Friday, June 6, 2014

சிரிச்சு மாளலெ 2

சிரிச்சு மாளலெ 2



இன்னம்பூரான்
ஜூன் 6, 2014

‘குப்புற விழுந்தாலும் மீசையிலெ மண் ஒட்லை’ங்கிறதெல்லாம் பத்தாம் பசலி. அதான் சாமி கரடி வித்தைங்கிறது கூட அலுத்துப்போச்சு. ‘கண்டேனே! கண்டேனே!ஒண்ணுக்கும் இரண்டுக்கும் நுட்பமான வித்தியாசம் கண்டேனே!’ என்பது தான் தற்கால காங்கிரஸ் வித்தை.
மோடி 1.0. & மோடி 2.0. என்று தரம் பிரித்து, ‘மோடி 2.0.‘க்கு ஏறுமுகம் என்று யான் உரைத்தது, மோடி 1.0. ஐ இறக்கியது அல்லவோ! என்று ஶ்ரீமான் சசி தரூர் கட்சி தலைமையின் அறிவிப்புத்துறையிடம் சால்ஜாப்பு சமர்ப்பிவித்திருக்கிறார். இதற்கு முன்னரே, மணி சங்கர அய்யர் என்ற ராஜீவ் காந்தி காலத்து காங்கிரஸ்காரர், சசிக்கு இருந்த மூளை எங்கே போச்சு? என்று கேட்டு சசிக்கு உபத்ரவம் கொடுத்தார். குலை நடுங்கிப்போன சசியின் விவரமான விளக்கம்: ‘நான் காங்கிரஸ் கட்சியின் உபாசகர்; அதனுடைய சமய சார்பின்மையின் பக்தன். நான் கொஞ்சம் மோடியை ஆட்டிப்படைக்க வழி செய்தேன்; அவ்ளவு தான். மோடி 2.0. க்கு புகழ்மாலை சூடினால், மோடி 1.0. மாட்டிக்கிடுவார். அவருக்கு இடுக்கு பிடி போட வழி செய்தேன் என்றார். 

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா ? உஷ்! காந்தி மஹான் இருந்த கட்சி. இப்டியெல்லாம் எள்ளலாமோ?!


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment