Saturday, September 13, 2014

என்னத்தைச் சொல்ல ! ~4


என்னத்தைச் சொல்ல! – 4
  1. Friday, September 12, 2014, 5:38

–இன்னம்பூரான்.
பிரசுரம்: http://www.vallamai.com/?p=50443



ைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில்  (10.09.2014) கல்லையும் கரைக்கும் உருக்கமான நிகழ்வு பற்றிய செய்தி: கும்முடிப்பூண்டி பகுதியில் மழை பெய்து தெருவில் நீர் தேக்கம். அதினுள் ஒரு உயிரோட்டமுள்ள மின்கம்பி. கடக்க முயன்றவர்களை பிள்ளைத்தாய்ச்சி நாய் ஒன்று பலமாக குரைத்து எச்சரித்ததை அந்த மாந்தர்கள் மதிக்கவில்லை. மனிதாபிமானத்துடன், அந்த மிருகம் தானே குதித்து ஆத்மதியாகம் செய்து, அவர்களை காப்பாற்றியது.  நன்றியுணர்வுடன், அந்த பேட்டை மக்கள் அந்த பிள்ளைத்தாய்ச்சி நாய் அநாதையாக விட்டுச்சென்ற நாய்குட்டிகளை தத்து எடுத்துக்கொண்டார்கள். இங்கு ‘இட்டார் பெரியோர்’ என்று பார்த்தால், அந்த பிள்ளைத்தாய்ச்சி நாய் தான் உயர் சாதி.  மெளலிவாக்கம் மாடிக்கட்டிடம் வீழ்ந்ததற்குக் காரணம், மனித நேயமற்ற மானிட மனப்பான்மை. புலன் பெயர்ந்து வந்த கூலிகளின் உற்ற தோழர்களாக வாழ்ந்த இரு தெரு நாய்களின் உத்தமபுருஷ தகுதியை சொல்லி மாளாது. போலீஸ் மோப்பநாய்கள் உண்மை ஊழியர்கள். இங்கிலாந்தில் ராணுவ மோப்பநாய்களுக்கு அபரிமித மரியாதை. இது நிற்க.
ஊடகங்கள் கேட்க மறந்த சில கேள்விகள்:
  1. உயிரோட்டமுள்ள மின்கம்பி அறுந்தது மின்சார துறைக்கு ஏன் தெரியவில்லை?
  2. அல்லது, தெரிந்தும் வாளாவிருந்தனரா?
  3. நாய் அபாயத்தைக் குறிக்கும்போது குரைக்கும் விதமே அலாதி. புத்தியுள்ள மாந்தருக்கு அது தெரியும். அப்படியானால், கடக்க விழைந்த மனித தெய்வங்களுக்கு புத்தியில்லையா?
  4. மின்கம்பி விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதா?
  5. அப்படியானால் என்ன முடிவு?
  6. இல்லையென்றால், ஏன்?
  7. நாய்க்குட்டிகளுக்கு அரசு மான்யம் கிடைக்குமா?
  8. ஆம் என்றால், அதை கண்காணிப்பார்களா?
  9. இல்லை என்றால், மனிதனுக்கு ஒரு விதியா? விலங்குகளுக்கு வேறு நடுவுநிலைமை ஒழிந்த சால்ஜாப்பு எப்படி நியாயப்படுத்தப்படும்?
என்னத்தைச் சொல்ல?

-#-


இன்னம்பூரான்
10 09  2014
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்

www.olitamizh.com

No comments:

Post a Comment