Wednesday, November 16, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [2]





கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம்
[2]

இன்னம்பூரான்
17 11 2016

  1. அரவங்குறிச்சி வகையறா இடங்களில் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5000/- செல்லா நோட்டுகளில் கொடுப்பதாக சகல கட்சிகளும் தாராளமய கோட்பாட்டை கையில் எடுத்து உளராம் என்று தினமலர் செய்தி. நம்ம ஆளப்போகும் பிரதிநிதிகளின் இந்த ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ அணுகுமுறை விபரீதத்தில் முடியட்டும் என்று சித்தரின் சாபம்.
  2. கூகிளாண்டவரிடம் இந்தியாவிலிருந்து அதிகம் கேட்கப்பட்ட கேள்வி: “கறுப்புப்பணத்தை வெள்ளையாக்குவது எப்படி? நேர்மை கொழுந்துகளே! வணக்கம். 
  3. கர்நாடகா எம் எல் ஏ நாரயண்சாமி தலா மூன்று லக்ஷம் கொடுத்து, பெருமளவில் கல்லா கட்டுகிறாராம். இல்லை அது வங்கி அளித்த விவசாயக்கடன் வினியோகம் என்கிறார், அவர். அட! நாராயணா!
  4. நீண்ட காலமாக செயல்படாத ஒரு கோடி வங்கி கணக்குகளில் முடங்கி கிடக்கும் ரூ.2400 கோடி. விடுதலை இதழ் தலையங்கம்
  5. இதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் மட்டும் 86 லட்சம் கணக்குகள் முடங்கியுள்ளன. அவற்றில் ரூ.1900 கோடி பணம் உள்ளது. இதிலும் ஸ்டேட் பாங்க் குரூப் வங்கிகளில் மட்டும் பார்த்தால், 10 லட்சம் செயல்படாத கணக்குகளில் ரூ.233 கோடி முடங்கியுள்ளது. 
  6. தனியார் வங்கிகளில் 14 லட்சம் செயல் படாத கணக்குகளில் ரூ.233கோடிக்கும் அதிகமான பணம் முடங்கியுள்ளது. வெளி நாட்டு வங்கிகளில் 46,000 செயல்படாத கணக்குகளில் ரூ.69கோடி முடங்கியுள்ளது.
  7. Property developers are putting up a brave front on prices, but registration authorities report a sharp fall in revenue in leading real estate markets in Haryana, Uttar Pradesh, Karnataka, Telangana and Tamil Nadu in the first week after demonetisation. 17 11 2016
  8. Some small developers in Bengaluru, a segment that makes up an estimated 12 per cent of the market, have reportedly cashed in on the Centre’s decision, making sales in “old currency”, to be regularised using loans later. 17 11 2016
  9. மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து காணப்படுகிறது. டாலரின் மதிப்பு உயர்வுடன் துவங்கிய போதிலும்...இந்திய ரூபாய் மதிப்பு உயரத் துவங்கியது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ரூபாய் மதிப்பு 67.89 ஆக இருந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 67.94 ஆக இருந்தது.
  10. சிங்­கப்பூர் : ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், டி.சுப்­பாராவ், சிங்­கப்­பூரில், நிதித் துறை கருத்­த­ரங்கில் பேசி­ய­தா­வது: மத்­திய அரசு, கறுப்புப் பணத்தை கட்­டுப்­ப­டுத்த, 500, 1,000 ரூபாய் நோட்­டு­களை செல்­லா­த­வை­யாக அறி­வித்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. இதனால், மக்கள் படும் துயரம், தற்­கா­லி­க­மா­னது. ஆனால், இந்­ந­ட­வ­டிக்­கையால், நாட்­டிற்கு நீண்ட கால பயன்கள் கிட்டும். குறிப்­பாக, இந்­தி­யாவில் முத­லீ­டுகள் அதி­க­ரிக்கும்; விலை­வாசி உயர்வு கட்­டுக்குள் வரும்; பண­வீக்கம் மறைந்து, பண வாட்டம் என்ற நிலையை, நாடு சந்­திக்க நேரும். ரொக்க பரி­மாற்றம் குறைந்து, மின்­னணு வாயி­லான பணப் பரி­மாற்றம் அதி­க­ரிக்கும். இந்­தியா, ரொக்கப் பொரு­ளா­தாரம் சார்ந்த நாடு என்ற நிலையில் இருந்து, குறை­வான ரொக்கப் பரி­மாற்றம் உள்ள நாடு என்ற சிறப்பை பெறும். இவ்­வாறு அவர் கூறினார்.

பின்குறிப்பு: சில குமுகங்களில் எழுதுபவர்களில் பலரும், அங்கெல்லாமும், என் வலைப்பூவிலும் என்னுடைய வாசகர்களில் பலரும் இந்திய பிரஜையாக இல்லாமல் இருக்கலாம். அவர்கள் இந்திய நாட்டின் மேலாண்மையை (sovereignty) மதிப்பாதவர்களாகவும், இந்தியாவில் தற்காலம் நடக்கும் நிகழ்வுகளை துச்சமாக கருதபவர்களும் இருக்கலாம். தீவிரம் புரியாமல் எள்ளி நகையாடுவதிலும் ஞானஸ்நானம், விதண்டாவாதம் செய்பவர்களாகவும், வதந்தி காதலர்களாகவும் இருக்கலாம். அத்தகைய உத்தமபுத்திரர்கள் இந்தியாவிலிருந்தே குட்டை குழப்பலாம். அவர்களை நான் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. புறக்கணிக்கிறேன். பொருட்படுத்தவில்லை. சில குமுகங்கள் நான் எழுதுவதை மட்டுறுத்தலாம். I don’t care.
இன்னம்பூரான்
17 11 2016

[தொடரும்]
சித்திரத்துக்கு நன்றி:






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment