Saturday, January 3, 2015

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:3

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:3



இன்னம்பூரான்
03 01 2015


குறிப்பு? யார், எப்போது, எங்கே, ஏன் என்றா கேட்கிறீர்கள்? ஊகிப்பதில் மன்னர்களும், ராணிகளும் வாழுமிடம் இது அல்லவோ?!
1.2.3....

கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

*

எல்லா கடிதங்களும் தனித்தமிழ் இலக்கியமாக அமைவதில்லை. அவற்றின் பொருள் காண்பது தான்  இவ்விடத்து இலக்கிய விசாரணை என்பது பீடிகையிலேயே சொல்லப்பட்டது. இன்று சற்றே வித்தியாசமான கடிதம், ஏ.ஜி. ஆபீஸ் லீவு லெட்டர் போல: “..pain all over the body...’ மாதிரி இருந்தாலும், எள்ளல் செய்யலாகாது, இதை.

*

மதிப்புள்ள வாத்தியாருக்கு...

நேத்து ராத்திரி

என்னோட அப்பாவை

யாரோ சாதிச்சண்டையிலே

அடிச்சுக் கொண்ணு எரிச்சிட்டாங்க;


அம்மா உடம்பு சரியில்லாம

தர்ம ஆஸ்பத்திரியிலே

படுத்துருக்காங்க.


வேலை தேடி

பட்டணம் போன அண்ணன்

இன்னமும் வீடு திரும்பல;

வயசுக்கு வந்த

என்னோட அக்காவையும்

நாலு நாளா காணலே

என்னோட டவுசர்

பின்பக்கம் கிளிஞ்சி போயிருச்சி

அதனால் ஐயா

இன்று நம் பள்ளியில்

நடை பெறும் சுதந்திர தினவிழாவில்

............

என்னால் வர முடியாது

இப்படிக்கு

உங்கள் கீழ்ப்படிந்துள்ள மாணவன்

கே.குப்புசாமி”


[இது என்னால் எழுதப்பட்டது இல்லை; இரவல்].


குப்புசாமிக்கு லீவு கொடுப்பீங்களா? இல்லையா?

ஒரு எளிய இலக்கிய விசாரணை: கடிதம் உங்களுக்கு சொல்லும் செய்தி என்ன?

-#-


சித்திரத்துக்கு நன்றி: https://www.manithan.com/contents/photos/post/thumbs/2013/10/shortfilm_001.w245.jpg





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com









இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment