Saturday, October 4, 2014

சிரிச்சு மாளலெ ~ 12

சிரிச்சு மாளலெ ~ 12

இன்னம்பூரான்
05 10 2014
ஆனை தாண்டாபுரம் என்று ஒரு ஊர் இருக்கிறது. அதை பூனை தாண்டிடுத்து, ஒரே தாவலில்! பரைய்லி நேரு குடும்பசம்பந்தத்தினால் பிரபலமான ஊர். தச்சு வேலை நன்றாக செய்வார்கள். அங்கு ஒரு விந்தை நடந்தது. அகாடா எனப்படும் குஸ்தி மையத்தில் குஸ்தி, மல்லுக்கட்டு (wrestling) பயிற்சி எல்லாம் கனஜோரா நடக்கும். பஹல்வான் என்ற தூய ஹிந்தி பெயர் பயில்வான் என்ற தொன்மை தமிழ் பெயரிலிருந்து தான் வந்தது என்று நீங்கள் மல்லுக்கு நின்றால், நான் தள்ளி நிற்பேன். அத்தனை தகரியம், ஆம்பளையோல்லியோ ! ஸோனு பஹல்வான், ஸோனு பஹல்வான் அப்டின்னு ஒரு தடியாம்பளை. அனுபவம் ஜாஸ்தி, சீனியர் வேறே. அந்த குட்டியை விட 16 கேஜி வைட் அதிகம். அவங்கிட்ட போய் இவ மோதறா. ஹரியானா, ராஜஸ்தான், உத்தராக்காண்ட், மற்ற பல மாநிலங்களிலிருந்து ஜோகி நவாடா கோதாவிலே பல பயில்வான்கள் இறங்கறா. கும் கும்மாங்குத்து ! மக்களாரவாரம் விண்ணை எட்டியது என்று நினைத்தார்கள், அறியா பசங்க. 17 வயதான ருத்ராப்பூரிணி நேஹா தோமார் என்ற பெண் தடியாம்பளைங்களை கூவி அழைக்கிறாள், மல்லுக்கட்டுப் போட்டிக்கு. ஆம்பளைங்களாச்சே. பெண்புத்தி பின்புத்தி என்று அவளை இக்னோர் பண்றாங்க. தொல்லை தாங்காமல், அசட்டு சோனு பஹல்வான் ஒத்துக்கிறாரு. பத்து நிமிடங்களுக்குள், அந்த சாகசக்காரி, சோனு பஹல்வானை மண்ணை கவ்வ வைக்கிறாள். ‘ஆணுக்குப் பெண் சோடையில்லை’ என்பதை நிரூபிக்க வந்தேன் என்றாள் அந்த யெளவன மாது. மேலும் படிக்க:http://timesofindia.indiatimes.com/india/17-yr-old-girl-beats-male-wrestler-wins-hearts/articleshow/44370382.cms
-#-

No comments:

Post a Comment