Thursday, November 14, 2013

சாது மிரண்டால்...!அன்றொரு நாள்: நவம்பர் 15


அன்றொரு நாள்: நவம்பர் 15 சாது மிரண்டால்...!
6 messages

Innamburan Innamburan 15 November 2011 17:25

அன்றொரு நாள்: நவம்பர் 15
சாது மிரண்டால்...!

~ ‘இரண்டு மிலியன் மக்கள் கூடி’ என்ற கூவலுடன்,கையோடு கையாக, அதை பாதியாக குறைத்து  ஒரு மிலியன் மக்கள் மட்டுமே(!),என்று கூறி,  வாஷிங்க்டனில் அதிபர் ஒபாமாவின் மக்கள் மருத்துவ மசோதாவை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ததாக, லண்டன் டெய்லி மெயிலில், 12 09 2011 செய்தி. எது நிஜமோ? யார் எதற்குப் பிணை?
~ கூடங்குளத்தில் எதிர்ப்பவர்கள் ஒரு கூலிப்பட்டாளமோ என்ற ஐயம், ஒரு மத்திய அமைச்சருக்கு! 
நவம்பர் 6, 1913 அன்று காலை 6:30 மணிக்கு, 57 குழந்தைகளும், 127 பெண்களும், 2,037 ஆண்களும் பின் தொடர, எல்லை கடந்து, சட்டத்தையே மாற்றியமைத்தார், அண்ணல் காந்தி, தென்னாஃப்பிரிக்காவில். ரெளலட் சட்டத்தை எதிர்த்து நாட்டையே ஒன்று திரட்டினார், அவர். 
~ அன்னா ஹஜாரேயின் எதிர்ப்பு அரசை ஆட்டிப்படைக்கிறது. உள்குத்து வலிக்கிறது. 
~ மார்ட்டின் லூதர் கிங் தன் கனவை காந்தீயமுறையில் நனவாக்கினார். 
~ லண்டன் ஹைட் பார்க்கில் யார் வேண்டுமானாலும் எதை பற்றி வேண்டுமானாலும் கையையும் காலையும் ஆட்டி, வாயாடலாம். 
~ இத்தனை பீடிகை, நவம்பர் 15, 1969 அன்று வாஷிங்டனில் வியட்நாம் போரை எதிர்த்து நடந்த மக்களின்  ஆரவாரத்தின் படிப்பினையை புரிந்து கொள்ள:

வியட்நாமிலிருந்து அமெரிக்க வீரர்களை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று ஒரு மாபெரும் மக்கள் எதிர்ப்பு, அமைதியாக, நடந்தது. 250 ஆயிரம் மக்கள் அதில் கலந்து கொண்டதாக,ஜெர்ரி வில்சன் என்ற உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். விமானத்திலிருந்து எடுத்தப் புகைப்படங்கள் மூலமாக அது 300 ஆயிரம் என்று ஊகிக்கப்பட்டது. 500 ஆயிரம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இன்று ஏதோ பெரிய கார்மேகமொன்று இறங்கி வந்தாற்போல், ஒரு மாபெரும் அமைதி பட்டாளம் வந்து இறங்கியது, வாஷிங்டனில். முக்கிய ராஜபாட்டைகளில், ஒரு மனிதக்கடல் ஊர்ந்து சென்றது. அதன் குறிக்கோள்: அதிபர் நிக்சனின் வியட்நாம் அன்னநடை போக்கை கண்டிப்பது. விரைவில் அமெரிக்க வீரர்கள் திரும்பவேண்டும் என்ற கோரிக்கை. அவர்களின் தலைவரான மினசாடோ செனேட்டர் யூஜின்.ஜே. மக்கார்த்தி அவர்களின் சொற்பொழிவின் சாரம், 

“...வரலாறு தெளிவாக கூறுவது யாதெனில்: பழங்காலமோ, தற்காலமோ, மக்களின் நம்பிக்கையை, சுய ஆதாயத்துக்காகவோ அல்லது தவறான அணுமுறையினாலோயோ, பலிகடா செய்த அரசியலர்கள், மக்களுக்கு தீமை விளைவித்தவர்கள் என்க. மக்களின் நம்பிக்கையயும் நன்றியையும் வைத்துக்கொண்டு, ரோமானிய சீசர் சக்ரவர்த்திகள் போருக்கு சென்றார்கள். அம்மாதிரியே மக்களின் ஆதரவை பணயம் வைத்து நெப்போலியன் செய்யாதன செய்தான். இவை எல்லாம் அமெரிக்காவுக்குப் பாடம்...”.
பெரும்பாலும் மாணவர்களே. கறுப்பினம்/இடது சாரி அதிகமாக தென்படவில்லை. கிட்டத்தட்ட 100 இயக்கங்கள் கலந்து கொண்டன. சமாதானம் நாடும் கோஷங்கள் எழுந்தன. அங்குமிங்குமாக போலீஸ் அதிகப்படி என்றாலும், கூட்டத்தின் கட்டுப்பாடு, அவர்களால், தமக்குள், நியமிக்கப்பட்ட வாலண்டியர்களிடம். அவர்கள் கறார். ராணுவம் தலை காட்டவில்லை. போலீஸ் போக்குவரத்து ஒழுங்குமுறையுடன் சரி. “ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, தந்திரம் செய்யும் டிக்கி, போரை நிறுத்து.” என்ற கோஷம் அதிகமாகக் கேட்கப்பட்டது. ஆகஸ்ட் 28, 1963 அன்று 200 ஆயிரம் மக்கள் கூடி மார்ட்டின் லூதர் கிங்க் அவர்களின் சொற்பொழிவை கேட்கக்கூடியது நினைவில் வந்தது. ரிபப்ளிகன் செனெட்டர் சார்லஸ்.இ. குடெல் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.சில சிறிய தீவிர எதிர்ப்பாளர்கள் குழுக்கள் மாலையில் அமெரிக்க தேசியக்கொடியை எரித்தனர். சில்லறை விஷமம் செய்தனர். புகை வாயு வீசப்பட்டது. சிலர் கைதாயினர். மாலை 8 மணிக்கு அவர்கள் கலைய ஆரம்பித்தனர். இரவு 11 மணிக்கு சகஜ நிலை திரும்பியது. மூவாயிரம் இளைஞர்களுக்கு போக்குவரத்து வசதி கிடைக்காததால், முனிசிபாலிட்டியே அவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது.
~~~~~~இதில் நமக்கு என்ன பாடம் இருக்கிறது?
இன்னம்பூரான்
Washington+War+Moratorium+1969.jpg

உசாத்துணை:
12 Sep 2009 – Demonstrators hold up banners on Capitol Hill in Washington on Saturday. 'I will not waste time with those who think that it's just good politics ... 

Thevan 15 November 2011 19:01


அரசாங்கங்கள் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.
௧௫ நவம்பர், ௨௦௧௧ ௧௦:௫௫ பிற்பகல் அன்று, 


செல்வன் 15 November 2011 23:43



2011/11/15 Innamburan Innamburan <innamburan@gmail.com>
வியட்நாமிலிருந்து அமெரிக்க வீரர்களை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று ஒரு மாபெரும் மக்கள் எதிர்ப்பு, அமைதியாக, நடந்தது. 250 ஆயிரம் மக்கள் அதில் கலந்து கொண்டதாக,ஜெர்ரி வில்சன் என்ற உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். விமானத்திலிருந்து எடுத்தப் புகைப்படங்கள் மூலமாக அது 300 ஆயிரம் என்று ஊகிக்கப்பட்டது. 500 ஆயிரம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இன்று ஏதோ பெரிய கார்மேகமொன்று இறங்கி வந்தாற்போல், ஒரு மாபெரும் அமைதி பட்டாளம் வந்து இறங்கியது, வாஷிங்டனில். முக்கிய ராஜபாட்டைகளில், ஒரு மனிதக்கடல் ஊர்ந்து சென்றது. அதன் குறிக்கோள்: அதிபர் நிக்சனின் வியட்நாம் அன்னநடை போக்கை கண்டிப்பது. விரைவில் அமெரிக்க வீரர்கள் திரும்பவேண்டும் என்ற கோரிக்கை.


இந்த கோமாளிகள் இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஊர்வலம் போயிருந்தால் இன்னும் ஐரோப்பா ஹிட்லரின் பிடியில் இருந்திருக்கும்.

லிப்ரல்களின் துரோகம் மட்டும் இல்லையெனில் கம்யூனிசத்தை இன்னும் பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பே வீழ்த்தி இருக்க இயலும். ஆனால் லிபரல்களால் நாட்டின் முன்னேற்றத்தை தாமதிக்க முடியுமே ஒழிய தடுத்து நிறுத்த இயலாது.

இப்போது லிபரல் ஜோக்கர்களின் கனவு புராஜக்டான யூரோ குப்புற கவிழ்ந்து கிடக்கிறது.சோஷலிச கட்சி ஆளும் கிரேக்கம் பணால் ஆகிவிட்டது. இன்று நியூயார்க் டைம்ஸில் பால் க்ருக்மன் இத்தாலி அவுட்டனால் யூரோவும் அவுட் என புலம்பி தள்ளி இருக்கிறார்.
--
செல்வன்

Innamburan Innamburan 16 November 2011 08:58
To: mintamil@googlegroups.com
இந்த கோமாளிகள் இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஊர்வலம் போயிருந்தால்....

~ கனவலைகள் மோதுகின்றன. அப்பாவுக்கு சாமுவேல் தேவசகாயம்னு ஜிக்ரி தோஸ்த். நேரே கிட்சன்லெ வந்து ஃபில்டர் காபி கேப்பார். அவர் வீட்டுக்குப்போனா சுவை மிகுந்த கேக் கிடைக்கும். தோட்டத்திலெ கொடுக்காப்புளி பறிச்சுக்கோன்னு துரட்டி கொண்டு வந்து கொடுப்பார். ஆனா பாருங்கோ! அவர் கிட்ட என்ன பேச்சுக் கொடுத்தாலும் ~ நேருவும் சீனாவும், காந்தியும் திருவள்ளுவரும், சுருட்டில்லா சர்ச்சில், தொல்காப்பியமும் நாமக்கல் கவிஞரும், எப்படி வாணாப்பேசிப்பாருங்கோ, சுவிசேஷத்தவப்புதல்வரான, சாமுவேல் தேவசகாயம் மாமா, ‘கர்த்தர் என்ன சொல்றார்னா’, பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே, இந்த சிவபிரான் படுத்துவதை பாரும்’, ‘விவிலியத்திலிருந்து ஒரு பகுதி தாண்டா, இந்த திவ்யபிரபந்தம்’ என்று விட்டு விளாசுவார்.
 அந்த மாதிரி...
இன்னம்பூரான்
16 11 2011 



செல்வன் 16 November 2011 14:24



2011/11/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
~ கனவலைகள் மோதுகின்றன. அப்பாவுக்கு சாமுவேல் தேவசகாயம்னு ஜிக்ரி தோஸ்த். நேரே கிட்சன்லெ வந்து ஃபில்டர் காபி கேப்பார். அவர் வீட்டுக்குப்போனா சுவை மிகுந்த கேக் கிடைக்கும். தோட்டத்திலெ கொடுக்காப்புளி பறிச்சுக்கோன்னு துரட்டி கொண்டு வந்து கொடுப்பார். ஆனா பாருங்கோ! அவர் கிட்ட என்ன பேச்சுக் கொடுத்தாலும் ~ நேருவும் சீனாவும், காந்தியும் திருவள்ளுவரும், சுருட்டில்லா சர்ச்சில், தொல்காப்பியமும் நாமக்கல் கவிஞரும், எப்படி வாணாப்பேசிப்பாருங்கோ, சுவிசேஷத்தவப்புதல்வரான, சாமுவேல் தேவசகாயம் மாமா, ‘கர்த்தர் என்ன சொல்றார்னா’, பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே, இந்த சிவபிரான் படுத்துவதை பாரும்’, ‘விவிலியத்திலிருந்து ஒரு பகுதி தாண்டா, இந்த திவ்யபிரபந்தம்’ என்று விட்டு விளாசுவார்.
 அந்த மாதிரி...


அந்த மாதிரி தோழர்கள் அனைத்தையும் கம்யூனிச கண்னாடி மூலமே பார்த்து ஆதரித்தும், எதிர்த்தும் வந்ததால் அவர்கள் செய்ததை மாத்திரம் இங்கே விளக்க அதே கம்யூனிச கண்னாடி தேவைபடுகிறது.

வியட்னாம் போரை விட மோசமான உலகபோரில் அமெரிக்கா இறங்கியது.அதை உலகெங்கும் இடதுசாரிகள் ஆதரித்தனர்.காரணம் அவர்களின் அபிமான சோவியத்யூனியன் காக்கபடவேண்டும் என்ர எண்ணத்தில். இந்தியாவில் சோவியத்யூனியன் மேல் ஹிட்லர் படை எடுக்கும்வரை "இந்தியா போரில் இறங்ககூடாது" என போராடி வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி சோவியத்யூனியன் மேல் ஹிட்லர் படை எடுத்தவுடன் பல்டி அடித்து "இந்தியா உலகயுத்தத்தில் இறங்கவேண்டும்" என்றது.இதே வியட்னாம் என்றதும் "போரை எதிர்க்கிறோம்" என பிளேட் திருப்பி போடபட்டது.

[Quoted text hidden]

Innamburan Innamburan 16 November 2011 16:35

வியட்னாம் போரை விட மோசமான உலகபோரில் அமெரிக்கா இறங்கியது......
~ சாமுவேல் மாமா கிட்ட சொன்னேன். விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 19 - "திருப்பாடல்கள்" அதிகாரம் 2: திருப்பாட்டு 1 படிக்கச்சொன்னார்.
இன்னம்பூரான்

2011/11/16 செல்வன் <holyape@gmail.com>


20

No comments:

Post a Comment