்களாக விட்டுக் கொடுத்துவிட்டுத் //

    உண்மை உண்மை உண்மை. 

    [Quoted text hidden]
    Thanks and Regards
    Karthik L

    No comments:

    Post a Comment