Tuesday, July 14, 2015

நாளொரு பக்கம் 60

நாளொரு பக்கம் 60






இன்னம்பூரான்
ஏப்ரல் 22, 2015
சொல்லும் பொருளும் தான் மொழிக்கு மெருகு ஏற்றுபைவ. ‘நீர்’ என்ற சொல் தாகம் தணிக்கும் திராவகத்தையும் குறிக்கும்; உம்மையும் குறிக்கும். ஒரு சொல்லுக்கு இரு பொருள். பரம்பொருள், இைறவன், கடவுள், ெதய்வம் எல்லாம் ஒன்ேற. ஒரு பொருளுக்கு பல சொற்கள். கடவுள் ஒரு பொருளா என்பது ேவறு விஷயம். இது நிற்க.
சால்ஜாப்பு என்றதொரு சொல் தமிழில் உண்டு. அதற்கு ‘சாக்குபோக்கு’/ பொருத்தமற்ற சமாதானம் என்று அகராதி பொருள் கூறுகிறது. சவால்-ஜவாப் (வினா- விைட) என்ற ஹிந்தி சொல்லின் தமிழ் இறக்குமதி: சால்ஜாப்பு. நாம் தினந்தோறும் பல விஷயங்களுக்கு சமாதானம் சொல்கிறோம், பொருத்தமில்லாவிடினும். மகாகவி பாரதியாரின் ‘கண்ணன் என் ேசவகன்’ என்ற தத்துவப்பாட்டிலிருந்து சில வரிகள்”
'ஏனடா நீ ேநற்ைறக் கிங்குவர வில்ைல' ெயன்றால் பாைனயிேல ேதளிருந்து பல்லால் கடித்த ெதன்பார்;
வீட்டிேல ெபண்டாட்டி ேமற்பூதம் வந்தெதன்பார். பாட்டியார் ெசத்துவிட்ட பன்னிரண்டாம் நாெளன்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்...’
பொருத்தமான பொய் சொல்வது ெமத்த கடினம். ஒரு பொய்க்கு சால்ஜாப்புக் கட்ட பல பொய்கள் சொல்ல ேவண்டியிருக்கும். நம்பிக்ைக நீர்த்துப்போய்விடும். அதனால் தான் உலகப்புகழ்வாய்ந்த தத்துவ ஞானி ஆல்டோஸ் ஹக்ஸ்லீ கீழ்கண்டவாறு கூறினார்.
‘Several excuses are always less convincing than one. -Aldous Huxley, novelist (1894-1963)
*
Footnote: I have escaped today with one சால்ஜாப்பு !
சித்திரத்துக்கு நன்றி: http://comps.canstockphoto.com/can-stock-photo_csp16292953.jpg

இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment