Tuesday, April 19, 2016

இன்னம்பூரான் பக்கம் சுழலும் வட்டமேஜை

இன்னம்பூரான் பக்கம் 

சுழலும் வட்டமேஜை

Wednesday, April 20, 2016, 1:58

இன்னம்பூரான்.

பிரசுரம்: http://www.vallamai.com/?p=68165
இன்னம்பூரான் பக்கம் — சுழலும் வட்டமேஜை

சில நாட்கள் எழுந்தவுடன் நரிமுக தரிசனம் கிடைக்கும். அந்த நாட்களில் எல்லாம் அமோகமாக நடந்தேறும். இன்று நரிமுகம் என்னை வட்டமேஜைக்கு இழுத்துச் சென்றது. அதுவும் அது என்னுடைய மாஜி வட்டமேஜை. இன்று காலை, வழக்கம் போல் ‘ஆல் ஓவெர் சென்னை’ சுற்றாமல் தாம்பரம், சித்லபாக்கம், சேலையூர், கிரோம்பேட் என்று குண்டுசட்டியில் குதிரை ஓட்டியபோது அசாத்திய அனுபவங்கள் கிட்டின.
முதலில் அந்தமான் ‘கைதி’ கிருஷ்ணமூர்த்தி வசமாக நம்மிடம் சிக்கிக்கொண்டார். முனைவர் சதாசிவத்தை பார்க்கச் சென்றால், நெய்வேலி முரளி, சென்னை அரி (ஹரி அல்ல) பாபு புடைசூழ அமர்ந்திருந்த அந்தமானார் எம்மால் இற்செறிக்கப்பட்டார். ஜிலேபி, பழவகைகள், பசங்களோடு போட்டிப்போட்டுக்கொண்டு உண்டு, நான் மதிக்கும் சதாசிவத்தின் அன்னைக்கு வணக்கம், இல்லத்தரசிக்கு வாழ்த்துக்கள், சிறாருக்கு ஆசி கூறி, விடை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அத்தகைய புத்தகச்சுமையை தலையில் கட்டினார், அருமை நண்பர் சதாசிவம்; அந்தமானில் மாட்டிக்கொண்ட கம்பனும் கூட வந்தார்.
இந்த நால்வர் அணி பைலட் ஆக முன் ஆடி வர, (சுழல் விளக்குதான் இல்லை) யாவரும் கிருஷாங்கிணி வீட்டுக்குப் படை எடுத்தோம். எக்கச்சக்க வரவேற்பு. ‘சுழலும் வட்டமேஜை’ தரிசனம். அது பற்றிய திண்ணைக் கட்டுரை மறு வாசிப்பு. அரவக்கோன் ஓவியங்கள் மனதுக்கு ஆறுதல் அளித்தன. ஏன் தெரியுமா? வண்டி ப்ரேக்டெளன்.
அப்படியும் இப்படியும் கைபேசிகள் முணுமுணுத்த பின் மாற்று வண்டி பிடித்து, வீராங்கனை சீதாலக்ஷ்மி தரிசனம். அடேங்கப்பா! ராஜதர்பார் ஊஞ்சல். சீதாவை விட நல்லமாதிரி அவர்கள் தங்கை. உபசாரம் பலம். போனவிடம் எல்லாம் தண்ணீர்ப்பந்தல் தான், போங்கள். சீதாலக்ஷ்மியின் உறவினர்கள் விழுந்து கும்பிட்டார்கள். காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், ஜிப்பா!
ஒரு பாடாக தங்கை கமலா வீட்டுக்கு வந்து ஒரு தூக்கம் போட்டேன்.
இன்னம்பூரான்
ஏப்ரல் 17/19, 2016

சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment